குளுகுளு சீஸனில் தென்காசி – புனலூர் சுற்றுலா ரயில் விட கோரிக்கை!

railway news - 2026
#image_title

தென்காசி – புனலூர் இடையே முற்றிலும் விஸ்டாடோம் பெட்டிகளடங்கிய சுற்றுலா ரயிலை குற்றால சீசன் காலத்தில் இயக்க வேண்டி செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே அமைச்சர் உள்ளிட்டோருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்ததாவது…

தென்காசி – புனலூர் இடையில் தினசரி விஸ்டாடோம் கண்ணாடி மேற்கூரை உள்ள சுற்றுலா ரயில் இயக்க கோரிக்கை விடுத்துள்ளோம். செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் இன்ஜினியர் முரளி செயலாளர் கிருஷ்ணன் உபதலைவர் ராஜேந்திரராவ் ஆகியோர் தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமேலாளர், ரயில்வே அமைச்சருக்கு 2019லேயே கடிதம் அனுப்பி வேண்டுகோள் வைத்தோம்.

அதில், ஜுன் மாதத்தில் குளுகுளு குற்றால சீசன் தொடங்குகிறது. லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை நோக்கி விரைவார்கள். இந்த சுற்றுலா பயணிகள் செங்கோட்டை புனலூர் ரயில் பாதையில் அமைந்துள்ள இயற்கைக் காட்சிகள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் வண்ணமிகு தோற்றங்களையும் பல குகைகளையும் கண்டு மகிழும் வண்ணம் தெற்கு ரயில்வே கண்ணாடி மேற்கூரை உள்ள சுற்றுலாவிற்கென வடிவமைக்கப்பட்ட விஸ்டாடோம் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட ஷட்டில் ரயிலை தினமும் தென்காசியிலிருந்து புனலூர் வரை இயக்க வேண்டும்.

தினமும் இரண்டு முறை தென்காசி மற்றும் புனலூரிலிருந்து இந்த ரயில்கள் ஜூன் தொடங்கி நவம்பர் வரை இயங்க வேண்டும். நீலகிரி மலை ரயில் போல இந்த ரயிலும் மிக்க புகழ் பெறும்… என்று குறிப்பிட்டிருந்தனர். தற்போது, ஜூன் மாதம் குற்றால சீஸன் தொடங்கவுள்ள நிலையில், மீண்டும் தங்கள் கோரிக்கையை அதிகாரிகளிடம் முன் வைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories