பர்தா போட்டு விளையாட முடியாது; ஈரான் செஸ் தொடரை புறக்கணித்த சௌம்யாவுக்கு குவியும் பாராட்டுகள்!

soumya swaminathan - 2026

மத கோட்பாடுகளை விளையாட்டில் புகுத்தும் நாட்டுக்கு என்னால் விளையாடச் செல்ல முடியாது என்று சொல்லி செஸ் போட்டித் தொடரில் இருந்து விலகிய சௌம்யா ஸ்வாமிநாதனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

லட்சத்தில் ஒருவர்தான் இப்படி கொள்கைப் பிடிப்புடன் இருக்க முடியும்! பணம் மற்றும் புகழ் எல்லாம் அதற்குப் பிறகு தான் என்கின்ற உறுதியுடன் கூடிய உணர்வுடன் உள்ள இவரைப் போன்ற சிலராவது இருப்பதால்தான் இந்தியாவின் பெருமையும் மானமும் வெளிநாடுகளில் காக்கப்படுகிறது.

இந்தியன் செஸ் ஸ்டார் செளம்யா சுவாமிநாதன், (இவர் பெண் கிராண்ட்மாஸ்டர்) ஈரானில்  அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆசியன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். காரணம் அங்கு விளையாடும் பெண்கள் முகத்தை மூடும் headscarf அல்லது பர்கா அணிந்து கொண்டுதான் விளையாட வேண்டும்.

இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் நிலமை அனைவரும் அறிந்த ஒன்றே. இதை எதிர்த்து செளமியா சுவாமிநாதன் ஆணித்தரமாக தன் கருத்தை பதிவு செய்து உள்ளார்.

ALSO READ:  மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

soumya swaminath - 2026

“பெண்களுக்கு எதிரான இந்தச் சட்டமானது என்னுடைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. அது மட்டுமல்லாமல் என்னுடைய கருத்து சுதந்திரம், உணர்வு சுதந்திரம், மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்திற்கும் எதிரானது. எந்த நாடும் அவர்களுடைய மத ஆடை கோட்பாடுகளைதான் விளையாட்டு போட்டிகளில் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்கு இடமில்லை.

இந்த செஸ் போட்டியில் நம் நாட்டிற்காக விளையாட என்னைத் தேர்ந்தெடுத்தது எனக்குக் கிடைத்த பெருமை. ஆனால் சில விஷயங்களை சமரசம் செய்து கொண்டு விளையாட என்னுடைய தன்மானம் என்றுமே இடம் கொடுக்காது. எனவே நான் இந்தப் போட்டித் தொடரில் இருந்து விலகுகிறேன்.” –  என்று பதிவிட்டிருந்தார்.

இந்த போட்டியினால் கிடைக்கக் கூடிய பெரும் பணம் மற்றும் புகழைப் பற்றி இந்த வீராங்கனை கவலைப் படவில்லை. என்ன ஒரு உறுதி, கொள்கைப் பிடிப்பு, பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நினைக்கும் ஒரு அரசுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை அமைதியாக வெளிப்படுத்திய தன்மை. உண்மையான பெண்ணுரிமைப் போராளி.

இதே காரணத்திற்காக 2016ல் ஈரானில் நடைபெற்ற ஆசியன் துப்பாக்கி சுடும் போட்டியில் இருந்து இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீரா சித்து விலகினார்.

ALSO READ:  தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

இங்குள்ள ஊடகங்கள், பெண் உரிமைப் பாதுகாவலர்கள் என்று சொல்லி கொண்டு உலவும் சில சங்கங்கள் இது போன்ற பிற்போக்கு தனமான சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பார்களா!?

சௌமியா சுவாமிநாதனுக்கும், ஹீரா சித்துவுக்கும் நமது பாராட்டுக்கள்.

1 COMMENT

  1. திரை போட்டு ஆட முடியாதது ஒன்றே . மறைக்கவேண்டியதை அரைகுறை ஆடைகள் அணிவதால் பலாத்காரம். இந்த பர்தா முறை பாராட்டப்படவேண்டும். பெண்சுதந்திரம் பெண்மை குறிப்பிட்டவர்கள் ரசிப்பதற்கே.
    அறுபது வயது கிழவனுக்கும் என்னை ஒருமுறை பார்த்தால் கிறு கிறுக்கும் என்பது
    திரைப்பட வியாபாரம். இந்த உடல் மூடி ஒழுக்கமாக இல்லாததால் தான் பல கற்பழிப்புகள். மேலை நாட்டு குளிர் அடங்கி இருக்கும் . ஆனால் வெப்ப நாடுகள் .
    நடமாடும் பெண்கள் ஆலயத்தூன் சிலைகள் அல்ல.பலரின் பார்வைபடும் துணிந்த அதிகாரங்கள் கை படும். பெண்களுக்கு ஆடை பாதுகாப்பு. ஆடை சுதந்திரம் பாதிப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories