
சென்னை:
அரசியல் சிஸ்டம், ஜனநாயகமே கெட்டுப் போய் உள்ளது என்று ஆவேசத்துடன் குறிப்பிட்டார் ரஜினி காந்த்.
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் ரசிகர்களிடம் குறிப்பிட்டவை:
முதல் நாளில் அரசியலுக்கு வருவது பற்றி பேசினேன்;
எதிர்ப்பு இல்லாமல் வளர முடியாது, அரசியலில் எதிர்ப்பு தான் அவசியம்
தமிழக அரசியல் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. மொத்தத்தையும் சரி செய்தால்தான் தமிழகம் உருப்படும்.
மக்களின் சிந்தனையை உருவாக்கினால் மட்டுமே நாட்டில் மாற்றத்தை கொண்டுவர முடியும்.
போர் வரும்போது பார்த்து கொள்வோம்; அதுவரை பொறுமை காப்போம்.
நல்ல உள்ளங்கள் வாழும். தமிழக மக்களுடன் தான் நான் இருக்க வேண்டும்
23 வருடங்கள் கர்நாடகாவில் வாழ்ந்தேன். 43 வருடங்கள் தமிழகத்தில் வாழ்கிறேன். நான் பச்சை தமிழன்; என்னை தமிழனாக ஆக்கியவர்கள் நீங்கள்.
மு .க .ஸ்டாலினை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் நன்றாகச் செயல்படுவார்
தமிழகத்தில் அரசியல் நிலவரம் நன்றாக இல்லை
அரசியல் குறித்த எனது பேச்சு இவ்வளவு சர்ச்சையாகும் என எதிர்பார்க்கவில்லை
அனைவரும் அவரவர் கடமையை செய்யுங்கள்; போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்
அரசியல் சிஸ்டம், ஜனநாயகமே கெட்டுப் போய் உள்ளது.
ஸ்டாலின் நல்ல நிர்வாகி, சீமான் போராளி, அன்புமணி சிறந்த சிந்தனை வளம் மிக்கவர்.
தமிழகத்தில் இருந்து என்னைத் தூக்கி போட்டால் இமயமலையில் போய் தான் விழுவேன்; என்னை வாழ வைத்த தமிழக மக்கள் நன்றாக இருக்க நினைக்கக் கூடாதா? என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார் ரஜினி காந்த்.



