December 5, 2025, 1:47 PM
26.9 C
Chennai

திருவள்ளுவரைத் திருடும் திராவிடம்!

thiruvalluvar
thiruvalluvar

திருவள்ளுவரும் திருக்குறளும் தங்களுக்கே சொந்தம் என்பது போன்ற மனோபாவம் திமுகவினரிடம் உள்ளது.

அதிலும், முதல்வர் எதைச் சொன்னாலும் யோசிக்காமல் கை தட்டும் ஒரு கூட்டம் இருப்பதால், மனம் போனபடி பேசுகிறார் அவர்.

‘ ஆரியத்தில் சொந்தம் கொண்டாட யாரும் இல்லாததால், வள்ளுவருக்கு காவியடித்து திருடப் பார்க்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள் ‘ என்பது அவரது இன்றைய பேச்சு. அதாவது, பாஜகவினர் திருவள்ளுவரை திராவிடத்திடமிருந்து அபகரிக்கிறார்கள் என்பது அவர் கருத்து.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த திருவள்ளுவர் என்ன உடை அணிந்தார் என்று யாருக்கும் தெரியாது.

ஆனால், திருக்குறள் முற்றிலுமாக அவரது ஆன்மீக சிந்தனையை பிரதிபலிக்கிறது. அதிலும் ஹிந்து மதக் கருத்துகளைப் பிரதிபலிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான திருக்குறள்கள் உள்ளன.

இவ்வுலகம், அவ்வுலகம், மண்ணுலகம், விண்ணுலகம் என்று பல குறள்களில் இடம் பெற்றுள்ளது. சனாதனத்தின் பெருமையையும் பல குறள்கள் உணர்த்துகின்றன.

துறவு மனப்பான்மை உடைய ஒரு ஹிந்து முனிவரைப் போன்ற தெய்வீக சிந்தனைகளை அவர் பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளதால், அவரை ஹிந்து துறவியாக நினைப்பதில் ஒரு தவறும் இல்லை.

திருக்குறளுக்கு மதம் இல்லை.திருவள்ளுவருக்கு மதம் உண்டு.

காவி என்பது பாஜகவின் நிறம் அல்ல. அது துறவு மனப்பான்மையை பிரதிபலிக்கும் நிறம். எனவே, காவி உடையை அவருக்கு அணிவித்து மகிழ்வது ஆன்மீகவாதிகளின் உரிமை. உடையின் நிறத்தால் அவரது பெருமை குறைந்து விடாது.

சொந்தம் கொண்டாட யாரும் இல்லாததால் திருவள்ளுவரை நாம் போற்றவில்லை . ஆன்மீகத்தை போதித்த ஆரியர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், அவர்களில் திருவள்ளுவர் முன் வரிசையில் இருப்பவர் என்பதால்தான் அவர் அதிகம் போற்றப்படுகிறார்.

இதைத்தான்

‘ திருவள்ளுவரைத் திருடப் பார்க்கிறது ஆரியக் கூட்டம்’ என்கிறார் திமுக தலைவர்.

‘ திருவள்ளுவர் ஆரியக் கைக்கூலி. திருக்குறள் மூட நம்பிக்கைக் களஞ்சியம்’ என்று பிதற்றிய ஈ.வெ.ரா.வின் வழியில் நடக்கும் திமுகவினரை விட மற்றவர்களுக்கு திருக்குறளையும் திருவள்ளுவரையும் சொந்தம் கொண்டாட அதிக உரிமை இருக்கிறது.

திருவள்ளுவரும், திருக்குறளும் பொதுச் சொத்து. உரை எழுதியவர்கள் என்பதாலேயே சொத்தின் உரிமையாளராக முடியாது. யாரும் யாரிடமிருந்தும் இச்சொத்தைத் திருட முடியாது.

முதல்வரின் கருத்து பொருளற்றது.

  • ‘துக்ளக்’ சத்யா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories