December 6, 2025, 7:37 AM
23.8 C
Chennai

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ: சிறப்பம்சங்கள்..!

Motorola Edge 30 Pro - 2025

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான மோட்டோரோலா தனது புதிய ஸ்மார்ட்போனான மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோவை இந்த மாதம் அதாவது பிப்ரவரியில் அறிமுகப்படுத்தக்கூடும்

நிறுவனம் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்களையும் அளிக்கவில்லை என்றாலும், இந்த போன் குறித்து பல விஷயங்கள் கசிந்துள்ளன.

இந்த மோட்டோரோலா (Motorola) போன் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படக்கூடும். ஆனால் அறிமுக தேதி தற்போது வெளியிடப்படவில்லை என்றும் ஒரு அறிக்கை கூறுகிறது.

மோட்டோரோலா கடந்த மாதம் மோட்டோரோலா எட்ஜ் X30 ஐ சீனாவில் அறிமுகப்படுத்தியது. மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ அதே ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம்.

91Mobiles இன் அறிக்கையின்படி, மோட்டோரோலா, மோட்டோரோலா எட்ஜ் X30 ஐ சீனாவில் (China) அறிமுகப்படுத்தியது. இப்போது மோட்டோரோலா, மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோவை உலகளவில் அறிமுகப்படுத்தப் போகிறது.

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போனுக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ வடிவமைப்பில் சிறிய வித்தியாசம் இருக்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வேறு பெயரில் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Motorola Edge 30 Pro: அம்சங்கள்

இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் குறித்த எந்த தகவலையும் நிறுவனம் தற்போது வெளியிடவில்லை. எனினும், மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ சீனாவில் வெளியிடப்படும் மோட்டோரோலா எட்ஜ் X30 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று கருதினால், இரண்டு தொலைபேசிகளின் அம்சங்களிலும் அதிக வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. மோட்டோரோலா எட்ஜ் X30 இன் அம்சங்களைப் பற்றி காணலாம்.

Motorola Edge X30 ஆனது 6.7-இன்ச் முழு HD+ POLED டிஸ்ப்ளே, 144Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் HDR10+ ஆதரவுடன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆகையால் மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோவும் இதே போன்ற டிஸ்ப்ளே அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று கருதலாம். இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் (Smartphone) குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 SoC சிப்செட்டில் வேலை செய்ய முடியும் என்றும், இதில் 12ஜிபி வரை ரேம் பெற முடியும் என்றும் நம்பப்படுகிறது.

கேமராவைப் பற்றி பேசுகையில், மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரக்கூடும். இதில் 50MP முதன்மை சென்சார், 50MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவை இருக்கும். முன் கேமராவைப் பற்றி பேசுகையில், வாடிக்கையாளர்கள் 60MP முன் கேமராவைப் பெறலாம். இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரக்கூடும்.

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோவின் அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான சில தகவல்களை மோட்டோரோலா விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories