February 8, 2025, 10:18 PM
27.1 C
Chennai

திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு இருக்கிறது! போட்டுடைத்த பிரபாஸ்!

தெலுங்கில் முன்னணி நாயகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் பிரபாஸ். இவரும் நடிகை அனுஷ்காவும் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்படத்தில் அவர்களது கெமிஸ்ட்ரி பெரிதும் பேசப்பட்டது. அதோடு அப்படத்தின் போது இருவரும் காதலிக்கிறார்கள் என்றும், விரைவில் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தங்களுக்குள் இருப்பது காதல் அல்ல நட்பு தான் என இருவரும் கூறி வந்தனர். அவர்கள் அப்படிச் சொன்ன போதிலும் காதல் வதந்தி நின்றபாடில்லை.

அனுஷ்காவுடனான தனது உறவு குறித்து முதன்முறையாக மிகவும் விளக்கமாக பேட்டி கொடுத்துள்ளார் நடிகர் பிரபாஸ். அதில், “வதந்திகள் எப்போதுமே இருந்து கொண்டே தான் இருக்கும். சிறிதுகாலத்திற்கு முன்பு இந்த வதந்தி கொஞ்சம் அடங்கி இருந்தது. தற்போது மீண்டும் ஆரம்பித்து விட்டார்கள்.

நானும் அனுஷ்காவும் சில படங்களில் சேர்ந்து நடித்துள்ளோம். எங்கள் இருவருக்கும் இடையில் 11 ஆண்டுகள் நட்பு இருக்கிறது. மற்றவர்கள் நினைப்பது போல், நிஜமாகவே எங்களுக்குள் ஏதாவது ஒரு உறவு இருந்தால் அதனை நாங்கள் மறைக்க வேண்டிய கட்டாயம் இல்லை..

எங்கள் இருவரில் யாராவது ஒருவருக்காவது திருமணம் ஆகும் வரை இந்த வதந்தி நிற்காது. அனுஷ்கா மிகவும் அழகானவர். அதனால் தான் பாகுபலியில் தேவசேனை கதாபாத்திரத்தில் நடித்தார். அவரையும் என்னையும் திரையில் இருக்கும் ஒரு ஜோடியாகத் தான் மக்கள் பார்க்கிறார்கள்.

இந்த வதந்திகளை எப்படி நிறுத்துவது என எனக்குத் தெரியவில்லை. நிச்சயம் ஒருநாள் நான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறது. சமீபத்தில் திருமணம் பற்றிய எண்ணம் எனக்கு வந்தது. ஆனால் அப்போது படவேலைகளில் பிசியாக இருந்ததால் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் சீக்கிரமே திருமணம் செய்து கொள்வேன் என நம்புகிறேன்” என பிரபாஸ் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

Topics

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

பஞ்சாங்கம் பிப்.06 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

Entertainment News

Popular Categories