காங்கிரஸ் மேற்கொள்ளும் விஷம பிரசாரம்: அரசியல் அமைப்பையே மாற்றுவார்களாமே!

rahul gandhi narendra modi - 2026

காங்கிரசும் மற்ற கட்சிகளும் “2019இல் பாஜக கூட்டணி மீண்டும் வந்தால் அரசியலமைப்பை முற்றிலும் மாற்ற திட்டமிடுகிறார்கள். சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க திட்டமிடுகிறார்கள்” என்று ஒரு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அரசியலமைப்பை பாராளுமன்றம் தன் விருப்பப்படி மாற்றவோ திருத்தவோ முடியுமா? பாராளுமன்றத்தால் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கபப்ட வாய்ப்புள்ளதா? ஒரே கட்சி அத்தனை இடங்களிலும் வென்று பெரும்பான்மையுடன் இருந்து அரசியலமைப்பை தன்னிஷ்ட்டப்படி மாற்ற இயலுமா? இப்படி அரசியலமைப்பை முற்றிலும் மாற்றுவது சாத்தியமா என்றால் இல்லை என்பதே பதில்.

ஏப்ரல் 24, 1973இல் கேரள அரசுக்கு எதிராக கேசவானந்த பாரதி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்ற 13 பேர் அமர்வு வழங்கிய தீர்ப்பில், “பாரத பாராளுமன்றத்தின் அத்தனை உறுப்பினர்களும் சம்மதித்தாலும், பாரத அரசியலமைப்பை அதன் ’அடிப்படை கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய அம்சங்களை மாற்றாத வகை’யில் மட்டுமே திருத்த இயலும்” என்று உறுதி அளித்திருக்கிறது.

எனவே, இப்போதிருக்கும் அரசியலமைப்பை செல்லாததாக அறிவித்து புதியதோர் அரசியலமைப்பை திணிக்க இயலாது.

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

இது இப்படியிருக்க, இந்த காணொளியில் ஆ ராசா கட்டுக்கதையை அவிழ்த்து விடுகிறார். குறிப்பாக, “இது மதச்சார்பற்ற செக்குலர் நாடல்ல என மோடி அறிவிக்க போகிறார்” என பயமுறுத்துகிறார் ராசா. வழக்கறிஞரான ராசாவுக்கு மறந்து போயிருக்கும் இந்த செக்குலர் வார்த்தையை அரசியலமைப்பில் தேவையில்லாமல் திணித்தது இந்திரா என்று.

மேலும், மத தெரசாவுக்கு “இந்தியா” நோபல் பரிசு கொடுத்ததாக சொல்கிறார். அமெரிக்கா பட்டம் கொடுத்ததாகவும் சொல்கிறார்.

நோபல் பரிசு கொடுக்க இந்தியாவில் கிளை ஆரம்பித்திருந்தார்களோ தெரியாது.

அது போக, மத தெரசா தனக்கு நன்கொடை அளித்த அமெரிக்கருக்கு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை கொடுத்ததை எதிர்த்து அமெரிக்க நீதிபதிக்கு, ‘அவர் ஒரு கிறிஸ்தவர். அவரை மன்னியுங்கள்” என கடிதம் எழுத, அதற்கு பதிலாக, “எங்கள் நீதி மன்ற செயல்பாட்டில் தலையிடுவது குற்றம்” என்று கூறி எச்சரித்தார். அந்த குற்றவாளியும் சிறை சென்றார். அதே வேலையை இன்று தெரசா செய்திருந்தால், “நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்ட குற்றத்துக்காக மத தெரசாவை சிறையில் தள்ளுங்கள்” என பொதுநல வழக்கு தொடுத்திருப்பார்கள்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

நன்கொடை கொடுத்தது குற்றவாளி என்று தெரிந்தும் அந்த பணத்தை திருப்பி அனுப்பவில்லை மத தெரசா. அப்பேர்ப்பட்ட புனிதர் அவர்.

அவருக்கும் வக்காலத்து வாங்குகிறார் ஸ்தோத்திரம் பாடும் ராசா.

Kesavananda Bharati v State of Kerala – The case that saved Indian democracy: All this effort was to answer just one main question: was the power of Parliament to amend the Constitution unlimited? In other words, could Parliament alter, amend, abrogate any part of the Constitution even to the extent of taking away all fundamental rights?

The 703-page judgment revealed a sharply divided court and, by a wafer-thin majority of 7:6, it was held that Parliament could amend any part of the Constitution so long as it did not alter or amend “the basic structure or essential features of the Constitution.” This was the inherent and implied limitation on the amending power of Parliament. This basic structure doctrine, as future events showed, saved Indian democracy and Kesavananda Bharati will always occupy a hallowed place in our constitutional history.
https://www.thehindu.com/opinion/op-ed/the-case-that-saved-indian-democracy/article4647800.ece

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories