மாத விலக்கு காலத்தில் பெண்கள் கோயிலுக்குப் போனால் என்ன?

temple deepam - 2026

மாத விலக்கு காலத்தில் பெண்கள் கோயிலுக்குப் போனால் என்ன? இப்படிக் கேள்வி எழுகிறது. இது போன்ற கேள்வி புதிதல்ல.

தந்தையின் செருப்பை அணிந்து கொண்டு ஒரு குழந்தை கேட்டது, ” அப்பா எதுக்கு இவ்வளவு பெரிய செருப்பைப் போட்டுக் கொண்டு வேக வேகமாக நடக்கிறார்?” இந்தக் குழந்தைக்கு விளக்கம் கொடுத்தாலும் புரியாது.. அதற்கு இன்னும் அறிவு வளரும்போதே புரியும்.. அது போலத்தான் மாத விலக்கு காலத்தில் பெண்களை ஏன் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதும்.

நிச்சயமாய் அனுமதிக்கலாம்.. கோயிலுக்குள் நிச்சயமய் அனுமதிக்கலாம். அனுமதிக்க வேண்டும் என்பவர்கள் ஒரு கோயிலைக் கட்டி அங்கே நிச்சயமாய் அனுமதிக்கலாம். பாரம்பர்யப் பழக்கவழக்கம் உடைய கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்று சொல்வது ‘பக்கத்து வீட்டுக்காரன் அவன் வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று மூக்கை நுழைப்பது போன்றதுதான்.

கோயில் என்பது ஏதோ தெய்வ சிலையை வழிபட்டு விட்டு பிரசாத்தை வாயில் அடைத்துக் கொண்டு வீட்டுக்கு வருவது என்ற வழக்கமாக்கி கொண்டு விட்ட காலத்தில் எதை வேணா கேள்வி கேட்கலாம்தான். கோயில் என்பதும் கழிப்பறை போல ஆகி விட்டது. உடல் கழிவைப் போக்கக் கழிவறை போன்று மனக் கழிவுகளைக் கொட்ட கோயில் என்றாகி விட்டது. புலம்புவதற்கு ஒரு இடம் அது என்றாகிவிட்ட நிலையில் எதை வேணா பேத்தலாம். ஆகம பாரம்பர்யங்களை புரிதல் இன்றி கேள்வி கேட்கலாம்..

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

தன்னுடய அபிலாஷை, பேராசைகளை, தீர்த்துக் கொள்ள கோயில் சாமி என்றாகி விட்ட பின், நுகர்வு மனப்பான்மையில் எதை வேணா கேள்வி கேக்கலாம்தான்.
அறமற்ற துறை நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்ட பின் கோயில் என்பதும் வியாபாரத் தலம் ஆகிவிட்ட நிலையில் கோயில் விதிகள் எதை வேண்டுமானாலும் மாற்றியாகி விட்டது

கோயில் என்பது சக்தி மையம். கோயிலை சுற்றித்தான் பாரதீயர்களின் வாழ்க்கை முறை இருந்து வந்தது. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஔவைக் கூற்று. ஆகம விதிப்படி அமைந்த பாரம்பர்யக் கோயில்களின் விதிகளைப் பற்றி தாந்தோன்றித்தனமாகக் கேள்வி எழுப்பாமல் மரபை மதிக்கப் பழக்கிக் கொள்ளுங்கள்.

மாத விலக்கு காலத்தில் கோயிலுக்குப் போவதைப் பற்றி பக்தி நிரம்பிய பெண்கள்(தாய்மார்கள்) முடிவு செய்து கொள்வார்கள்.

-வி.ரங்கநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories