திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு இருக்கிறது! போட்டுடைத்த பிரபாஸ்!

prapas anushka - 2026

தெலுங்கில் முன்னணி நாயகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் பிரபாஸ். இவரும் நடிகை அனுஷ்காவும் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்படத்தில் அவர்களது கெமிஸ்ட்ரி பெரிதும் பேசப்பட்டது. அதோடு அப்படத்தின் போது இருவரும் காதலிக்கிறார்கள் என்றும், விரைவில் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தங்களுக்குள் இருப்பது காதல் அல்ல நட்பு தான் என இருவரும் கூறி வந்தனர். அவர்கள் அப்படிச் சொன்ன போதிலும் காதல் வதந்தி நின்றபாடில்லை.

அனுஷ்காவுடனான தனது உறவு குறித்து முதன்முறையாக மிகவும் விளக்கமாக பேட்டி கொடுத்துள்ளார் நடிகர் பிரபாஸ். அதில், “வதந்திகள் எப்போதுமே இருந்து கொண்டே தான் இருக்கும். சிறிதுகாலத்திற்கு முன்பு இந்த வதந்தி கொஞ்சம் அடங்கி இருந்தது. தற்போது மீண்டும் ஆரம்பித்து விட்டார்கள்.

நானும் அனுஷ்காவும் சில படங்களில் சேர்ந்து நடித்துள்ளோம். எங்கள் இருவருக்கும் இடையில் 11 ஆண்டுகள் நட்பு இருக்கிறது. மற்றவர்கள் நினைப்பது போல், நிஜமாகவே எங்களுக்குள் ஏதாவது ஒரு உறவு இருந்தால் அதனை நாங்கள் மறைக்க வேண்டிய கட்டாயம் இல்லை..

எங்கள் இருவரில் யாராவது ஒருவருக்காவது திருமணம் ஆகும் வரை இந்த வதந்தி நிற்காது. அனுஷ்கா மிகவும் அழகானவர். அதனால் தான் பாகுபலியில் தேவசேனை கதாபாத்திரத்தில் நடித்தார். அவரையும் என்னையும் திரையில் இருக்கும் ஒரு ஜோடியாகத் தான் மக்கள் பார்க்கிறார்கள்.

இந்த வதந்திகளை எப்படி நிறுத்துவது என எனக்குத் தெரியவில்லை. நிச்சயம் ஒருநாள் நான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறது. சமீபத்தில் திருமணம் பற்றிய எண்ணம் எனக்கு வந்தது. ஆனால் அப்போது படவேலைகளில் பிசியாக இருந்ததால் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் சீக்கிரமே திருமணம் செய்து கொள்வேன் என நம்புகிறேன்” என பிரபாஸ் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories