பர்தா போட்டு விளையாட முடியாது; ஈரான் செஸ் தொடரை புறக்கணித்த சௌம்யாவுக்கு குவியும் பாராட்டுகள்!

soumya swaminathan - 2026

மத கோட்பாடுகளை விளையாட்டில் புகுத்தும் நாட்டுக்கு என்னால் விளையாடச் செல்ல முடியாது என்று சொல்லி செஸ் போட்டித் தொடரில் இருந்து விலகிய சௌம்யா ஸ்வாமிநாதனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

லட்சத்தில் ஒருவர்தான் இப்படி கொள்கைப் பிடிப்புடன் இருக்க முடியும்! பணம் மற்றும் புகழ் எல்லாம் அதற்குப் பிறகு தான் என்கின்ற உறுதியுடன் கூடிய உணர்வுடன் உள்ள இவரைப் போன்ற சிலராவது இருப்பதால்தான் இந்தியாவின் பெருமையும் மானமும் வெளிநாடுகளில் காக்கப்படுகிறது.

இந்தியன் செஸ் ஸ்டார் செளம்யா சுவாமிநாதன், (இவர் பெண் கிராண்ட்மாஸ்டர்) ஈரானில்  அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆசியன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். காரணம் அங்கு விளையாடும் பெண்கள் முகத்தை மூடும் headscarf அல்லது பர்கா அணிந்து கொண்டுதான் விளையாட வேண்டும்.

இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் நிலமை அனைவரும் அறிந்த ஒன்றே. இதை எதிர்த்து செளமியா சுவாமிநாதன் ஆணித்தரமாக தன் கருத்தை பதிவு செய்து உள்ளார்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

soumya swaminath - 2026

“பெண்களுக்கு எதிரான இந்தச் சட்டமானது என்னுடைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. அது மட்டுமல்லாமல் என்னுடைய கருத்து சுதந்திரம், உணர்வு சுதந்திரம், மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்திற்கும் எதிரானது. எந்த நாடும் அவர்களுடைய மத ஆடை கோட்பாடுகளைதான் விளையாட்டு போட்டிகளில் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்கு இடமில்லை.

இந்த செஸ் போட்டியில் நம் நாட்டிற்காக விளையாட என்னைத் தேர்ந்தெடுத்தது எனக்குக் கிடைத்த பெருமை. ஆனால் சில விஷயங்களை சமரசம் செய்து கொண்டு விளையாட என்னுடைய தன்மானம் என்றுமே இடம் கொடுக்காது. எனவே நான் இந்தப் போட்டித் தொடரில் இருந்து விலகுகிறேன்.” –  என்று பதிவிட்டிருந்தார்.

இந்த போட்டியினால் கிடைக்கக் கூடிய பெரும் பணம் மற்றும் புகழைப் பற்றி இந்த வீராங்கனை கவலைப் படவில்லை. என்ன ஒரு உறுதி, கொள்கைப் பிடிப்பு, பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நினைக்கும் ஒரு அரசுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை அமைதியாக வெளிப்படுத்திய தன்மை. உண்மையான பெண்ணுரிமைப் போராளி.

இதே காரணத்திற்காக 2016ல் ஈரானில் நடைபெற்ற ஆசியன் துப்பாக்கி சுடும் போட்டியில் இருந்து இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீரா சித்து விலகினார்.

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இங்குள்ள ஊடகங்கள், பெண் உரிமைப் பாதுகாவலர்கள் என்று சொல்லி கொண்டு உலவும் சில சங்கங்கள் இது போன்ற பிற்போக்கு தனமான சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பார்களா!?

சௌமியா சுவாமிநாதனுக்கும், ஹீரா சித்துவுக்கும் நமது பாராட்டுக்கள்.

1 COMMENT

  1. திரை போட்டு ஆட முடியாதது ஒன்றே . மறைக்கவேண்டியதை அரைகுறை ஆடைகள் அணிவதால் பலாத்காரம். இந்த பர்தா முறை பாராட்டப்படவேண்டும். பெண்சுதந்திரம் பெண்மை குறிப்பிட்டவர்கள் ரசிப்பதற்கே.
    அறுபது வயது கிழவனுக்கும் என்னை ஒருமுறை பார்த்தால் கிறு கிறுக்கும் என்பது
    திரைப்பட வியாபாரம். இந்த உடல் மூடி ஒழுக்கமாக இல்லாததால் தான் பல கற்பழிப்புகள். மேலை நாட்டு குளிர் அடங்கி இருக்கும் . ஆனால் வெப்ப நாடுகள் .
    நடமாடும் பெண்கள் ஆலயத்தூன் சிலைகள் அல்ல.பலரின் பார்வைபடும் துணிந்த அதிகாரங்கள் கை படும். பெண்களுக்கு ஆடை பாதுகாப்பு. ஆடை சுதந்திரம் பாதிப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Entertainment News

Popular Categories