திமுக., ஆட்சியில் தமிழகத்தை 5 ஆகப் பிரித்து 5 பேர் ஆட்சி செய்தனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, சென்னை – சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசிடம் போராடிப் பெற்றது தமிழக அரசு. இந்தத் திட்டத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்படுகிறது.
17 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கு பெற்றிருந்தும், தமிழகத்திற்கு உருப்படியான எந்த திட்டங்களையும் திமுக கொண்டு வரவில்லை.
திமுக ஆட்சியில் இருந்த போது, தமிழகத்தை 5 ஆகப் பிரித்து 5 பேர் ஆட்சி செய்தனர்… என்று கூறினார்.


