பி.இ., படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை!

Published:

16 June04 anna university - 2026

பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் தற்போது வரை இணையத்தில் வெளியாகவில்லை.

பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை இணையத்தில் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை உயர்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. www.annauniv.edu என்ற இணையதளத்தில் தற்போது வரை பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகவில்லை.

இந்நிலையில் அறிவித்தப்படி வெளியாகாத காரணத்தினால் பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்தவர்களால் தரவரிசையை அறிந்து கொள்ள முடியவில்லை. தொழில் நுட்ப கோளாறு காரணமாக பி.இ. தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றுவதில் தாமதம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. https://www.tnea.ac.in/adata/index.php

பி.இ.க்கு விண்ணப்பித்தவர்களில் முதல் 10 பேரின் விவரங்களை மட்டுமே அமைச்சர் அன்பழகன் வெளியிட்டிருந்தார்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

இந்நிலையில் நண்பகல் 12 மணிக்குள் தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img