மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சவுக்கார் ஜானகி!

savukarjanaki - 2026

ஹேராம் படத்தில் நடித்த சவுகார் ஜானகி, 14 வருட இடைவெளிக்கு பிறகு வானவராயன் வல்லவராயன் படத்தில் நடித்தார். இப்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இது அவரது 400வது படம்.

இதுகுறித்து ஆர்.கண்ணன் கூறுகையில், ‘ சந்தானம் நடிக்கும் முழுநீள காமெடி படத்தை இயக்குகிறேன்.மசாலா பிக்ஸ் நிறுவனமும் எம் கே ஆர் பி புரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரிக்கின்றன. இப்படத்துக்கு வித்தைக்காரன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சந்தானத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சவுகார் ஜானகியை அழைத்தபோது எனக்கு வயது ஆகி விட்டது. அதனால் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன் என்றார். கதையை கேளுங்குள் பிடித்து இருந்தால் நடியுங்கள் என்று சொல்லி பெங்களூருவில் வசிக்கும் சவுகார் ஜானகியை சந்தித்து கதை சொன்னோம்.அவருக்கு பிடித்துபோய் உடனே நடிக்க சம்மதித்தார்.

இதில் சவுகார் ஜானகி கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அவருடன் ஆனந்தராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், மனோகர் நடிக்கின்றனர். படப்பிடிப்பில் சவுகார் ஜானகியின் ஞாபக சக்தியை கண்டு ஆச்சரியப்பட்டோம். இந்த வயதிலும் வசனங்களை நன்றாக நினைவில் வைத்து பேசினார்.

தில்லு முல்லு படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சவுகார் ஜானகி நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. அதே மாதிரியான நகைச்சுவை கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கிறார்.

சுறுசுறுப்பாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சந்தானம், சவுகார் ஜானகியின் நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும்படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் படம் வெளியாகிறது’ என்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories