ஜன.7ல் சென்னையில் உலகளாவிய முதல் தண்ணீர் மேலாண்மைக் கண்காட்சி

மதுரை:

சென்னையில் 2016 வருடத்தின் உலகளாவிய முதல் தண்ணீர் மேலாண்மைக் கண்காட்சி SRW WATER EXPO 2016 ஜனவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது. .
இதுகுறித்து ஆதித்யா செல்வராஜ் கூறியது…
வாட்டர் ப்யூரிஃபையர் தொழில் முனையும் நிறுவனங்களில் முன்னணியில் உள்ள மதுரையைச் சேர்ந்த ஆதித்யா சுவிட் வாட்டர் டெக்னாலஜிஸ் இந்தியா. நிறுவனமானது முதல் தென்னிந்திய RO உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை பெற்றது, சீனா, தைவான் மற்றும் அமெரிக்கா நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் உதிரி பாகங்கள் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக இறக்குமதி செய்யப்பட்டு தண்ணீர் சுத்திகரிப்பு உபகரங்களின் உதிரி பாகங்களை மொத்த வினியோகம் செய்து வருகிறோம். நாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கிடைக்கின்றது.

சென்னையில் தண்ணீர் மேலாண்மைக் கண்காட்சியில் வழக்கம்போல் எங்கள் நிறுவனமும் பங்கு பெறுகிறது. இந்த வருடமும் கே-1 மற்றும் கே-2 என்ற இரண்டு இலக்க தனி அமைப்புகளில் பங்கு பெற்று புதிய பொருள்களை அறிமுகம் செய்கிறோம்.

இந்த முறை தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு தொழில் முனைவோர் நலனுக்காக உருவாக்கப்பட்ட தென்பிராந்திய தண்ணீர் சுத்திகரிப்புக் கருவிகள் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் நடத்துவது தனிச்சிறப்பு.

இந்தக் கண்காட்சியை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம். இதற்கான பணியை சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் இரவு பகலாகத் தொடர்ந்து செய்து வருகின்றனர், முக்கியமான சந்திப்புகளில் பதாகைகள், தினசரி நாளேடுகள், அலைபேசி குறுந்தகவல்கள், பேருந்துகளில் பின்புறம சிறிய பதாகைகள், பண்பலை வானொலி, சமூக வலைதளம் போன்றவை மூலம் விளம்பரம் செய்து வருகின்றனர்,

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில், இந்தத் தண்ணீர்க் கண்காட்சி நடத்தப்படுகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிக்கு வைப்பார்கள். ஜப்பான், சீனா, அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. இதில் சுமார் 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 190 க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

தண்ணீர், கழிவுநீர் மேலாண்மை, மறுசுழற்சி, தண்ணீர் வினியோகம், போக்குவரத்து, குடிநீர் சுத்திகரிப்பு, மேலாண்மை, கடல் நீரைக் குடிநீராக மாற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உள்ள நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களின் இயந்திரங்கள், உற்பத்திப் பொருள்களை காட்சிக்கு வைக்க உள்ளனர்.

தண்ணீர் ஆதாரம், பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கும் நடைபெறும். இதில் தண்ணீர் துறையில் கடைபிடிக்க வேண்டிய சர்வதேச தொழில்நுட்பங்கள், மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். பல்வேறு தலைப்புகளில், தண்ணீர் துறைச் சார்ந்த வல்லுனர்கள் உரையாற்றுவர். அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர் நிர்வாகத்தில் ஏற்படும் சவால்களை எப்படி சமாளிப்பது என்பதும் குறித்தும் விவாதிக்கப்படும். பிரான்ஸ், சிங்கப்பூர், கனடா, சீனா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து, தண்ணீர், கழிவுநீர் மேலாண்மை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ளனர்” என்றார் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories