வில்சன் கொலை வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.,க்கு மாற்றம்!

kalikavalai - 2026

சென்னை : களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை, தற்போது தேசிய புலனாய்வு முகாமை – என்ஐஏ.,வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த மாதம் 8ஆம் தேதி சுட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

kalikavalai 3 - 2026

கொலை நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, வில்சனைக் கொலை செய்தவர்கள், அங்கிருந்த மசூதிக்குள் ஓடி ஒளிந்து கொண்டதும், அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து, கொலை செய்த பயங்கரவாதிகள் அப்துல் ஷமீம் மற்றும் தவுபிக் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு, கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து மங்களூருக்கு தப்பிச் செல்லும் நிலையில் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஷேக் தாவூத் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அப்துல் ஷமீமுக்கு பண உதவி செய்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்துல் சமீம் மற்றும் தவுபிக் மீது உபா சட்டம் பாய்ந்தது. விசாரணையின் போது, பயங்கரவாதிகள் விவகாரத்தில் போலீசார் எடுத்துவரும் நெருக்கடி மற்றும் நடவடிக்கை காரணமாக அச்சுறுத்தவே இவ்வாறு கொலை செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு விவகாரம் மாநில போலீசாரின் விசாரணை வரம்பையும் கடந்து செல்லும் நிலையில், எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கை, கன்னியாகுமரி தனிப்படை போலீசார் விசாரணை வசம் இருந்து என்.ஐ.ஏ.,வுக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

Topics

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories