திருவள்ளுவரைத் திருடும் திராவிடம்!

thiruvalluvar
thiruvalluvar

திருவள்ளுவரும் திருக்குறளும் தங்களுக்கே சொந்தம் என்பது போன்ற மனோபாவம் திமுகவினரிடம் உள்ளது.

அதிலும், முதல்வர் எதைச் சொன்னாலும் யோசிக்காமல் கை தட்டும் ஒரு கூட்டம் இருப்பதால், மனம் போனபடி பேசுகிறார் அவர்.

‘ ஆரியத்தில் சொந்தம் கொண்டாட யாரும் இல்லாததால், வள்ளுவருக்கு காவியடித்து திருடப் பார்க்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள் ‘ என்பது அவரது இன்றைய பேச்சு. அதாவது, பாஜகவினர் திருவள்ளுவரை திராவிடத்திடமிருந்து அபகரிக்கிறார்கள் என்பது அவர் கருத்து.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த திருவள்ளுவர் என்ன உடை அணிந்தார் என்று யாருக்கும் தெரியாது.

ஆனால், திருக்குறள் முற்றிலுமாக அவரது ஆன்மீக சிந்தனையை பிரதிபலிக்கிறது. அதிலும் ஹிந்து மதக் கருத்துகளைப் பிரதிபலிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான திருக்குறள்கள் உள்ளன.

இவ்வுலகம், அவ்வுலகம், மண்ணுலகம், விண்ணுலகம் என்று பல குறள்களில் இடம் பெற்றுள்ளது. சனாதனத்தின் பெருமையையும் பல குறள்கள் உணர்த்துகின்றன.

துறவு மனப்பான்மை உடைய ஒரு ஹிந்து முனிவரைப் போன்ற தெய்வீக சிந்தனைகளை அவர் பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளதால், அவரை ஹிந்து துறவியாக நினைப்பதில் ஒரு தவறும் இல்லை.

திருக்குறளுக்கு மதம் இல்லை.திருவள்ளுவருக்கு மதம் உண்டு.

காவி என்பது பாஜகவின் நிறம் அல்ல. அது துறவு மனப்பான்மையை பிரதிபலிக்கும் நிறம். எனவே, காவி உடையை அவருக்கு அணிவித்து மகிழ்வது ஆன்மீகவாதிகளின் உரிமை. உடையின் நிறத்தால் அவரது பெருமை குறைந்து விடாது.

சொந்தம் கொண்டாட யாரும் இல்லாததால் திருவள்ளுவரை நாம் போற்றவில்லை . ஆன்மீகத்தை போதித்த ஆரியர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், அவர்களில் திருவள்ளுவர் முன் வரிசையில் இருப்பவர் என்பதால்தான் அவர் அதிகம் போற்றப்படுகிறார்.

இதைத்தான்

‘ திருவள்ளுவரைத் திருடப் பார்க்கிறது ஆரியக் கூட்டம்’ என்கிறார் திமுக தலைவர்.

‘ திருவள்ளுவர் ஆரியக் கைக்கூலி. திருக்குறள் மூட நம்பிக்கைக் களஞ்சியம்’ என்று பிதற்றிய ஈ.வெ.ரா.வின் வழியில் நடக்கும் திமுகவினரை விட மற்றவர்களுக்கு திருக்குறளையும் திருவள்ளுவரையும் சொந்தம் கொண்டாட அதிக உரிமை இருக்கிறது.

திருவள்ளுவரும், திருக்குறளும் பொதுச் சொத்து. உரை எழுதியவர்கள் என்பதாலேயே சொத்தின் உரிமையாளராக முடியாது. யாரும் யாரிடமிருந்தும் இச்சொத்தைத் திருட முடியாது.

முதல்வரின் கருத்து பொருளற்றது.

  • ‘துக்ளக்’ சத்யா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories