மதுபோதையில் மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை,இளைஞர் போக்சோவில் கைது..

Published:

                  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுபோதையில் மூதாட்டிக்குப்பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

              அருப்புக்கோட்டை எம்.டி.,ஆர்.நகரில் வசிப்பவர் இருளன் என்பவரது மனைவி குட்டியம்மாள்(60).இவரது கணவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டாராம்.இதனால் குட்டியம்மாள் தனது தாய் இருளாயி என்பவருடன் வசித்து வருகிறாராம்.இதனிடையே கடந்த 15ம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் அவரது வீட்டிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் திடீரென கத்தியைக்காட்டி மிரட்டி,பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.அப்போது குட்டியம்மாள் உதவி கேட்டு சப்தமிடவே அக்கம் பக்கத்து வீட்டினர் உதவிக்கு வந்தபோது, அந்த இளைஞர் தப்பியோடிவிட்டாராம்.

இதுதொடர்பாக குட்டியம்மாள் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார்செய்தார்.இதன்படி விசாரணை மேற்கொண்டதில் குட்டியம்மாளுக்கு அருப்புக்கோட்டை விவிஆர் நகரைச்சேர்ந்த இருதயராஜ் மகன் அந்தோணி ஜூடு என்பவர் மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வரவே,அவ்விளைஞரான அந்தோணிஜூடு மீது ஞாயிற்றுக்கிழமை இரவு போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, அவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
images 2022 10 17T194725.736 - 2026
ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img