December 6, 2025, 6:57 PM
26.8 C
Chennai

அரசு அலுவலகத்தில் விஜய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம்! பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம்!

vijay

பேரூராட்சி அலுவலகத்தில், நடிகர் விஜய் பிறந்த நாளை, கேக் வெட்டிக் கொண்டாடியதையடுத்து, ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் அதன் செயல்அலுவலர் ராஜா தலைமையின்கீழ் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் களைகட்டியது. அரசு அலுவலகத்தில் தனிப்பட்ட நபர் அல்லது அரசியல் கட்சியினரின் பிறந்தநாளை கொண்டாட கூடாது என்பது வழக்கம்.

vijay

இதுவரை இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாக கேள்விப்பட்டதில்லை. அதையெல்லாம் தாண்டி ஒரு பேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செயல்அலுவலர் ராஜா கேக் வெட்டி சக நண்பர்கள் அனைவருக்கும் ஊட்டிய படி கொண்டாட்டத்தில் திளைத்துள்ளார். இதற்கான வீடியோ இணையத்தில் வைரலானது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, பல்வேறு ‘வாட்ஸ் ஆப்’ குரூப்களில் இந்த விஷயம் நேற்று வெளியானது. அதில், ‘கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு, மாவட்டத்தில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. இச்சூழலில் ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா தலைமையில், பேரூராட்சி அலுவலத்தில், விஜய் பிறந்த நாளை, அவரது ரசிகர் மன்றத்தினர் விழா கொண்டாடி, நலத்திட்ட உதவி வழங்கியுள்ளனர்.

vijay

இக்கட்டான கால கட்டத்தில், அலுவலக வளாகத்தின் உள்ளே, பேனர் வைத்து செயல் அலுவலர் தலைமையில், கேக் வெட்டி கொண்டாடியது, சட்டத்தை மீறிய செயலாகும். நடிகர் விஜய் பிறந்தநாளை, அரசு அலுவலகத்தில் கொண்டாடியது எந்த வகையில் நியாயம்?’ எனக் கேட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விஜய் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர், ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே அந்த நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவியாக, தூய்மைப் பணியாளர்களுக்கு, ‘மாஸ்க்’ மட்டுமே வழங்கியதாக தெரிகிறது.

விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம் கொரோனா காலத்தில் வேண்டாம் என சொன்னதாக தகவல்கள் வெளியாகியது ஆனால் அவர் ரசிகர் ஒருவர் அரசு அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாடுவதே தவறு அதுவும் கொரோனா தீவிரமாக பரவி வருகின்ற இந்நிலையில் பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட இந்நிகழ்வு குறித்து, பல்வேறு கண்டனங்கள் எழுகின்றன.

விஜய் தன் பேச்சில் நிலைப்பாட்டுடன் இருந்தால் தானே அவர் ரசிகர்கள் அவர் பேச்சை பின்பற்றுவார்கள் அவருக்கே ஒரு கொள்கை கிடையாது என நெட்டிசன்ஸ் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories