இலங்கை குண்டுவெடிப்புக்குக் காரணம்… தமிழக ’மீம்ஸ்’ போராளிகள்!

Published:

sasikumar horz - 2026

கோவை சசி குமார் படுகொலையும், இலங்கை குண்டு வெடிப்பும்!
கோவையில் இந்துமுன்னணியின் சசி குமார் படுகொலை தமிழக அளவில் அதிர்வலையை உருவாக்கியது.

ஆனால் இந்த படுகொலையை கள்ளகாதல் படுகொலையாக இருக்கலாம், என முதலில் முழங்கியது கம்யூனிஸ்கள். தொடர்ந்து திமுக, வி.சி.க, என பலகட்சிகளும் பல காரணங்களை சொன்னதோடு, நடுநிலைவாதிகள் என கூறிக்கொண்ட இந்துக்கள் மத்தியில் இதை நம்பவைக்க முயன்றனர்.

இதைத் தொடர்ந்து இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய கலவரத்தில், இந்த ஓசி பிரியாணி, திராவிட மதசார்பற்ற மதவாத அரசியல்வாதிகள், பிரியாணி அண்டாவை தேடி அலைந்தனர். ஆனால் இந்து இயக்கங்கள் மத்திய அரசிடம் கொடுத்த அழுத்தம் காரணமாக வழக்கு சரியான திசையில் பயணிக்க ஆரம்பித்தது.

வழக்கு சிபிசிஐடி வசம் மாறியது. இறுதியில் நான்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் அவர்கள்,’பாப்புலர் ஃப்ரென்ட் ஆப் இந்தியா” என்னும் வன்முறை அமைப்பினர் என்பது உறுதியானதோடு ஏராளமான ஆவணங்களும் சிக்கின.

ALSO READ:  FCRA சட்டம்; வெளிநாட்டு சதிகளும் உள்நாட்டு அரசியலும்!

ஒரு கட்டத்தில் இந்த வழக்கில் சர்வதேச முஸ்லீம் தீவிரவாத நெட் ஒர்க் தொடர்பிருப்பது தெரியவந்ததும் வழக்கு ‘தேசிய புலனாய்வு முகமை’க்கு மாற்றப்பட்டது.

விசாரணையில் தமிழகம் மற்றும் கேரளாவில் பல இஸ்லாமிய இயக்க நபர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பிருப்பது தெரிய வந்தது.

அவர்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் பல இந்து இயக்க தலைவர்களை, கொலை செய்யவும்வும், தமிழகத்தில் பல இடங்களில் குண்டு வைக்கவும் திட்டமிட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

மத்திய தேசிய புலனாய்வு முகமை உடனடியாக களத்தில் இறங்கி கோழி அமுக்குவது போல் பல தீவிரவாதிகளை கைது செய்தது. கடைசியாக கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி பரேலில் வந்து செய்த திருமணத்தில் பலதீவிரவாதிகள் பங்கேற்பதாக வந்த தகவலின் பேரில் கொத்தாக ஐந்து பேரை தூக்கியது.

அந்த தீவிரவாதிகளிடம் நடந்த விசாரணையில் , தமிழகத்தில் மத்திய புலனாய்வு முகமை சுற்றி வளைக்க ஆரம்பித்ததால் தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்கு இலங்கைக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது.

அப்போதே இலங்கையில் தாக்குதல் நடக்கவிருக்கும் தகவல் இந்திய உளவுத்துறைக்கு கிடைச்சிருக்கு. அதுமட்டுமில்லாமல இலங்கை தீவிரவாதிகளோடு நேரடி தொடர்பிலும் இந்த கோவை தீவிரவாதிகள் இருந்துள்ள்ளனர். இதனால் தான் இந்திய உளவு துறை இலங்கையில் குண்டு வைக்கவிருக்கும் தீவிரவாதியின் பெயர், முகவரி வரை தெளிவாக கொடுத்துள்ளது.

ALSO READ:  மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி... தமிழகத்தில் இவை எப்படி?

இப்படி ஒரு அபாயகரமான விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, தமிழக பாதுகாப்பை உறுதி செய்ய, தீவிரவாதிகளை முன்னெச்சரிக்கையாக கைது செய்து விசாரணைக்கு கொண்டு சென்ற போது தமிழகத்தின் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்ன சொன்னது தெரியுமா?

மத்திய அரசின் மதவாத அரச பயங்கரவாதம்!
சிறுபான்மை மீதான அடக்குமுறை!
பாசிச பாஜக!

  • Rejeesh Kumar

Related articles

Recent articles

spot_img