முதலமைச்சர் ஏன் பதவி விலக வேண்டும்…?!

edappadi pazanisay - 2026

குற்றச்சாட்டு கூறப்படுவதாலேயே ஒருவர் ராஜினாமா செய்ய வேண்டுமா?

முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவது நியாயமா?

சுதந்திரத்திற்குப் பின்னான இந்திய அரசியல் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் இப்படிப் பதவி விலகியோர் பட்டியல் உள்ளது.

அரியலூர் ரயில் விபத்துக்குத் தார்மீகப் பொறுப்பு ஏற்று அன்றைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினார்.

முந்த்ரா குற்றச்சாட்டு காரணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.கே. கிருஷ்ண மேனன் ராஜினாமா செய்தார்.

சுப்ரீம்கோர்ட் விசாரணை காரணமாக சுரங்கத்துறை அமைச்சர் மாளவியா,

நீர்மூழ்கிக்கப்பல் வாங்குவதில் புகார் கூறப்பட்டதால் வி.பி. சிங்,

பங்கு பரிவர்த்தனை குற்றச்சாட்டு காரணமாக அன்றைய நிதித்துறை இணை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் பதவி விலகி இருக்கிறார்கள்.

விமானவிபத்து காரணமாக மாதராவ் சிந்தியா,.

ஷா பானு வழக்கு தொடர்பாக ஆரிப் முகமதுகான்,

ஜெயின் ஹவாலா டயரி குறிப்பு விவகாரத்தில் எல்.கே.அத்வானி,

சுப்ரீம்கோர்ட் கண்டித்ததால் ஆந்திர முதல்வர் சஞ்சீவரெட்டி,

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

பாலியல் புகார் காரணமாக கேரளப் போக்குவரத்து மந்திரி சசிதரன் ..இவ்வாறு பல உதாரணங்கள்!

வாஜ்பாய் காலத்தில் சேடப்பட்டி முத்தையா, ஜெயலலிதா காலத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்று தமிழக எடுத்துக்காட்டுகளும் இல்லாமல் இல்லை.

“ME TOO” ஹேஷ்டாக்கில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நிர்ப்பந்தம்.

இப்படியான சூழலில்-

“என் சம்பந்திக்கு நெடுஞ்சாலை ஒப்பந்தம் அளித்தால் என்ன தப்பு?” என்று முதல்வர் கேட்டது அரசியல் அகராதியில் இறுமாப்பாகவே கொள்ளப்படும்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் எந்த மத்திய அமைச்சர் மீது குற்றஞ்சாட்டப்பட்டாலும் அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டாலும் தார்மிக அடிப்படையில் அவர்கள் விலக வேண்டும் என்று அதிகம் வலியுறுத்தியதே பா.ஜ.கதான்.

இந்த வாதத்தை நாடாளுமன்றத்தில் வலுவாக எழுப்பிப் பல அமைச்சர்கள் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தில் முதல்வர் பதவி விலக வேண்டியது இல்லை என்ற நிலைப்பாட்டை பாரதிய ஜனதா எடுத்து இருப்பது விசித்திரம் தான்.

ALSO READ:  அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

“தர்ம, அர்த்த, காம’’ என்பது வட மொழிச் சொற்றொடர்

அதே வரிசையில் வருவதே தமிழின் உயர் தத்துவங்களில் ஒன்றான ‘’அறம், பொருள், இன்பம்!’’

அறம் அழிந்து பொருளே முதன்மை என்று வந்தால் “அறம் பிழைத்தோர்க்கு அரசியல் கூற்றாகும்!” அல்லவா?

  • பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories