spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகல்விகலைடாஸ்கோப் பல்துறை சார் மாணவர்களுக்கான ‘வேலை வாய்ப்புகள்’ நிகழ்ச்சி!

கலைடாஸ்கோப் பல்துறை சார் மாணவர்களுக்கான ‘வேலை வாய்ப்புகள்’ நிகழ்ச்சி!

- Advertisement -
vivekananda college

திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில் கலைடாஸ்கோப் (Kaleidoscope) பல்துறை சார்ந்த மாணவர்களுக்கான ‘வேலை வாய்ப்புகள்’ நிகழ்ச்சி:

மதுரை: மதுரை மாவட்டம், திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில், கலைடாஸ்கோப் (Kaleidoscope) பல்துறை சார்ந்த மாணவர்களுக்கான ‘வேலை வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் கல்லூரி ஆசிரியர்களின் வழிகாட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
கல்லூரிச் செயலர் ஸ்ரீமத் வேதானந்த, கல்லூரி குலபதி ஸ்ரீமத் அத்யாத்மானந்த ஆகியோர் ஆசியுரை வழங்கினர். இந்நிகழ்வில், சு.முத்தையா (உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை) ‘தமிழ்த்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் க.அசோக்குமார் (உதவிப்பேராசிரியர், பொருளாதரத்துறை) ‘பொருளாதரத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், வீ.முருகன் (உதவிப்பேராசிரியர், வரலாற்றுத்துறை) ‘வரலாற்றுத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் க.செல்லப்
பாண்டியன் (உதவிப்பேராசிரியர், வணிகவியல்துறை) ‘வணிகவியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், சி.வேல்முருகன் (உதவிப்பேராசிரியர், கணிதத்துறை) ‘கணிதத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் சு.கணேசன் (உதவிப்பேராசிரியர், இயற்பியல்துறை) ‘இயற்பியல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் க.இராஜ்குமார் (உதவிப்பேராசிரியர், வேதியியல்துறை) ‘வேதியியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் த.செல்லத்துரை (உதவிப்பேராசிரியர், தாவரவியல்துறை) ‘தாவரவியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் ம.பவுன்ராஜ் (உதவிப்பேராசிரியர், விலங்கியல்துறை)  ‘விலங்கியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், 
ச.இரஞ்சித்குமார் (உதவிப்பேராசிரியர், கணினிஅறிவியல்துறை) ‘கணினிஅறிவியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு அந்தந்தத் துறைசார்ந்து காணப்படக்கூடிய வேலைவாய்ப்புகள் பற்றியும், அதற்கு எவ்வாறு தங்களை தற்பொழுதிருந்தே தயார்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்தும் உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்விற்கு அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதிஷ்பாபு வரவேற்புரையும், ஆங்கிலத்துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் சரவணகுமார் நன்றியுரையும், சமஸ்கிருதத்துறையின் தலைவர் முனைவர் ஸ்ரீதர்சுவாமிநாதன் தொகுப்புரையும் வழங்கினர்.

இந்நிகழ்விற்கு ஆலோசகராக  முனைவர் க.கார்த்திகேயன் (கல்லூரி துணைமுதல்வர்) மற்றும் முனைவர் ஜெயசங்கர் (புலமுதன்மையர் மற்றும் தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர்) ஆகியோர்  செயல்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe