January 18, 2025, 5:37 AM
24.9 C
Chennai

கரூர் முதல் மெரினா வரை… பள்ளி மாணவர்களின் ஆச்சரிய விமான பயணம்!

#image_title

கரூர் முதல் கலங்கரை விளக்கம் (மெரினா) வரை மாணவ, மாணவிகளை விமான பயணம் மேற்கொள்ள வைத்த கரூர் தனியார் பள்ளி நிர்வாகத்தினரின் நடவடிக்கையால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முதன் முதலாக விமான பயணம் மேற்கொண்ட மாணவ மாணவியர் ஆச்சரியம் அடைந்தனர். அவ்வகையில், கரூர் தனியார் பள்ளி நிர்வாகம், மாணவ, மாணவிகளை விமான பயணம் மேற்கொள்ள வைத்து உற்சாகம் ஊட்டியது பேசுபொருளாகியுள்ளது.

கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்கின்ற தனியார் பள்ளி, அண்மையில் கரூர் முதல் கலங்கரை விளக்கம் மெரினா வரை விமான பயணம் என்ற தலைப்பில் அறிவுசார் கல்வி சுற்றுலாவை தொடக்கி, விமானத்தில் 50 மாணவ, மாணவிகளையும், ஆசிரியர்களையும் அழைத்து சென்றது.

காலையில் கரூர் டூ திருச்சி பேருந்தில் சென்று, திருச்சி விமானநிலையம் மூலம் சென்னை விமானநிலையம் சென்று, அங்கு (சென்னை) தலைமை செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் போர் நினைவுத்தூண் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

ALSO READ:  தென்காசி மாவட்ட முருகன் கோயில்களில் நாளை சூரசம்ஹாரம்!

அங்கிருந்து மெரினா கடற்கரைக்கு சென்ற மாணவர்கள், நம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களின் நினைவிடங்களையும் பார்த்து அவர்களது வாழ்க்கை குறிப்புகளையும் அறிந்தனர். அதனை தொடர்ந்து அறிவாற்றலை அதிகப்படுத்தும் பொருட்டு, பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்று நூலகத்தின் நூலகத்தின் சிறப்புகளையும் அறிந்தனர்.

மேலும் இறுதியாக விண்வெளியை கண்ணெதிரே காண, பிர்லா கோளரங்கை கண்டு மகிழ்ந்ததோடு, அங்கிருந்து புறப்பட்ட மாணவ, மாணவிகள் ஆசிரியர்களோடு சென்னை விமான நிலையத்திலிருந்து, திருச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து கரூர் வந்தனர்.

கரூர் மாவட்ட வரலாற்றிலேயே முதன்முறையாக, பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளை விமான பயணம் மூலம் அழைத்து சென்ற பள்ளி என்ற பெருமையை இந்த கரூர் அன்னை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிடித்த நிலையில், மாணவ, மாணவிகளிடையேயும், பெற்றோர்களிடையே மிகுந்த வரவேற்பினையும் பிடித்துள்ளது.

இது மட்டுமில்லாமல் இப்பள்ளியின் தலைவர் முனைவர் டாக்டர் மணிவண்ணன் மற்றும் பள்ளியின் தாளாளர் கீதா மணிவண்ணன் மற்றும் பள்ளியின் முதல்வர் பகலவன் ஆகியோருக்கும் பொதுமக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

ALSO READ:  மதுரை மாவட்ட கோவில்களில் நாளை சனி மஹா பிரதோஷம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

கோயிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம்; அரசு தலையிட கோரிக்கை!

மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம் தொடர்பில் பிரச்னை ஏற்பட்டது.

அதானியைக் குறிவைத்த அமெரிக்க ஹிண்டன்பெர்க் – இழுத்து மூடல்!

பாரதத்தை - குறிப்பாக அதானியை - குறி வைத்த ஹிண்டன்பர்க் பயல் கடையை மூடி ஓட்டம்.... டிரம்ப் வருவதற்குள் டீப் ஸ்டேட் கூட்டங்கள் ஓடத் துவங்கியிருக்கின்றன.

பிப்.9ல் நெட்டாங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா பஜனாம்ருதம் போட்டிகள்!

கன்யாகுமரி மாவட்டம் நெட்டாங்கோடு அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் பொங்கல் விழா-2025

Entertainment News

Popular Categories