December 5, 2025, 11:58 AM
26.3 C
Chennai

ஜி7 மாநாடு: பொருளாதாரத்தில் மீண்டு வரும் பாரதத்தின் பங்கேற்பு!

pm modi in rajastan pikaneer - 2025

கனடாவில் ஜி7 மாநாடு. இது இப்போது பேசு பொருளாகியிருக்கிறது இந்தியாவில். காரணம், இதனுள்ளே பொதிந்திருக்கும் அரசியல். முக்கியமாக காங்கிரஸ் செய்த அரசியல்.

இந்த ஆண்டு ஜி7 கூட்டத்தை நடத்தும் கனடா, பாரதப் பிரதமர் மோடிக்கு அழைப்பு கொடுக்காமல் அசிங்கப்படுத்தியது” என்று காங்கிரஸ் ஒரு புறம் புரளி கிளப்பியது. மறுபுறம் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “இந்த ஆண்டு ஜி7 கூட்டத்தை கனடா நடத்துவதால் அதை பாரதப் பிரதமர் மோதிஜி புறக்கணித்துள்ளார்” என்று பாஜக., சமூகத் தளங்களில் பகிர்ந்து வர, ஜி7 கூட்டத்தை வைத்து ஓர் அரசியல் இந்தியாவில் பரபரப்பானது.

காங்கிரஸ் இவ்வாறு இந்த விஷயத்தைப் பேசிய போதே, அதில் சர்வதேச அரசியல் பொதிந்திருப்பதை இந்தியாவில் பலரும் புரிந்து கொண்டனர். காரணம், டீப் ஸ்டேட். அதற்கேற்ப, திடீரென கனடா பிரதமர், பாரதப் பிரதமரை தொலைபேசியில் அழைத்து, அவரது மறுமொழிக்காகக் காத்திருந்து, ஜி7 மாநாட்டுக்கான அழைப்பை விடுத்ததற்கு கனடாவின் இடதுசாரி ஊடகங்கள் டீப் ஸ்டேட் வகையறாவின் குரலை எதிரொலித்தன.

கனடாவில் இடதுசாரி ஊடகங்கள், டீப் ஸ்டேட்டின் கையாளாக கனடாவின் புது பிரதமராக அமர்த்தப் பட்டிருக்கும் கார்னேயிடம், “மோடி இங்கே நிஜ்ஜர் உள்ளிட்டோரை இவ்வுலகில் இருந்து அனுப்பி வைத்த குற்றச்சாட்டு இருக்கும் போது அவரை ஏன் அழைக்கிறீர்கள்?” என்று கேட்டன.

அதற்கு கனடா பிரதமர், “சட்டப்படி விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அது பற்றி நான் பேச மாட்டேன். மேலும் பாரதம் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம். அதைப் புறக்கணித்து ஜி7 நடத்த முடியாது” என்றார். தொடர்ந்து கேள்விகள் எழுந்ததால், “இது என் முடிவில்லை. இது ஜி7இன் பிற உறுப்பு நாடுகளின் முடிவு” என்று பதிலளித்து, பத்திரிக்கையாளர் சந்திப்பை ஒருவாறு முடித்துக் கொண்டார்.

இதனிடையே, நேற்று பாரதப் பிரதமர் மோடி தன் எக்ஸ் தளப் பக்கத்தில், “கனடா பிரதமர் அழைப்பை ஏற்று ஜி7ல் கலந்து கொள்கிறேன்” என பதிவு செய்தார். உண்மையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதால் பாரதத்துக்கு ஏதேனும் பலன் விளையாது என்று நினைத்திருந்தால், நிச்சயம் பிரதமர் மோடியே இந்த அழைப்பை நிராகரித்திருப்பார்.

இந்தப் பின்னணியில், இதனுள்ளே பொதிருந்திருக்கும் அரசியலைச் சற்றே பார்க்கலாம். 2025ல் கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டுக்கு இந்திய பிரதமர் மோடியை அழைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. தொடக்கத்தில் அமைதியாக இருந்துவிட்டு, திடீரென இந்த அழைப்பு வருவது போல் தோன்றினாலும், இதன் பின் அரசியல், ராஜதந்திர, புவிசார் அரசியல் காரணங்கள் இருப்பதை உணர முடிகிறது. கனடா பிரதமரே சொன்னது போல, இதை பிற உறுப்பு நாடுகள் வலியுறுத்துகின்றன என்று பார்க்கும் போது, மோடியின் வருகையை முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்நாடுகள் கருத சில காரணங்கள் உள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கனடாவில் காலிஸ்தானி பிரிவினைவாத இயங்களின் வளர்ச்சி, அவற்றைக் கட்டுப்படுத்த இந்தியா எத்தனையோ முறை கேட்டுக் கொண்டும் கண்டு கொள்ளாமல் உள்ளூர் அரசியலை கருத்தில் கொண்டு கனடா செயல்பட்டதும், 2023ல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றங்களும் இரு நாட்டு உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தியது.

எனவே கனடாவில் நடக்கும் இந்த ஜி7 மாநாட்டுக்கு இந்தியாவிற்கு கனடா அழைப்பு விடுக்கவில்லை என்ற ரீதியில் சொல்லப்பட்டாலும், திடீரென கனடா பிரதமர் மார்க் கார்னி தொலைபேசி மூலம் மோடியைத் தொடர்பு கொண்டு ஜி7 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது. இந்த அழைப்பு, கனடாவின் புதிய தலைமையின் கீழ் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மீட்டெடுக்கும் முயற்சியாக இருக்கலாம் என்றே கருத்து நிலவுகிறது.

இந்தியா ஜி7 உறுப்பு நாடாக இல்லாவிட்டாலும், 2019 முதல் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக ஜி7 மாநாடுகளில் பங்கேற்று வருகிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம், உலகளாவிய தெற்கு நாடுகளின் (Global South) தலைமைத்துவம், புவிசார் அரசியல் செல்வாக்கு ஆகியவை இந்த அழைப்பிற்கு முக்கிய காரணங்களாக உள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் காங்கிரஸ் மேற்கொண்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் இந்த அழைப்பு இருந்ததால், பிரதமர் நரேந்திர மோடி மீது வைக்கப்படுவது போல் தோற்றம் அளித்தாலும், நாட்டின் நற்பெயர் மீதே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வைத்துள்ள எதிர்மறை விமர்சனம் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, பிரதமர் மோடிக்கு உள்ள உலகளாவிய செல்வாக்கு, அவரைப் புறக்கணித்து விட்டு இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த இயலாது என்ற நிலைமையைக் கொண்டுவந்துள்ளது. 2024ல் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, மற்றும் பிற தலைவர்களுடன் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். மேலும், பிரதமர் மோடி உலக அரங்கில் காலநிலை மாற்றம், டிஜிட்டல் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் இந்தியாவின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தி வருவதால், உலக அளவிலான செல்வாக்கு அவருக்கு இருப்பதை மறுக்க முடியாது.

ஜி7 மாநாடுகள் பெரும்பாலும் உறுப்பு நாடுகள் மட்டுமின்றி, உலகளாவிய தெற்கு நாடுகளையும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கொண்டிருக்கின்றன. இது உலகளாவிய பிரச்னைகளுக்கு ஒரு பரந்த கண்ணோட்டத்தை அளிக்கின்றது.

உலகம் எதிர்நோக்கும் பிரச்னைகளான பருவநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும், ஜனநாயக மதிப்புகள் போன்ற முக்கிய விவாதங்கள் ஜி7 மாநாட்டில் மேற்கொள்ளப்படும். இவற்றில் இந்தியா தனது தனித்துவமான அனுபவங்களையும், தீர்வுகளையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

மோடி இந்த மாநாட்டில் பங்கேற்பதன் மூலம், இந்தியா-கனடா உறவுகளை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தை உயர்த்துவதற்கும் உதவக்கூடும். மேலும், உலகளாவிய தெற்கு நாடுகளின் கருத்துகளை ஜி7 மாநாட்டில் முன்னிலைப்படுத்த மோடியின் வருகை முக்கியம் என்பதை பிற உறுப்பு நாடுகள் எண்ணியிருக்கின்றன.

சுதந்திரத்துக்குப் பின் மீண்டு வரும் இந்தியாவின் பொருளாதாரம், மற்றும் ஜி7 நாடுகளுடனான வர்த்தக உறவுகள், மோடியின் பங்கேற்பை முக்கியமானதாக மாற்றியிருப்பதை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். இந்தியா வளர்ந்து வரும் நாடல்ல, பொருளாதாரத்தில் மீண்டு வரும் நாடு என்பதை உலகம் உணர்ந்து கொள்ள பிரதமர் மோடியே தனித்துவ அடையாளமாகத் திகழ்கிறார் என்பது, நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories