திருமாலும் விஷ்ணுவும் வேறு வேறா?!

vishnu 4 - 2026“திருமால் வேதத்தில் வணங்கப் படவில்லை . விஷ்ணு என்பதெல்லாம் பின்னாடி ஓட்ட வச்சது” என்று ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் பேசி இருக்கிறார். அதாவது வேத வழிபாட்டு முறையை இங்குள்ள தமிழர் தெய்வமான திருமால் மீது “பொருத்தி விட்டனர்” வட நாட்டவர் என்றும் பேசி இருக்கிறார்.

எனக்கு ஒரு ஊசி முனை அளவு தமிழ் இலக்கியம் அறிமுகம் என்பதினால் இது தவறு என்பதை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

சங்க இலக்கியங்களில் முழுவதும் பக்தி பாடல்கள் நிரம்பிய முழுமுதல் இலக்கிய நூல் பரிபாடல்.தமிழ் மக்களின் தொன்மையான வழிபாட்டு கடவுளர்களான திருமால் செவ்வேள் பற்றிய பாடல்கள் மட்டுமே இருக்கும் அற்புதமான தொன்மையான தமிழ் இலக்கிய நூல்.

திருமாலுக்கென்று தனியாக வரலாறு ஏதும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் தசாவதாரம் மற்றும் பல குணங்களை விவரிக்கும் இலக்கியம் ஸம்ஸ்க்ரிதம் மற்றும் தமிழில் ஏராளம்.

அறிஞர் சொன்ன “திருமால் விஷ்ணு கிடையாது” எனும் அப வாதம் பரிபாடலின் முதல் பாட்டின் முதல் வரியிலேயே வீழ்ந்து போகிறது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

பரிபாடலில் முதல் பாடல் இதோ:

“ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை

தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,

மாவுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனி,”

இதற்கு பரிமேலழகரின் உரை மிகவும் தெளிவாக ஆதிசேஷனை குடையாக கொண்டவன் என்று சொல்கிறது;

vishnu statue a - 2026பரிமேலழகர்: “திருமாலே! ஆயிரம் முடியையுடைய ஆதிசேஷன் நின் திருமுடிமேல் கவிக்கப் பெற்றாய்; நீ திருமகள் தங்கும் மார்பையுடையை;” என்று லக்ஷ்மியை மார்பில் கொண்டவனே என்றும் தெளிவாக திருமாலே விஷ்ணு என்று சொல்லப்படுகிறது. மேலும் இடம் கிடைக்கும் போதெல்லாம் “அந்தணர் அரு மறைப் பொருளே” என்றே விளிக்கிறது பரிபாடல். அந்தணர் என்றால் கருணாநிதி போல் படித்தவர் என்று பொருள் கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். அருமறை என்பது வேதம்.

இதைவிட முக்கியமான ஒன்று பரிபாடல் திருமால் புகழ் பாடும் பொழுது வராக அவதாரம் பற்றிச் சொல்கிறது. விஷ்ணுவின் முக்கியமான அம்சம் தசாவதாரம்.

இதோ பாடல்:

“உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்;

செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு

தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று

உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி”

பொருள்:

ஊழிக் காலத்தில் உயிர்கள் உளவாதற் பொருட்டு வராகத்திருக்கோலம் கொண்டு நீ நிலத்தினை மீட்டெடுத்தாய்.

இது விஷ்ணுவின் வராக அவதாரத் சிறப்பு. இதை சொல்லித்தான் திருமாலை “நின் அடி

தலை உற வணங்கினேம்” என்கிறது பரிபாடல்.

thirumal - 2026A =B , B =C . அப்புறம் A வேறு C வேறா?

இவற்றை எழுதும் போது அன்றைய தமிழ் வழக்கில் எது வழங்கி வந்ததோ அதையும் அதற்கும் மேலாக அன்றய காலகட்டத்தில் கிடைத்த சான்றுகளை வைத்தே இலக்கியம் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும்.

எனவே பரிபாடல் சொல்லும் திருமால் வேதத்தில் சொல்லப் படும் விஷ்ணுவே அல்லாமல் வேறு (வரலாறே இல்லாத) தனித் தமிழ் கடவுள் அல்ல என்பது பரிபாடல் மூலம் நான் கண்டு கொண்டது.

இன்றைக்கு ஜீஸஸ் முருகனாக கள்ளழகராக வேடம் கட்டியிருக்கிறார். ஜீஸஸுக்கு பாதயாத்திரை, மொட்டை போடுதல், அகல் விளக்கு போன்ற நம் வழிபட்டு முறைகளும் நமது பூசை முறைகளும் கடத்தப் பட்டிருக்கிறது. வேண்டுமானால் அவர்களிடம் சொல்லலாம் “சாமி உன்து, பூசை என்து” என்று. மற்றபடி திருமால் வேறு விஷ்ணு வேறு எனும் வாதம் உண்மைக்கு வெகு தூரம்.

ALSO READ:  மலர்வளையம் வைப்பவர்கள்... சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

எனவே குழம்ப வேண்டாம். சாமியும் நம்முடையது, பூஜையும் நம்முடையதே!

– ச. சண்முகநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories