February 20, 2026, 4:09 PM
31.2 C
Chennai

போட்டது 5 கிமீ., சாலை! ஆனா ஆர்டிஐ.,யில் சொன்னது 32 கிமீ.,! மதுரை மாநகராட்சியின் லட்சணம்!

madurai-vaigai
madurai-vaigai

மதுரை வைகை நதி தெற்கு கரையோரப் பகுதிகளில் தெப்பக் குளத்திலிருந்து விரகனுர் வரை 5 கிலோ மீட்டருக்கு சாலை அமைத்து… 32 கிலோ மீட்டர் சாலை அமைத்ததாக RTI க்கு தவறான தகவல் அளித்த மதுரை மாநகராட்சி!

மதுரை: 81கோடி மதிப்பில்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை நதியின் இரு கரையோரங்களிலும் ஜியோ டாக் எனப்படும் வைகைநதி எல்லை வரையறை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .

இதில் தெப்பக்குளத்தில் இருந்து விரகனூர் வரையிலான ஐந்து கிலோ மீட்டர் சாலை மட்டுமே சீரமைக்கப்பட்டுள்ளது.
 மீதமுள்ள 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைக்கான பணிகள் நடந்து வருகிறது .

 சென்னையைச் சேர்ந்த வக்கீல் கனகராஜ் என்பவருக்கு மதுரை மாநகராட்சி தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் அளித்த பதில் மனுவில் 32 கிலோ மீட்டர் சாலை பணிகள் முடிவடைந்தது உள்ளது. மீதமுள்ள 10 கிலோ மீட்டர் சாலை பணிகள் மட்டும் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளது .
முடிவடையாத பணிகளை முடிவடைந்ததாக கூறிய தகவல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

இதனை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  வழக்கறிஞரும் தமிழக தகவல் உரிமை பிரிவு தலைவருமான கனகராஜ் என்பவர்  இன்று ஆய்வு செய்தார் அதில் தெப்பக்குளத்தில் இருந்து விரகனூர் வரையிலான பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.
ஆனால் மீதமுள்ள பணிகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.

அதற்கு முன்னதாகவே 32 கிலோமீட்டர் பணிகள் முடிவடைந்ததாக பொய்யான தகவல்களை அளித்துள்ளனர். மேலும் விரகணூர் அணை பகுதியில் உள்ள மடைகளில் வெங்காயத் தாமரை சூழ்ந்துள்ளதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் உள்ளது.

மேலும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு செல்லும் தண்ணீரின் அளவு வெளியேற்றும் போது முழுமையாக பாதிக்கப்படுகிறது.

வெங்காய தாமரை விரகனூர் டேமில் இருப்பதால் அங்கு மீன் போன்ற உயிரினங்கள் வாழ்வதற்கு தடையாக உள்ளது. இதனை பொதுப்பணித்துறை அகற்ற வேண்டும் என்றும் மதுரையில் உள்ள அமைச்சர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories