December 5, 2025, 1:43 AM
24.5 C
Chennai

தவிக்க விடும் அமெரிக்கா தனிமைப்படுகிறதா?

modi and trump - 2025
#image_title-
  • முரு. தெய்வசிகாமணி

இந்திய அமெரிக்க டாரிஃப் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் நடைபெற்றுவருகிறது. அது நீண்டுகொண்டே செல்கிறது. சீனாவிற்கு 50% வரி விதித்து கடைசியில் 10% வரிக்கு ஒத்துக்கொண்டது அமெரிக்கா.

காரணம் 50% வரி விதித்தால் அமெரிக்காவில் பல அன்றாட அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது சீனா, கடுமையான வரி விதித்தால் அந்த விலை உயர்வு பொருட்களில் விலை அதிகரித்து அது இன்ஃப்ளேஷனில் போய் அமெரிக்கர்களுக்கு பெரும் சுமையாக முடியும், அது அமெரிகாவிற்கும் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும்..

அதுபோல இந்தியாவிற்கும் வரியை குறைத்துதான் ஆக வேண்டும். ஆனால் இந்தியாவிடம் இருந்து வாங்கும் பொருட்கள் சீனப்பொருட்கள் அளவிற்கு நேரடியாக அன்றாட வாழ்வின் விலை உயர்வுக்கு காரணமாகாது என்பதால் சீனாவின் வரியை விட அதிகமாக இருக்கவே வாய்ப்புண்டு.

குறிப்பாக மருந்து பொருட்கள், மற்றும் IT Related Services என்பது மிக முக்கியமானது. அமெரிக்காவின் வரி விதிப்பில் இவை இரண்டும் தவிர்க்கப்படலாம் என்றால் மற்றவைகளுக்கு வரியை உயர்த்த வாய்ப்புகள் உண்டு

அது சீனாவின் வரியை விட அதிகமாக இருக்கலாம். அதற்கு காரணம் என்ன? கொஞ்சம் வரலாறு தேவை!?

சீனா ஆரம்பத்தில் கம்யூனிஷ்ட் நாடாகவும், ரஷ்யாவின் தோழராகவும் இருந்தது. பின்பு அது ரஷ்ய எதிர்ப்பு நிலை காரணமாக அமெரிக்க நண்பரானது. அதன் பின்னர் அமெரிக்காவின் பல உதவிகள் சீனாவின் பொருளாதாரத்தை பெருமளவில் உயர்த்தியது. அதே சமயம் ஜப்பானின் ஆதிக்கத்தை குறைக்க சீனா உதவியது.

சீனாவின் பொருளாதாரம் புதிய, பெரிய உயரம் தொட்டபின்னர் அதற்கு வல்லரசு ஆகும் ஆசை வந்தது, அதனால் ஜிங்பின் வந்த பின்னர், அதற்கான முன்னெடுப்புகளால் அமெரிகாவிற்கு எதிராக கம்பி கட்ட, அதற்கு ரஷ்யாவின் ஆதரவு தேவைப்பட்டது. அதன் விளைவாக சீனா ரஷ்யாவின் தோழராகி, மீண்டும் அமெரிக்காவின் எதிரியாக மாறியது.

சீனாவின் சார்பு நிலை கோவிட் சமயத்தில் பெரிய தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதும், அதன் வல்லரசு கனவுக்கு முடிவுகட்ட அதன் சார்பை குறைக்க இந்தியா உற்பட மாற்று நாடுகளில் உற்பதேதி, மற்றும் இறக்குமதியை அமெரிக்கா அதிகரித்தது.

அதே சமயம் சீனாவின் ராணுவ வலிமையால் அதை சமன் செய்ய இந்தியாவின் ஆதரவு தேவைப்பட்டது. அதனால் இந்தியாவிடம் நெருங்கிய அமெரிக்கா பல சலுகைகளை கொடுத்தது. மேலும் சீனாவுடன் ஒரு போரை இந்தியா மீதி திணிக்க அமெரிக்க செய்த முயற்சித்தது.

காரணம் சீன நவீன ஆயுதங்கள் இதுவரை போரில் பயன்படுத்தாதால் அதுபற்றிய ஒரு மதிப்பீட்டிற்குகும், இரண்டு நாடுகளும் அடுத்த வல்லரசுக்கான பொட்டென்ஷியல் இருப்பதால், இந்திய-சீனப்போர் இரு நாடுகளின் பொருளாதாரற்றை வீழ்த்திவிடும் என்பதால் அதற்கான வல்லரசு போட்டி கனவாவிவிடும் என்ற அமெரிக்க கனவு பலிக்கவில்லை.

இந்த நிலையில் இந்தியாவின் ரஷ்ய ஆதரவு என்பது சீனாவின் ஆதரவை விட அதற்கு போரில் பாதிக்கப்பட்ட அதன் பொருளாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கிறது என்பதால் இப்பொழுது இந்தியாவின் மீது அதன் கோபம் திரும்பியது. ஆனாலும் சீனாவின் நெருக்கடியால் இந்தியாவை சார்ந்திருக்க வேண்டுய சூழல் தொடர்ந்தது.

இந்த நிலையில் இந்திய – பாகிஸ்தானின் 88 மணி நேர போரில், பாகிஸ்தான் என்பது கருவியே, அதில் பயன்படுத்தப்பட்ட 81% ஆயுதங்கள் சீனாவின் ஆயுதங்களே. அமெரிகக போல சீனாவும் இந்தியாவிடம் நேரடியாக் போர் செய்யாமால் அனைத்து ஆயுத உதவிகளை செய்து பாகிஸ்தான் மூலம் இந்தியாவிடன் போர் செய்தது.

சீனாவின் சேட்டிலைட் இமேஜ் முதல், ஹை-ஸ்பீட் நெட்வொர்க் மூலம் சீனா பாகிஸ்தானுக்காக தென்மேற்கு எல்லையில், இந்தியாவுடன் போர் செய்தது. அதனுடன் துருக்கியும் சேர்ந்து செய்த போர் எல்லாவற்றையும் இந்தியா தவிடுபொடி ஆக்கிவிட்டது.

அதன் பின்னால் அமெரிக்காவும் பாகிஸ்தானுக்கு வேறு விதமாக உதவி வந்த நிலையில், நூர்ஹானில் அமெரிக்காவின் பாதுகாப்பில் இருந்த அணு ஆயுதங்களை இந்தியா தாக்கியதால் பாகிஸ்தான் சரணடைய வேண்டிவந்தது.

இதில் சீனாவின் ஆயுதங்கள் மீண்டும் தரமில்லாதவை என்று நிரூபிக்கப்பட்டதால், அதன் பிரஸிடெண்ட் ஜிங்பின் தலைமை ஆட்டம் கண்டுவிட்டது. ஜிண்டா அவர் இடத்திற்கு முன்னேறியதால் இப்போது சீனா, தனது பெரிய பொருளாதார வீழ்ச்சியை தற்காத்துக்கொள்ள மீண்டும் அமெரிக்க சார்பு நிலையை நோக்கி நகர்கிறது.

அதன் விளைவாகவே சீனா மீதான வரி விதிப்புகள் 10% ஆக குறைந்துவிட்டது. அதாவது சீனா மீண்டும் அமெரிக்காவின் நட்பு நாடாகிவிட்டதா என்றால், அமெரிக்காவிற்கு அப்போதைய தேவைக்கு ( Need basis) யார் உதவுகிறார்களோ அவர்கள் நண்பர்கள், அது முடிந்ததும் டீலும் முடிந்துவிடும்.

ஐரோப்பிய யூனியனும், நேட்டோ நாடுஜளும் அப்பட்டிப்பட்ட தேவையை அடிப்படையாக கொண்டவையே. இருந்தாலும் அமெரிக்காவின் சுய நலம் என்று வரும்போது யாரையும் பலிகொடுக்க அமெரிக்கா தயங்காது.

இந்த நிலையில் ட்ரம்பின் இந்தியாவில் முதலீட்டை செய்ய வேண்டாம் என்ற எச்சரிக்கைகளை ஆப்பிள் நிறுவனமோ, மற்ற சில நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் விற்பனையை தொடங்கி, அதன் உற்பத்தியை தொடங்கும் வாய்ப்புண்டு. அது ட்ரம், எலன் ம்ஃஸ்க் அவர்களுக்கி இடையே உள்ள சண்டையில் யார் பெரியவர் என்ற யுத்தத்தில், ட்ரம்பை வீழ்த்த எலன் மஸ்க் எதிர் திசையில் பயணிக்கலாம்.

ட்ரம்பின் வினேச கால விபரீத புத்தி என்பது அமெரிக்க தொழில்களின் நீண்டகால திட்டமிடலுக்கு எதிராக இருப்பதாலும், BRICS மூலம் அதன் வல்லரசு ஆளுமை வீழ்வதாலும், அமெரிக்காவில் இருக்கும் பல நிறுவனங்களுக்கு, தொழில் செய்ய இந்தியா உகந்த நாடாக இப்போது பார்க்கப்படுகிறது. அதன் விளைவிளைவாக அவை இந்தியாவில் உற்பத்தியை ஆரம்பிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

குறிப்பாக இந்தியாவின் தேஜஸ் விமானத்தின் டிமாண்டை அதிகரிப்பதை கட்டுப்படுத்த. GE நிறுவனத்தின் எஞ்சின் ஏற்றுமதியை நிறுத்தியது பைடன் அரசு. அது ட்ரம்ப் ஆட்சியில் மாறும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்ததால், அதன் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டது. அதனால் தேஜஸ் விமானங்களை வாங்க முன்வந்த நாடுகள் பின்வாங்கியது.

அது G& E க்கும் நீண்ட்கால விற்பனை ஒப்பந்தத்தை பாழாக்கியதால் அதன் எதிர்காலம் அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் கை நழுவுகிறது. முன்பு தேஜசின் எல்லா விமானங்களுக்கும் எஞ்சின் தர செய்த ஒப்பந்தம் சரி வராததால், இப்போது இந்தியா தனது போர் விமான உற்பத்திக்கு மாற்று எஞ்சின்களை பார்க்க துவங்கிவிட்டது.

இந்தியா 850 போயிங் விமான ஆர்டரை கொடுத்துள்ளது. அதில் இந்தியாவில் உற்பத்தி செய்யும் ஒப்பந்தம் டாடாவுடன் இணைந்து செய்ய திட்டமிடல்கள் உள்ளது. தற்போது ஏர் இந்தியா விமான விபத்து ஏற்கனவே நலிந்த நிலையில் இருக்கும் போயிங்கை மேலும் பலவீனப்படுதியதால், அதை மறைக்க அமெரிக்கா பைலட் மீது தவறு என்று திசைதிருப்ப முயற்சிக்கிறது, அதை இந்தியா ஏற்கவில்லை. அது தவறு என்று நிரூபிக்கப்பட்டால் போயிங்கின் எதிர்காலம் மேலும் கவலைக்குரியதாகிவிடும்.

இந்த நிலையில் அமெரிக்காவின் ஆயுத வலிமை கூட கேள்விக்குரியாகி வருகிறது. அதன் மிகப்பெரிய பாதுகாப்பு, பாகிஸ்தானில் அதன் அணு ஆயுதங்களை இந்தியாவிடம் இருந்து பாதுகாக்க முடியவில்லை என்றால், அதன்ப்ளாகசிஃப் F-16 ஐ இந்தியா அடித்து நொறுக்கியதால் அதன் புதிய ஆர்டர்கள் பெருமளவில் சரிந்துள்ளது.

மேலும் அமெரிக்காவின் எந்த நாடுகள் BRICS ல் சேர்ந்தாலும் 500% வரி விதிப்போம் என்ற எச்சரிக்கையை மீறி 5 நாடுகள் BRICS ல் சேர்ந்துள்ளது. இப்பொழுது மேலும் 10 பார்ட்னர்கள் சேர்ந்து அமெரிகாவின் சட்டாம்பிள்ளைத்தனத்தை கண்டுகொள்ளவில்லை.

அதில் அமெரிக்காவின் மிக முக்கிய பார்ட்னரான மெக்ஸிகோவும் உண்டு என்பது அமெரிக்க ஆதிக்கம் முடிவுக்கு வருவதையே காட்டுகிறது! அதன் விளைவாக அமெரிக்க டாலரின் ஆதிக்கம் வேகமாக வீழ்ச்சியை சந்திக்கும் நேரம் வந்துள்ளது.

இப்படி பல விஷயங்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து கைநழுவி போவதால், அமெரிக்கா தற்போது சீனாவை மீண்டும் நண்பனாக்கி, இந்தியாவின் மீது வ்ரி விதிப்பு மூலம் அதன் வளர்ச்சியை தடுக்க நினைக்கும். அது உடனே நடக்காவிட்டாலும், அடுத்தடுத்த புதிய காரணங்களை காட்டி இந்தியா மீது மரி விதிக்கக்கூடும்.

ஆனால் அதன் வரி விதிப்புகள் இந்தியாவிற்கு தற்காலிக தொய்வுகளை கொடுத்தாலும், நீண்டகால நோக்கில் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்சினையாகலாம். பல அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்படும், அவற்றில் சில எதிர்கால வல்லரசு மற்றும் மிக முக்கிய சந்தை என்ற எதிர்பார்ப்பில் இந்தியாவிற்கு அதன் தொழிற்சாலைகளை நகர்த்தலாம் இல்லாவிஇல் அங்கேயே போயிங் போல வீழலாம்.

அதற்கு மிக முக்கிய காரணம் ட்ரம்பாகவும் இருக்க வாய்ப்புகள் கண்முன்னே தெரிகிறது. தேர்தலுக்கு முன்பு இருந்த அவரின் நிலைப்பாடுகள் அவரின் அவசர புத்தியாலும், டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்காவாலும் மீண்டும் குழப்பத்தில் நிறுத்தி, அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியைக்கூட கொடுக்க வாய்ப்புண்டு.

குறிப்பாக இந்தியர்களுக்கு விசா மற்றும், குடியுரிமை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு நிலையில்லாத போக்கை ஏற்படுத்தி வருவதால், இந்தியர்களின் அமெரிக்க முதலீடுகள் வெகுவாக குறைய வாய்ப்புண்டு.

குறிப்பாக சமீபத்தில் போட்டிருக்கும் வெளிநாட்டவர்கள் மீது போடப்பட்ட புதிய வரிவிதிப்பால், இந்தியர்கள் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது. அதன் முதல் பாதிப்பு ரியல் முதலீடுகளை நம்மவர்கள் குறைப்பதால் எஸ்டேட்டை பெரியளவில் பாதிக்கலாம்.

இதில் இன்னொரு சிக்கல், சீனா நீண்டகால நோக்கில் BRICS இருந்து விலகி தற்காலிக சர்வைவலுக்கு மீண்டும் அமெரிக்காவிடம் செல்வதால் அதற்கு மேலும் சிக்கல்கள் எழக்கூடும்.

இந்த பார்வையில் பல Its & buts இருக்கிறது. அமெரிக்காவிடம் பல இயற்கை வளங்கள் இருந்தாலும், அதன் எதேச்சிகார போக்கால், அது தனிமைப்படுவதை உணர்கிறோம். அதற்கு மாறாக ஐரோப்பிய நாடுகள் உற்பட பல நாடுகளுடன் இந்தியா செய்து வரும் ஒப்பந்தம், இந்தியாவின் தற்காலிக வீழ்ச்சையை குறைக்கவும், அமெரிக்காவின் வீழ்ச்சியை துரிதப்படுத்தவும் செய்யலாம்.

எனவே உலகில் மூன்றாம் உலகப்போருக்கான ஆயுதப்போரைவிட பொருளாதார போர் பெருமளசில் உலக நாடுகளை பாதிகும்.

ஏற்கனவே AI போன்ற வளர்ச்சியால் பாதிக்கப்ப IT துறை பெருமளவில் வேலை வேய்ப்பு இழப்புகளை சந்திக்க நேரிடும். அவை நிறுவனங்களுக்கு இழப்பை கொடுக்க வாய்ப்புகள் குறைவு. ஆனால் வேலை வாய்ப்புகள் சரிவை சந்திக்கும்.

அவற்றை சமன் செய்ய, அவர்களை எப்படி இந்தியா சாதிக்கப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories