அரசு அலுவலகத்தில் விஜய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம்! பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம்!

vijay

பேரூராட்சி அலுவலகத்தில், நடிகர் விஜய் பிறந்த நாளை, கேக் வெட்டிக் கொண்டாடியதையடுத்து, ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் அதன் செயல்அலுவலர் ராஜா தலைமையின்கீழ் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் களைகட்டியது. அரசு அலுவலகத்தில் தனிப்பட்ட நபர் அல்லது அரசியல் கட்சியினரின் பிறந்தநாளை கொண்டாட கூடாது என்பது வழக்கம்.

vijay

இதுவரை இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாக கேள்விப்பட்டதில்லை. அதையெல்லாம் தாண்டி ஒரு பேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செயல்அலுவலர் ராஜா கேக் வெட்டி சக நண்பர்கள் அனைவருக்கும் ஊட்டிய படி கொண்டாட்டத்தில் திளைத்துள்ளார். இதற்கான வீடியோ இணையத்தில் வைரலானது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, பல்வேறு ‘வாட்ஸ் ஆப்’ குரூப்களில் இந்த விஷயம் நேற்று வெளியானது. அதில், ‘கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு, மாவட்டத்தில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. இச்சூழலில் ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா தலைமையில், பேரூராட்சி அலுவலத்தில், விஜய் பிறந்த நாளை, அவரது ரசிகர் மன்றத்தினர் விழா கொண்டாடி, நலத்திட்ட உதவி வழங்கியுள்ளனர்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
vijay

இக்கட்டான கால கட்டத்தில், அலுவலக வளாகத்தின் உள்ளே, பேனர் வைத்து செயல் அலுவலர் தலைமையில், கேக் வெட்டி கொண்டாடியது, சட்டத்தை மீறிய செயலாகும். நடிகர் விஜய் பிறந்தநாளை, அரசு அலுவலகத்தில் கொண்டாடியது எந்த வகையில் நியாயம்?’ எனக் கேட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விஜய் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர், ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே அந்த நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவியாக, தூய்மைப் பணியாளர்களுக்கு, ‘மாஸ்க்’ மட்டுமே வழங்கியதாக தெரிகிறது.

விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம் கொரோனா காலத்தில் வேண்டாம் என சொன்னதாக தகவல்கள் வெளியாகியது ஆனால் அவர் ரசிகர் ஒருவர் அரசு அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாடுவதே தவறு அதுவும் கொரோனா தீவிரமாக பரவி வருகின்ற இந்நிலையில் பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட இந்நிகழ்வு குறித்து, பல்வேறு கண்டனங்கள் எழுகின்றன.

விஜய் தன் பேச்சில் நிலைப்பாட்டுடன் இருந்தால் தானே அவர் ரசிகர்கள் அவர் பேச்சை பின்பற்றுவார்கள் அவருக்கே ஒரு கொள்கை கிடையாது என நெட்டிசன்ஸ் கருத்து தெரிவிக்கின்றனர்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories