மனைவியை கொல்ல கதவில் மின்சாரம் பாய்ச்சி மாமியாரை கொன்ற நபர்..

152726 - 2026

மத்தியபிரதேச மாநிலம் பிடுல் மாவட்டம் சாய்ஹிடா என்ற கிராத்தை சேர்ந்தவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மது பழக்கம் கொண்ட அந்த நபர் மது குடித்துவிட்டு மனைவியை அவ்வப்போது தாக்கவும் செய்துள்ளார். இதனிடையே, கணவன் – மனைவி இடையே நேற்று முன் தினம் இரவு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதையடுத்து அந்த பெண் தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். மாமியார் வீட்டின் முன் வாசலில் இரும்பால் ஆன கதவு உள்ளது. இந்நிலையில், சண்டையிட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மாமியார் வீட்டிற்கு வந்ததால் அந்த நபர் தனது மனைவி மீது மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார். பின்னர், தனது மனைவியை கொலை செய்ய எண்ணிய அந்த நபர் மாமியர் வீட்டின் இரும்பு கதவு மீது மின்சாரம் பாய்ச்சியுள்ளார். மின்சார ஒயரை இரும்பு கதவில் உரசும்படி வைத்து கதவில் மின்சாரத்தை பாய்ச்சியுள்ளார்.

ஆனால், மனைவியை கொலை செய்ய பின்னிய சதி வலையில் சிக்கி மாமியார் உயிரிழந்துள்ளார். மின்சாரம் பாய்ச்சிய அந்த கதவை அந்த நபரின் 55 வயதான மாமியார் திறந்துள்ளார். அப்போது, உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மாமியார் உயிரிழந்தார்.

இதை அருகே ஒளிந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், அப்பகுதியில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கதவை திறந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த அந்த பெண்ணை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், மனைவியை கொல்ல சதி திட்டமிட்டு கதவில் மின்சாரம் பாய்ச்சி மாமியாரை கொன்றுவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

Topics

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Entertainment News

Popular Categories