வருக்க தோச… முறுக்க தோச… டீ..க் காப்பி.. டிபன் சாப்டுறவங்கள்லாம் இறங்குங்க.. வண்டி 5 நிமிசம் நிக்கும்!

dosai - 2026

ஈவேரா பெரியார் தான் தமிழகத்தில் சாதியை ஒழித்தார்; ஈவேரா இல்லை என்றால் ஆதிக்க சாதியினரால் தமிழர்கள் அடிமைப் பட்டு இருப்போம் என்று சொல்லி சாதியக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய , சாதி ஒழிப்பு நாயகர் என்று குறிப்பிட்டு பல்வேறு தளங்களில் அறிவுக்கும் சம்பந்தம் இல்லாத எழுத்தாளர் பெயரில் தினம் தினம் சாதிவெறி கருத்துக்களை பேசிவரும் திரு மதிமாறன் என்பவரின் சமீபத்திய கண்டுபிடிப்பு கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன் .

தோசை சுடுவது எப்படி?… – என்று வகுப்பு எடுப்பது போல தோசைக்கு சாதி சாயம் பூசிய சாதி ஒழிப்பு போராளி மதிமாறன் சரி ஒரு உணவு இந்த உணவில் எங்க சாதி வந்தது அவர் சொல்லுகிறார் நைஸ் தோசை சாப்பிடுபவர்கள் பார்ப்பனர்கள்.
ஊத்தாப்பம் என்று சொல்லுவார்கள். ஒரு சிலர் கல் தோசை என்று சொல்வார்கள்! இது எல்லாம் சாதாரண சாதியினர் சாப்பிடக்கூடியது என்று சொல்லுகிறார் .
தோசை சாதி கண்டுபிடித்த மிகப்பெரிய அறிவாளி… அவரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று பலர் கேட்கிறார்கள்.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

கேள்வி1 : நைஸ் தோசை பார்ப்பனர்களுக்கு சாதா தோசை மற்றவர்களுக்கு அப்படியானால் ஆனியன் தோசை முட்டை தோசை எல்லாம் எந்த சாதியினருக்கு என்று இவரிடம் இனிமேல் கேட்க வேண்டும்?

கேள்வி 2: இட்லி மல்லிப்பூ இட்லி குஷ்பூ இட்லி ரவா இட்லி இவை எல்லாம் என்ன ஜாதி

கேள்வி 3 : ரவா தோசை ஆனியன் தோசை கீரை தோசை மசால் தோசை இவையெல்லாம் எந்த சாதி பட்டியலில் வருகிறது

கேள்வி 4 : உளுந்த வடை பருப்பு வடை கீரை வடை ஆமவடை இது பட்டியல் சார் இது என்ன சாதி பிரியாணி சாதா , குஸ்கா halal பிரியாணி இவையெல்லாம் என்ன ஜாதி

கேள்வி 5 fried rice என்று சொல்லும் வறுத்த சோறு உணவு என்ன சாதி?

இப்படி உணவு வகைகளுக்கு எல்லாம் சாதி பட்டியல் வேண்டும் என்றால் அணுக வேண்டிய முகவரி:  பகுத்தறிவு பகலவன் பெரியாரின் பேரன் 9 அறிவு நாயகன் திருமதி மாறன்

இதுபோன்று ஒரு பகுத்தறிவாளி மிகப்பெரிய அறிவார்ந்த வாதத்தை முன் வைத்தார்…  என்னவென்றால் தோசை ஏன் ஓட்டை ஓட்டையாக இருக்கிறது?

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

அந்த பையன் சொன்னான்… தோசை ஓட்டை ஓட்டையாக இருப்பதற்கு காரணம் தோசை சுடுவது! அதனால் ஓட்டை ஓட்டையாக இருக்கிறது என்று சொன்னான் .

மேலும் கேள்வி கேட்டான் தோசையை ஏன் திருப்பி போடுகிறோம்? அதற்கு அந்தப் பையன் சொன்னானாம் – தோசையை திருப்பிப் போட முடியாது சார் அதனால்தான் தோசையை திருப்பி போடுகிறோம் என்று சொன்னான்.

மதிமாறனின் தோசைக்கு சாதி சான்றிதழ் வாங்க அரிய கண்டுபிடிப்பு கண்டு பிடித்ததால் அவரது பேச்சைக் கேட்டு எதனால் சிரிப்பது என்று தெரியவில்லை.

மதிமாறனின் பேச்சு எப்படி இருக்கிறது என்றால் க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும் நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா என்பது போல் இருக்கிறது! நாத்திகனாக இருந்து ஆத்திகனாக நிறைவு நாள் வரை வாழ்ந்த கவியரசர் கண்ணதாசன் சொல்லுகிறார் … நான் உணவகங்களில் சாப்பிட போனால் தோசை எப்படி இருக்கிறது என்று தான் சாப்பிட வேண்டும்! நன்றாக இருக்கிறதா சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்… அதை விட்டுவிட்டு சமையலறையில் சென்றால் அந்த விளக்கத்தை வைத்துக் கொண்டுதான் தோசை சட்டியை சுத்தம் செய்வார் என்று சொல்லுவார்

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

அதுபோல உணவுகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு அதில் சாதி ஆராய்ச்சி செய்வது பகுத்தறிவு என்றால் அந்த பகுத்தறிவு எதற்கு சமம்

செட்டிநாட்டு உணவிலேயே தோசையும் இருக்கிறதுதானே! இல்லை என்றால் எங்கள் அய்யா சுபவீ கோபித்துக் கொள்ளப் போகிறார் ஐயா? நண்பரே இந்த தயிர் வடை எல்லாம் என்ன ஜாதி கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் பதிலுக்காக காத்திருக்கிறேன்!

ரொம்ப கேள்வி கேட்டேன் நண்பர் மதிமாறனுக்கு இரண்டு கல்லு பார்சல் … அட ஊத்தாப்பத்தை சொன்னேன் கல் தோசையை சொன்னேன்..!

இராம. இரவிக்குமார்

(பொதுச் செயலர், இந்து மக்கள் கட்சி)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories