கருணாநிதி என்ற உயிர்ப்புள்ள வசனகர்த்தா

பழ.கருப்பையா வீடு தாக்குதலுக்கு உள்ளானது குறித்து திமுக., தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சரிதான்!  வரவேற்க வேண்டிய ஒன்றுதான்! தாக்குதல் அல்ல…; கடந்த காலத்தில் தாக்குதல்களை நிகழ்த்தப் படக் காரணமாக அமைந்தவர், இன்று கண்டனங்களைத் தெரிவிப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான்!

கடந்த 2007 ம் ஆண்டில் சேது சமுத்திர திட்டத்திற்காக இராமர் பாலம் இடிப்பதற்கு காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு முயற்சி செய்த போது தமிழகத்தில் இந்துமுன்னணி, ஆர்.எஸ்.எஸ் , பா.ஜ.கட்சி போராட்டம் நடத்தியது.

அப்போது இராமர் பாலத்தை கட்டிய ராமன் எந்த கல்லூரியில் படித்தான், ராமன் குடிகாரன் என்றெல்லாம் பேசினார். இது வடஇந்திய ஊடகங்களில் எதிரொலித்தது.

இதையறிந்த அயோத்தி எம்.பி. டாக்டர் ராம்விலாஸ் வேதாந்தி அவர்கள் இராமபிரானை இழிவாக பேசிய கருணாநிதியின் நாவை  அறுத்து, தலையை கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி பரிசு அறிவித்தார்.

இந்நிலையில் 24.09.2007ம் தேதி காலையில் சென்னை தி.நகர் வைத்யராமன் தெருவில் இருக்கும் பாஜக மாநில தலைமை அலுவலகத்தை திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.

தாக்குதல் நடத்த அறிக்கை விட்டது ஆர்க்காடு வீராச்சாமி.
தாக்குதல் நடத்தியது திமுக தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், வட சென்னை செயலாளர் பலராமன், சைதை கிட்டு மற்றும், சேப்பாக்கம் சுரேஷ்குமார், சைதைசம்பத், திருவல்லிக்கேணி செழியன்,புளியந்தோப்பு தமிழ் வேந்தன்,கவுன்சிலர் முருகேசன், கபாலிதோட்டம் சண்முகசுந்தரம் மற்றும் அடையாளம் தெரியாத திமுகவினர் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலவரம் செய்தனர்.

அதில் 100 பேர் உருட்டுக்கட்டை, இரும்பு ராடுகள், கற்களுடன் அலுவலகத்தில் புகுந்து தாக்கினர். இந்தத் தாக்குதலில் அப்போதைய மாநில பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன், புஷ்பகலா, ராஜசிம்மன், சதீஷ்குமார், வில்லிவாக்கம் ரமேஷ் ஆகியோர் ரத்தக்காயம் அடைந்தனர். மேலும் கொடிகள், கதவுகள்,
ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். இதில் 3 மோட்டார் சைக்கிள்களும் சேதப்படுத்தப் பட்டன.இந்தத் தாக்குதலை அமைச்சர் பரிதி இளம்வழுதி, மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரடியாக தூண்டி
விட்டனர்.

அலுவலகத்தில் ரூ. 1 லட்சத்துக்கும் மேல் பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. காவல்துறை முன்னிலை
யிலேயே இத்தனையும் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மேற்குறிப்பிட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இந்தப் புகாரை பதிவு செய்துள்ள போலீசார் சட்டப் பிரிவு 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 337 (காயம்ஏற்படுத்துதல்), 427, 7(1)ஏ (சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அதேநாள், அதே நேரத்தில்  சிந்தாரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகம் தாக்கப்பட்டது. அந்த சம்பவத்தில்  திமுக 79வது வட்டச் செயலாளர் சாய்குமார்,திமுகவை சேர்ந்த முரளி, பாலாஜி,முருகேசன், சரவணன், ரத்தினம் ஆகியோர் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.  மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் அதிகாரத்தில், சென்னையில் பட்டப்பகலில் திமுக வைச் சேர்ந்தவர்களால் பா.ஜ.க அலுவலகம் மற்றும் இந்துமுன்னணி அலுவலகம் தாக்கப்பட்டது.

ஆனால் தற்போது பழ.கருப்பையா வீடு தாக்குதல் சம்பவத்தை கருணாநிதியார் கண்டித்து இருக்கிறார். மேலும் அதிமுக வினரால் தாக்கப்பட்டடோர் பட்டியலையும் வெளியிட்டு இருக்கிறார்.

திமுகவினரால் தாக்கப்பட்டோர் பட்டியலை வெளியிட்டால். மதுரையில் இந்திரா காந்தியை தாக்கியது, சட்டசபையில் எம்ஜிஆர் மீது செருப்பு வீச்சு, அதே சட்ட சபையில் ஜெயலலிதாவை தாக்கி சேலை கிழித்தது,

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவன் உதயகுமார், பூலாவரி சுகுமாறன், வத்தலகுண்டு ஆறுமுகம் ஆகிய அதிமுக தொண்டர்கள் முதல் திமுக மந்திரி தா.கிருஷ்ணன் வரை பட்டியலிட்டால் ஏட்டில் அடங்காது.

இதே பழ.கருப்பையா வீடு கடந்த  திமுக ஆட்சியிலும் தாக்கப்பட்டதே! கருணாநிதியைப் போல் நேரத்திற்கு தக்க பேச உலகத்தில் ஆளில்லை. ஏனென்றால் அவர் நல்ல வசனகர்த்தா… கதை வசன கர்த்தா அல்ல.. கதை விடுவதில் நல்ல வசன கர்த்தா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories