December 6, 2025, 12:16 AM
26 C
Chennai

IPL 2025: கவனம் ஈர்த்த குஜராத் அணியின் அபார ஆட்டமும் வெற்றியும்!

ipl 2025 games - 2025

ஐ.பி.எல் 2025 – குஜராத் vs ஹைதராபாத் – அகமதாபாத் – 02.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

குஜராத் டைடன்ஸ் அணி (224/6, ஷுப்மன் கில் 76, ஜாஸ் பட்லர் 64, சாய் சுதர்ஷன் 48, வாஷிங்டன் சுந்தர் 21, உனத்கட் 3/35, பாட் கம்மின்ஸ் 1/40, சீஷன் அன்சாரி 1/42) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (186/6, அபிஷேக் ஷர்மா 74, ஹென்றி கிளாசன் 23, நிதீஷ் குமார் ரெட்டி ஆட்டமிழக்காமல் 21, ட்ராவிஸ் ஹெட் 20, பாட் கம்மின்ஸ் ஆட்டமிழக்காமல் 19, சிராஜ் 2/33, பிரசிட் கிருஷ்ணா 2/19, இஷாந்த் ஷர்மா 1/35, ஜெரால்ட் 1/36) 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் குஜராத் டைடன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (23 பந்துகளில் 48 ரன், 9 ஃபோர்) மற்றும் ஷுப்மன் கில் (38 பந்துகளில் 76 ரன், 10 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் மிகச் சிறப்பான தொடக்கம் தந்தனர்.

பவர் பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் குஜராத் அணி விக்கட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்தனர். ஏழாவது ஓவரில் சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்தபோது ஜாஸ் பட்லர் (37 பந்துகளில் 64 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) ஷுப்மன் கில்லுடன் இணைந்து அணியின் ஸ்கோரை கிடுகிடுவென்று உயர்த்தினர்.

அதன் பின் வந்தவர்களான வாஷிங்டன் சுந்தர் (16 பந்துகளில் 21, 1 சிக்சர்), ஷாருக் கான் (6 ரன்), ராகுல் திவாத்தியா (6 ரன்), ரஷீத் கான் (பூஜ்யம் ரன்) ஆகியோர் குறைந்த பந்துகளில் வேகமாக ரன் அடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது.

          வெற்றிக்கு 225 ரன்கள் தேவை என்ற இலக்கோடு இரண்டாவதாக விளையாடவந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (16 பந்துகளில் 20 ரன், 4 ஃபோர்) மற்றும் அபிஷேக் ஷர்மா (41 பந்துகளில் 72, 4 ஃபோர், 6 சிக்சர்) இருவரும் சுமாரான தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதாகக் களமிறங்கிய இஷான் கிஷன் (17 பந்துகளில் 13 ரன்), ஹென்றி கிளாசன் (18 பந்துகளில் 23 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) அனிகேத் வர்மா (7 பந்துகளில் 3 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (10 பந்துகளில் 21 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்), கமிந்து மெண்டிஸ் (பூஜ்யம் ரன்), பாட் கம்மின்ஸ் (10 பந்துகளில் 19 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் எவ்வளவோ முயன்றும் 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.   

image - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories