திமுகவிடம் கட்சியை அடமானம் வைத்த வைகோ: பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்!

vaiko
vaiko

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, விருப்பப் பாடமாக தமிழ் மொழியை எடுத்து படிக்கலாம் என்ற நிலையை மாற்றியுள்ளனர்.

மொத்தத்தில், தமிழ் மொழியை நீக்கி இருக்கின்றனர். ஹிந்தி, ஆங்கிலத்துடன், ஆறாம் வகுப்பில் இருந்து, சமஸ்கிருதம் தான் விருப்பப் பாடம் என ஆக்கி உள்ளனர்.’

அதனால், அப்பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என, தமிழக அரசு அறிவிக்க வேண்டும்’ என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார் .

இது குறித்து, பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாவது: இது அப்பட்டமான பொய். தமிழ் எங்கும் புறக்கணிக்கப்படவில்லை. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், விருப்பப் பாடமாக தமிழ் மொழி இன்றும் உள்ளது.
இல்லை என்பதை, வைகோ நிரூபிக்க வேண்டும்.

தி.மு.க.,வினர் நடத்தும், 43 பள்ளிகளிலும், ஆங்கிலமும், ஹிந்தியும் மட்டுமே சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதற்கு எதிராக குரல் எழுப்புவாரா வைகோ?அங்கே பயிலுபவர்களுக்கு, முதலில் தமிழ் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி விட்டு, கேந்திரிய வித்யாலயா பள்ளி பக்கம் வரட்டும்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

சமஸ்கிருதத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கிய மத்திய அரசு, தமிழ் மொழி வளர்ச்சிக்காக வெறும், 22 கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பதாகவும், புலம்பி இருக்கிறார் வைகோ.

இப்படி அவர், பல முறை பொய்யாக சொல்லி, அதற்கு விளக்கமும் கொடுத்த பின்பும், அதையே சொல்கிறார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், சமஸ்கிருதத்துக்கு பதிலாக, சீன, ஸ்பானிஷ், ஜெர்மனி, பிரஞ்சு, ஜப்பான் மொழிகளில், எதையாவது ஒன்றை கற்பிக்கலாம் என்று சொல்லி, தனது வாடிகன் விசுவாசத்தையும் காட்டி இருக்கிறார்.

தமிழகத்தில் இருக்கும் தனியார் பள்ளிகள் அனைத்தும், அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளன. அரசிடம் அனுமதி பெற்று தான் இயங்குகின்றன. அந்த தனியார் பள்ளிகள் அனைத்திலும், ஹிந்தியும், ஆங்கிலமும் தான் பயிற்று மொழியாக இருக்கிறது. தமிழ் பேசினாலே அபராதம் விதிக்கின்றனர்.

தனியார் பள்ளிகளில், தமிழை பயிற்று மொழியாக கொண்டு வர முயற்சிக்காதது ஏன்? தி.மு.க.,வினர் நடத்தும், 43 பள்ளிகளிலும் தமிழ் மொழி, பயிற்று மொழி கிடையாது. ம.தி.மு.க.,வை தி.மு.க.,விடம் அடமானம் வைத்து விட்டு, பெயரளவில் கட்சி நடத்திக் கொண்டிருக்கும் வைகோ, அதற்காக, தி.மு.க.,விடம் ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

அரசு அல்லது தி.மு.க.,வுக்கு எதிராக கருத்து சொன்னால், ஓய்வூதியம் ரத்தாகி விடும் என்பதால், அரசும், தி.மு.க.,வும் விரும்புவதைச் செய்கிறார்.

குடும்பத் தலைவிக்கு ஊக்கத் தொகை மாதம்தோறும் வழங்கப்படும்; காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என நிறைய விஷயங்களை, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது எதையும் செய்யவில்லை. மக்கள் கேட்கத் துவங்கி விட்டனர்.

இப்படிப்பட்ட பிரச்னைகளை மறைத்து, புதியவற்றை கிளப்பி, மக்கள் எண்ணத்தை மடை மாற்றம் செய்ய, தி.மு.க., முயற்சிக்கிறது. அதற்காக, வைகோவை விட்டு, இப்படி அறிக்கை வெளியிடச் செய்திருக்கின்றனர். வைகோவின் பரிதாப நிலையை கண்டு வருத்தப்படத்தான் முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories