சீண்டிய சிவகுமார்… சினிமாத்துறைன்னாலே இப்படி ‘மூடர்கூட’மாத்தான் இருக்கணுமா..?!

Published:

sivakumar selfie 1 - 2026

மீண்டும் சீண்டியுள்ளார் நடிகர் சிவகுமார்! மூடர்கூடத்தின் உறுப்பினராக, மூடர் கூட்டத்தில் ஒருவனாகவே சிவகுமார் பேசியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன! சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப் படும் விமர்சனங்களில் இரண்டு விமர்சனங்கள் இங்கே..!

நடிகர் சிவகுமார் பேசிய வீடியோ பார்த்தேன். கோயில்களில் தீண்டாமை இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இரண்டு கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.

1).சிவலிங்க கல்லை மேலே ஏறி நின்று செதுக்கிய சிற்பியை, கும்பாபிஷேகத்துக்கு பிறகு சாமியை தொடக் கூட அனுமதிப்பதில்லை. (இப்படி ஒரு சிற்பி இவரை அழைத்து வருத்தப்பட்டாராம்)

2).திருப்பதி கோயிலில் 48 மணிநேரம் விரதம் இருந்து செல்பவனை ‘ஜருகண்டி, ஜருகண்டி’ என்கிறார்கள். ஆனால், ஒரு கோடீஸ்வரன் காட்டேஜ் எடுத்துக்கொண்டு, குடித்துவிட்டு, பெண்ணோடு சல்லாபம் செய்துவிட்டு அதே கோயிலுக்கு சென்றால், தலையில் கிரீடம் வைத்து மரியாதை செலுத்துகிறார்களாம்.

வயதாக வயதாக சிவக்குமார் மூளை பிசகி வருவதை நாம் பார்த்தே வருகிறோம். ஏற்கனவே சபரிமலை விவகாரத்தில் இந்த கிழவனார் இந்து நம்பிக்கைகளுக்கு எதிராக பொங்கினார். தற்போது அவரின் இரண்டு மகன்களுக்கும் மார்க்கெட் அவுட் ஆகிவிட்ட நிலையில், மற்ற சக மார்க்கெட் இழந்த நடிகர்களை போல், “மார்க்கெட் இழந்தோர் மிஷநரி மறுவாழ்வு மையத்தில்” சிவக்குமார் குடும்பமும் இணைந்துவிட்டது தெளிவாக தெரிகிறது. அதிலும் சூர்யாவின் மனைவியாக துலுக்கப் பெண் ஜோதிகா நுழைந்ததில் இருந்து பல மாற்றங்களை பார்க்க முடிகிறது. இருந்தாலும் சிவக்குமார் பேசியதை அரங்கத்தில் கூடியிருந்த ஆட்டு மந்தை கூட்டம் எதுவுமே தெரியாமல் கரவொலி எழுப்பியதால், அடியேன் பதில் சொல்லக் கடமை பட்டிருக்கிறேன்.

இப்போது சிவக்குமாரின் கேள்விகளுக்கான விளக்கத்திற்கு வருவோம்...

1).ஒரு பிரிண்ட் செய்த சாதாரண பேப்பரில் ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்து இட்டதும் அது ரூபாயாக மாறி விடுகிறது. இப்போது ரிசர்வ் வங்கிக்கு காகிதத்தை தயாரித்து அனுப்பிய ஒரு நிறுவனம், நாங்கள் அல்லவா காகிதம் தயாரித்து கொடுத்தோம், அப்படியேனில் அதை அச்சடிக்கும் உரிமை எங்களுடையது, அதில் எங்கள் கையெழுத்துதான் வாங்க வேண்டும் என்பது எத்தனை முதிர்ச்சியற்ற பேச்சோ, அதுபோலவே ஒரு சிற்பி, உரிய நியமத்தோடு பிரதிஷ்டை செய்யப்பட்டு சக்தியூட்டப்பட்ட ஒரு ஸ்வாமியை நான் தொடுவேன் என்பது. சக்தியூட்டப்பட்ட ஒரு சிலை, ‘சிலை’ எனும் நிலையில் இருந்து ‘சுவாமி’ எனும் நிலையை அடைந்து விடுகிறது. யாரும் திருப்பதி சென்றீர்களே, பழனி சென்றீர்களே சிலையை பார்த்து வந்தீர்களா என்று கேட்கமாட்டார்கள், சுவாமியை தரிசித்தீர்களா என்று தான் கேட்பார்கள். ஆக; அதை தொடும் அருகதை முறைப்படி தகுதிபெற்ற அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கே உரியது. அவ்வளவு ஏன்; நாளை சிவகுமாரோடு செல்ஃபி எடுக்க யாரேனும் ஒரு இளைஞன் முன்வர, அதை தட்டிவிட்டு அதீத கோபத்தால் மாரடைப்பில் அவர் மண்டையை போட்ட மறுகணமே, சிவக்குமார் மறைந்து ‘பாடி’ ஆகிவிடுவார். சிவக்குமார் அடக்கம் என்று சொல்ல மாட்டார்கள், சிவக்குமார் உடல் அடக்கம் என்றே சொல்வார்கள். இத்தனை வருடம் என் தந்தை சிவக்குமாராக இருந்தாரே, எப்படி அவரை ‘பாடி’ என்று சொல்லலாம் என அவர் மகன் கேட்டால், கீழ்பாக்கத்தில்தான் சேர்த்து விடுவார்கள்.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

ஆகையால் வெறும் ராமாயணம், மகாபாரதத்தை மனப்பாடம் செய்து பாமரர்களின் கைத்தட்டலை பெறுவது மட்டும் இல்லாமல், செல்ஃபி சிவக்குமார் ஆன்மீக மற்றும் ஆகம சாஸ்திரங்களின் அடிப்படை விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். இணை வைக்காதே, சிலையை வணங்காதே என ஜோதிகாவின் மதத்தினரின் பாலைவன சித்தாந்தத்திற்கு சிவக்குமார் பலியாக வேண்டாம்.

2).திருப்பதியில் தீண்டாமை இருக்கிறதாம். அதாவது பொருளாதார தீண்டாமை. உண்மைதான்! இது களையப்பட வேண்டிய ஒன்றே. இதனால்தான் அத்திவரதர் தரிசன நிகழ்வுகளை அடியேன் மிக காட்டமாக விமர்சித்து இருந்தேன். சிவக்குமார் போன்ற சினிமா கூத்தாடிகளுக்கு உடனடி தரிசனம், ஏழை பக்தனுக்கு அத்தனை சோதனை. ஆனால், இந்த பொருளாதார தீண்டாமை கோயிலில் மட்டும் இல்லையே ? சமூகத்தின் அனைத்து தரப்பிலும் இருக்கிறதே ? அதுவல்லவா துரதிஷ்டவசமாக நம் கோயில்களிலும் பிரதிபலிக்கின்றது ? 

சிவக்குமாரின் மகன் சூர்யா ஒரு படத்தின் மொத்த பட்ஜெட்டில் பாதிக்கு மேல் சம்பளமாய் பெறுகிறார். ஏழை லைட்பாய், துணை நடிகர்கள் எத்தனை கஷ்டப்பட்டு நாட்கணக்கில் நடித்தாலும் ஐநூறு, ஆயிரம்தான் பெறுகிறார்கள். உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ஒரு ஸ்டண்ட் நடிகனுக்கு என்ன பெரிய சம்பளம் ? வெறும் தொடையை காட்டிவிட்டு, “என் இடுப்பை பார்த்தல்ல?” என டயலாக் பேசிவிட்டு, கோடிகளில் பணத்தை அள்ளும் அவரின் மருமகளுக்கு என்ன சம்பளம் ? துணை நடிகர்கள், கலைஞர்கள் என பலரின் பெயர் திரையில் கூட காட்டப்படுவது இல்லையே ? எப்படிப்பட்ட பொருளாதார தீண்டாமை இது ?

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

உடனே செல்ஃபி சிவக்குமார்; நான், என் மகன்கள், துலுக்க மருமகள் இனிமேல் இந்த பொருளாதார தீண்டாமையை எதிர்த்து சினிமாவில் நடிக்க மாட்டோம் என்று சொல்வாரா ? குறைந்தபட்சம் இது குறித்து மேடையில் பேசுவாரா ?

ஊருக்கு உபதேசம் செய்யும் செல்ஃபி சிவக்குமார் அவர்களே; திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்.!!

#சர்வம்_கிருஷ்ணார்ப்பணம்

  • எஸ் குமார்

ஐயா #சிவக்குமார் அவர்களே!

சிவலிங்கத்தின் மீது ஏறி நின்னு செதுக்கிய சிற்பி இப்ப கருவறைக்குள் போக முடியலைனு நீங்க வருத்தப்பட்டுப் பேசியது குறித்து எனக்கு ரொம்ப சந்தோசம். அப்படியே,

நாற்காலி செய்த தச்சர் வந்தால் பிரதமரேயானாலும் எழுந்து அவரை உட்கார வைக்கணும்,

நகை செய்து கொடுத்த ஆசாரி தேவைப்படும் போதெல்லாம் வந்து எடுத்து அடகு வைத்துக் கொள்ளணும்,

ஹோட்டலில் நாம் சாப்பிடும் தட்டிலிருந்து சமையற்காரர் எப்ப வேணும்னா வந்து எடுத்து சாப்பிட்டுக்கலாம்,

அளவெடுத்து ப்ளௌஸ் தைத்த டெய்லர் தான் வந்து அதைக் கழட்டணும்,

மொபைல் த…. ( ஐயய்யோ வேணாம் நான் புது மொபைல் வாங்கத் தயாரில்லை)

ALSO READ:  அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி...!

மேலும் தங்கள் வீட்டை கட்டியவரும் ஒரு கொத்தனார் தானே அவரை உங்கள் வீட்டின் படுக்கையறைக்கு அனுமதிப்பீரா?

இதுகளுக்கும் சேர்த்து கொரல் கொடுத்தீங்கன்னா உங்க வயசுக்கு கூடுதல் மரியாதையா இருக்கும்.

ஐயா, என்ன தான் பெத்து, தோளிலும் மாரிலும் போட்டு இளவரசி மாதிரி வளர்த்தாலும், ஒத்த தாலியைக் கட்டின உடன் அவள் மொத்தமா அவ புருஷனுக்குச் சொந்தமாயிடுவா . இல்லையா?
நான் தான் பெத்து வளர்த்தேன்னு கணவனோட உரிமையெல்லாம் ஒரு அப்பன்காரன் கேட்கக் கூடாது, கேட்கவும் மாட்டான் என்பது பெண்ணைப் பெற்ற உங்களுக்குத் தெரியாததா?

சிற்பி செதுக்கியது சிலை. அதில் காலையும் வைக்கலாம் தலையையும் வைக்கலாம். ப்ரதிக்ஷ்டை பண்ணியதும் அது விக்ரஹம். அதனை, அதற்கேயுரிய மரியாதையுடன் குருக்கள் தான் நடத்துவார். வேறு யாரும் உரிமை கோரக் கூடாது.

போதும்ய்யா உங்க சமூக சேவை! இனி மேடைகளில் ஏறாதீர்கள். ஏறினாலும் மைக்கைப் பிடிக்காதீர்கள். உங்கள் மரியாதையை நீங்கள் தான் காப்பாத்திக்கணும்!

– ஆனந்தன் அமிர்தன்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img