ஹைதராபாத்: படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் எது வேண்டுமானாலும் செய்வேன் என்று அர்த்தம் இல்லை என நடிகை பாயல் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையின் மூலம் பெரிய திரைக்கு வந்தவர் பாயல் ராஜ்புட். ஆர்.எக்ஸ். 100 படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்.
பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் துணிச்சலாக வெளியில் தெரிவித்வர். இந்நிலையில் அவர் தனது திரையுலக பயணம் குறித்து கூறியிருப்பதாவது, ஆர்.எக்ஸ். 100 பட ரிலீஸுக்கு பிறகு தான் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டேன். பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புத் தருகிறேன் என்று கூறி ஒருவர் படுக்கைக்கு அழைத்தார்.
படுக்கைக்கு சென்று தான் நடிக்க வேண்டும் என்பது எனக்கு தேவையோ,அதில் உடன்பாடோ இல்லை. அதனால் அது குறித்து வெளியே தெரிவித்தேன். நான் 6 ஆண்டுகள் மும்பை மற்றும் பஞ்சாபில் வேலை பார்த்தபோதும் அது போன்று நடந்துள்ளது.
பாயல் ராஜ்புட், மீ டூ இயக்கம் இருந்தும் படுக்கைக்கு அழைக்கப்படும் பழக்கம் இன்னும் இருக்கத் தான் செய்கிறது. சில பெண்கள் அது குறித்து தைரியமாக பேசுகிறார்கள், சிலர் பேசுவது இல்லை. நான் வெளிப்படையாக பேசுவேன் என்று பயந்து யாராவது எனக்கு வேலை தராவிட்டால் அதுபற்றி கவலை இல்லை. ஏற்கனவே பலருக்கு என்னை பிடிக்கவில்லை.
நான் வெளிப்படையாக பேசுவதால் சிலர் என்னை வெறுக்கிறார்கள். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு என்னை அழைப்பது ஆண்டுக் கணக்கில் நடப்பதால் அது குறித்து பேசுகிறேன். ஆர்.எக்ஸ். 100 படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொண்டதால் பட வாய்ப்பை பெற நான் எதையும் செய்வேன் என்று மக்கள் நினைக்கக் கூடாது.
நான் தற்போது வெங்கி மாமா படத்தில் வெங்கடேஷ் சார் ஜோடியாக நடித்து வருகிறேன். மேலும் டிஸ்கோ ராஜா, உதயநிதி ஸ்டாலினின் ஏஞ்சல் ஆகிய படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஓய்வு எடுக்க நேரமின்றி ஒரு பட செட்டில் இருந்து மற்றொரு செட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன். இன்னும் பெயரிடப்படாத தெலுங்கு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். அந்த படத்தின் லுக் டெஸ்ட்டுக்காக புகைப்பிடிப்பது போன்று போஸ் கொடுத்தேன். கையில் இரண்டு சிகரெட்டுடன் கொடுத்த போஸ் கொடுத்த புகைப்படத்தை நான் சமூக வலைதளத்தில் வெளியிட்டபோது நண்பர்களும் ரசிகர்களும் என்னை கண்டபடி கலாய்த்தார்கள் என்று பாயல் தெரிவித்துள்ளார்.