இந்தியர்களுக்கு ட்ரம்ப் எடுத்த பாடம்!

donald trump - 2026

ட்ரம்ப் சரி! நாம தான் தப்பு!

கூகுள் சி இ ஓ யார் தெரியுமா?
மைக்ரோசாஃப்ட், யூட்யூப், ஃபெட் எக்ஸ், அடோப், ஐபிஎம், அட அவ்வளவு ஏங்க வேர்ல்டு பேங்க் சி இ ஓ வே இந்தியன் தான். நாம இல்லாம அமெரிக்காவே நகராது….
இல்லையா?
இல்லை.

மேலே சொன்ன அத்தனை கம்பெனிகளுக்கும் ஓனர் யாரு? அமெரிக்கன்ஸ்…
நாம யாரு? லேபரரூ…
என்ன வித்யாசம்?
நம்ம அம்மா அப்பா நம்மள என்ன சொல்லி வளர்த்தார்கள்? நல்லா படி மகனே/மகளே நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போயி கை நிறைய சம்பாதிச்சு நிம்மதியா வாழணும்.

எந்த ரிஸ்க்கும் இல்லாம, நல்ல வேலையில் சேர்ந்து மாசமாசம் நல்ல சம்பளம் வாங்கணும். அவ்வளவு ஏன், நல்ல மாப்பிள்ளைங்க, நல்ல கம்பெனியில வேலை பார்க்கிறார். நிரந்தர வேலை. தைரியமா பொண்ணைக் கொடுக்கலாம்.
காக்காசா இருந்தாலும் கவர்மெண்ட் காசா இருக்கோணும்.
எந்தப் பெற்றவர்களும் தொழில் தொடங்கு, நிர்வாகம் செய்னு சொன்னதே இல்லை.

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அமெரிக்கன்ஸ் / ஐரோப்பியன்ஸின் பலமே மேனேஜ்மெண்ட்ல ஸ்ட்ராங்காக இருப்பது தான். ”பால் கெட்டி” என்ற முன்னாள் கோடீஸ்வரரை நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும் ராக் பெல்லர் மாதிரியான பெரிய தொழிலதிபர். அவருடைய அப்பாவும் பெரிய தொழிலதிபர் தான். வருடத்திற்கு சில நூறு டாலர்கள் மட்டுமே கொடுப்பாராம். இதை வைத்து தொழில் செய்து பிழைத்துக் கொள். இதுவும் ஒருசில ஆண்டுகளுக்கு மட்டுமே கொடுப்பேன். பிழைத்தால் பிழைத்துக் கொள் இல்லையென்றால் அப்படியே ஓடிடுனு சொல்லியிருக்கார்.

அந்தக் காலத்தில் சில நூறு டாலர் என்பது பெரிய விசயம் தான். நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? ஒரு ஹோட்டலோ, டிபார்ட்மெண்ட் ஸ்டோரோ ஆரம்பித்திருப்போம். பால்கெட்டி என்ன செய்தார் என்றால், வளைகுடா நாடுகளுக்குச் சென்று இருக்கும் காசையெல்லாம் வைத்து எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டினார். இரண்டு வருடங்களாக ஒவ்வொரு முயற்சியும் தோல்வி. எனினும் ரிஸ்க் எடுத்து கடைசியில் உலகத்தின் முதல் மூன்று கோடீஸ்வரர்களில் ஒருவரானார்.

இன்றைக்கும் நம் மக்கள் என்ன செய்கிறோம்? ஐடி / கம்.சைன்ஸ்/மெக்.எஞ்சினியர் என்று வேலைக்குப் போகும் மனநிலையிலேயே படிப்பைத் தேர்ந்தெடுக்கிறோம்.

ALSO READ:  தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

குறைந்தபட்சம் கல்லூரியிலிருந்தாவது மேனேஜ்மெண்ட் படிப்பினை விரும்பிப் படிக்கிறோமா? கடனுக்கு எம்பிஏ பட்டம் வாங்கிட்டு அதைக் காட்டி ஒரு ப்ரமோஷன் வாங்கிக்கிறோம்.

இன்றைக்கு நாம இல்லாட்டி அமெரிக்கா இல்லைனு நாமளா கற்பனை பண்ணிக்கிறோம். நாம இல்லாட்டி, இந்தோனேசியா, வியட்நாம், மெக்ஸிகோ, ப்ரெஸில், நைஜீரியா, எத்யோப்பியா போன்ற நாடுகளிலிருந்து ஆட்களைத் தூக்கிட்டு வந்து ட்ரெய்ன் பண்ணி தொழிலை நடத்திக் கொள்வான். நாம தான் அங்கே வேலை போனதும், ஏய்.. இந்திய அரசே! வேலை கொடுக்க வக்கில்லையா? எங்கள் அறிவை பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் இல்லையா என்று வெட்கமே இல்லாமல் அடுத்தவர்கள் மீது பழி போடுவோம்.

கொஞ்சம் யோசித்தீர்களா?
சுந்தர் பிச்சை, அஜய் பங்கா, ராஜ் சுப்பிரமணியம், அரவிந்த் கிருஷ்ணா எல்லாம் தன் கையிலிருக்கும் கோடான கோடியை வைத்து ஏன் தனியாக ஒரு கூகுள், ஐபிஎம், பேங்க், ஃபெட் எக்ஸ் போன்றதொரு கம்பெனியை ஆரம்பிக்கவில்லை என்று?

இவர்களெல்லாம் கம்பெனி ஆரம்பிப்பதாகச் சொன்னாலே உலகம் முழுவதுமிருந்து முதலீடுகள் கொட்டும். ஏன் ஆரம்பிக்கவில்லை.

அந்த வகையில், ஸோகோ ”ஸ்ரீதர் வேம்பு” ஒரு வைடூரியம். ரிஸ்க் எடுத்த தேசப்பற்றாளர். ஆனால், நமக்கெல்லாம் ஐடி நிறுவனம் என்றாலே வெளிநாட்டுக்குச் சேவை செய்யும் இன்ஃபி மாதிரியான கம்பெனிகள் தான் நினைவுக்கு வருகிறது.

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

ஏனெனில், நமக்கு நிர்வாகரீதியாக வெற்றி பெற்றவர்களைக் கொண்டாடுவதை விட வேலை செய்து வெற்றிபெற்றவர்களே ஹீரோக்களாகப் படுகிறார்கள். சினிமா தயாரிப்பாளர்களை விட நடிகர்களே ஹீரோவாகப் பார்ப்பது போல…

இனியாவது நம் குழந்தைகளுக்கு நிர்வாக மேலாண்மையின் அவசியத்தையும், கல்வியையும் போதிப்போம். அடுத்த சில தசாப்தங்களில் உலக வல்லரசாவோம்.

அது வரை இன்னிக்கு ட்ரம்ப் என்ன அறிக்கை விடப் போகிறார்னு எக்ஸ்/ட்ரூத் ஆப்களை ரெஃப்ரெஷ் பண்ணிட்டே காத்திருக்க வேண்டியது தான்.

  • ஆனந்தன் அமிர்தன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories