கிரிக்கெட் வீரராக நடிப்பது ஒரு சவால் ! விஜய் சேதுபதி !

muthiya murali - 2026இந்திய கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய சச்சின் தெண்டுல்கர், தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது 1983-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வரலாறும் திரைப்படமாக உருவாகி வருகிறது.

’83’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமும் திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியின் ஒரு வீரராக இருந்த முத்தையா முரளிதரன் அடுத்தடுத்து பல வித்தியாசமான யுக்திகளை கையாண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டுகளை குவித்தார்.

டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையுடையவர்.  அதேபோல் ஒருநாள் போட்டிகளிலும் 534 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து கடந்த 2011ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இவரின் சிறந்த பந்து வீச்சினால் 2007ம் ஆண்டு இலங்கை அணி உலக கோப்பையின் இறுதிப் போட்டி வரை சென்றது. இவரின் சுழற்பந்து வீச்சு பல சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும் ஐசிசி நடத்திய அனைத்து பரிசோதனைகளிலும் தேர்ச்சி பெற்று, விதிமுறைகளுக்கு உட்பட்டே பந்துவீசி வருவதாக ஒவ்வொரு முறையும் நிரூபித்திருக்கிறார்.

மிகச்சிறிய நாடான இலங்கை, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்ததற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்களுள் முதன்மையானவர் முத்தையா முரளிதரன்

இந்திய கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய சச்சின் தெண்டுல்கர், தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது 1983-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வரலாறும் திரைப்படமாக உருவாகி வருகிறது.

’83’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமும் திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில், விஜய் சேதுபதி நடிப்பது தனக்கு பெருமையாக உள்ளது என முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தியா சினிமாவில் இது பயோபிக் காலம். சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி வாழ்க்கை வரலாறுகள் படமாக்கப்பட்டுவிட்டன. மேலும் சில கிரிக்கெட் வீரர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பது இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படம். இதன் சிறப்பு என்னவெனில், முத்தையா முரளிதரனாக வேடம் ஏற்கப்போவது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.vijaysethupathi1 e1564390776897 - 2026இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போது இருந்தே தொடங்கிவிட்டது. இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய முத்தையா முரளிதரன், ‘தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில், விஜய் சேதுபதி நடிப்பது தனக்கு பெருமையாக உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,” எனது வாழ்வின் கதையை படமாக தயாரிக்கும் தார் மோஷன் பிக்சர்ஸ் உடன் சேர்ந்து பணியாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தை 2020 ஆம் ஆண்டின் கடைசியில் வெளியிட நாங்கள் எண்ணி இருக்கிறோம். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போன்ற ஒரு சிறந்த கலைஞர். என்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க போவதை நான் பெரும் கௌரவமாக கருதுகிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ளதாகவும் தார் மோஷன் பிக்‌ஷர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நான் இந்த படத்தின் குழுவோடு பல மாதங்களாக இணைந்து பணியாற்றி வருகிறேன். இனிமேலும் என்ன ஒத்துழைப்பு தேவையோ, அதை நான் இப்படத்துக்கு அளிப்பேன்”, எனத் தெரிவித்துள்ளார்.

படத்தின் பெயர் ‘800’ என வைக்கப்பட உள்ளதாகவும், படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்க இருப்பதாகவும் வட்டாரத் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கவிருக்கும் இப்படம் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து மற்றும் இன்னபிற கிரிக்கெட் சார்ந்த நாடுகளில் நேர்த்தியாக படமாக்கப்பட இருக்கின்றன.

படம் குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், ‘கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை கதையில், அவரது கேரக்டரில் நடிக்க இருப்பது உண்மையிலேயே சவாலான விஷயம்தான். இதை நான் ஆவலுடன் எதிர்கொள்வதற்கு காத்திருக்கிறேன். முத்தையா முரளிதரனும் படத்தில் நடிக்கிறார். அவர் எனக்கு கிரிக்கெட் விளையாட பயிற்சி அளிக்கிறார்’ என்றார்.

.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories