அஞ்சல படத்தின் பாடல்கள் நிச்சயம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இருக்கும்: தயாரிப்பாளர் நம்பிக்கை!

Published:

நடிகர் விமல் உடைய படங்களுக்கு விநியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள், மற்றும் ரசிகர்கள் இடையே என்றுமே ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். சகல தரப்பினரையும், திருப்தி செய்யும் படமாக அவரது படம் இருக்கும் என்றக் கணிப்பை அவர் என்றுமே பொய்க்க விட்டதில்லை. அந்த வகையில் தங்கம் சரவணன் இயக்கத்தில் உருவாகும் ‘அஞ்சல’ திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல சண்டை இயக்குனர் திலிப் சுப்புராயன் தயாரிப்பில், நந்திதா விமலுக்கு ஜோடியாக நடிக்கும் ‘அஞ்சல’ படத்தின் விநியோக உரிமையை பெற்று இருப்பவர் Auraa சினிமா மகேஷ் கோவிந்தராஜ்.

ரசிகர்களை கவரும் வகையில் பல அம்சங்கள் படத்தில் இருந்தாலும் பிரபல இசை அமைப்பாளர் கோபி சுந்தர் படத்தின் இசை அமைப்பாளர் என்பது பிரதானம். Bangalore days, என்னு நிண்டே மொய்தீன் ஆகிய மலையாள படங்களின் இசை மூலம் எல்லோர் மனதையும் கொள்ளைக் கொண்ட இசை இவருடையது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

அஞ்சல படத்தின் பாடல்கள் நிச்சயம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இருக்கும், 19 ஆம் தேதி இசை வெளியீடு அதை தொடர்ந்து வெகு விரைவில் ரசிகர்களை சந்திக்க வருகிறார் ‘அஞ்சல’ என்றுக் கூறினார் தயாரிப்பாளர் திலிப் சுப்புராயன்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img