சிறுத்த சிங்கிளா இறங்கப் போவுதாம்! உதயசூரியன் சூடு வாட்டி எடுக்காம்ல..!

thirumavalavan stalin - 2026

கூட்டணிச் சிக்கலே வேண்டாம்; தனித்தே களம் இறங்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக் கிறார் திருமாவளவன் என்கிறார்கள்  அவருக்கு நெருக்கமானவர்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கடுமையாக எதிர்த்து வந்த கொங்குநாடு ஈஸ்வரன், கூட்டணிக் கட்சியாகவும் இல்லாமல், தோழமைக் கட்சியாகவும் இல்லாமல் வெளியில் ஏதோ ஓர் கட்சியாக இருந்தார். ஆனால், அவரை அழைத்து தொகுதிப் பங்கீடு பேசி முடித்துக் கொண்டது திமுக., அவருக்கு ஒரு தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது. அதையும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு வந்தார் ஈஸ்வரன்.

முன்னதாக, கொங்கு மண்டலத்தில் ஒரு கூட்டம் நடத்தி, அரை சதவீதம் இருக்கும்
திருமாவளவனுக்காக, பத்து சதவீத வாக்கு  வங்கி இருக்கும் கொங்கு மக்கள் தேசிய கட்சியை இழந்துவிடாதீர்கள்! உங்களுக்கு அரை சதவீதம் வாக்கு வங்கி உள்ளவர்கள் முக்கியமா, பத்து சதவீத வாக்கு வங்கி கொண்ட நாங்கள் முக்கியமா? கூட்டணி பேசுபவர்கள் விவேகமான முடிவு எடுப்பார்கள் என்று பேசினார்.

காண்க… ஈஸ்வரன் பேச்சு…

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

தற்போது, ஈஸ்வரன் திமுக., கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார். ஆனால், தோழமைக் கட்சிகள் தான் என்று துரை முருகனால் அடையாளம் காட்டப்பட்ட திருமாவளவனும் வைகோவும் இன்னமும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் தலா ஒரு தொகுதிதான் என்று உறுதியாகப் பேசப்பட, அதுவும் உதயசூரியன் சின்னத்தில்தான் என்று கூறப்பட இப்போது இரு தரப்புமே யோசித்துக் கொண்டிருக்கிறது!

ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் என்ன நன்மை கிடைக்கும் என்று கணக்குப் போடுகிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.

2004ல், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார் திருமாவளவன். அதன் பின்னர், 2006 தேர்தலில் அதிமுக.,வுடன் கூட்டணி, 2009ல் திமுகவுடன் கூட்டணி,
2011 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக.,வுடன் கூட்டணி, 2014 தேர்தலிலும் திமுக.,வுடன் கூட்டணி என பெரும்பாலான தேர்தல்களிலும் திமுக.,வுடன் கூட்டணியைத் தொடர்ந்தவருக்கு 2016 சட்டமன்றத் தேர்தல் ஒரு பிரேக் போட்டது. மக்கள் நலக் கூட்டணி என மூன்றாம் அணியில் களம் இறங்கி, படுதோல்வி அடைந்ததுதான் மிச்சம். மேலும், 2009 தேர்தலில் ஒரே ஒரு எம்.பி சீட்டை வென்ற திருமாவளவன், அதன் பின்னர் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பதும் விடுதலைச் சிறுத்தைகளின் ட்ராக் ரெகார்ட்!

ALSO READ:  இன்று சனி பெயர்ச்சி: சிறப்பு ரயில்கள் இயக்கம்

இந்நிலையில், கூட்டணி இல்லையேல் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்ற எண்ணத்தில்தான், மீண்டும் திமுக கூட்டணிக்காக மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார் திருமாவளவன். ஆனால் அவரை கூட்டணி எனக் கூட்டாக்காமல், தோழமை என தழுவிக் கொண்டது திமுக.!

thirumavalavan vck meeting - 2026

முன்னர் பாமக.,வை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக, திருமாவை சற்று ஒதுக்கி வைத்திருந்தது திமுக., தரப்பு. ஆனால் பாமக., இல்லை என்றான பின்னர் திமுக., கூட்டணியில் திருமாவளவனின் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், இப்போது அந்த இடத்தை கொங்கு ஈஸ்வரன் பிடித்து விட்டதால், விடுதலைச் சிறுத்தைகளுக்கு திமுக.,வில் வாய்ப்பு மங்கிக் கொண்டே வருகிறது.

அதனால்தான், ஒரே ஒரு தொகுதி, அதுவும் உதயசூரியன் சின்னம் என்று கறார் காட்டுகிறது திமுக., இது நிச்சயம் சிறுத்தைகளை உசுப்பேற்றி வெளியேற்றும் முயற்சி என்று பரவலாகக் கூறப் பட்ட நிலையில், திருமாவளவனும் அதனை உள்ளூர உணர்ந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

கடந்த 2009, 2014 தேர்தல்களில் திமுக கூட்டணியில் தங்களுக்கு 2 தொகுதிகள் கொடுத்ததை சுட்டிக்காட்டும் விடுதலைச் சிறுத்தைகள், இப்போதும் அதே 2 தொகுதிகளைக் கேட்கிறார்கள். ஆனால் சீமானின் பாணியில் “வாய்ப்பில்ல ராஜா” என்று சொல்லிவிட்டது திமுக.,!

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

இதனால், வேறு கூட்டணியில் சேர இயலாமல், தனித்தே களம் காணலாம் என்று கட்சியினர் சொல்வதைக் கேட்கும் நிலையில் இருக்கிறார் திருமா. மேலும், கமல் அல்லது தினகரன் என்று கூட்டணி சேர்வதற்கு பதில், தனித்தே இறங்கலாம் என்கின்றனர் கட்சியினர்.

ஆக… ஆக… சிறுத்த சிங்கிளா களம் இறங்க போவுது..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories