ஆத்திரத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! கையில் தலையோடு சாலையில் நடந்து.. செய்த அராஜகம்!

head 1 - 2026

மனைவியை தலையை கையில் வைத்து கொண்டு. காவல்நிலையத்தை நோக்கி ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தே சென்ற நபரை பார்த்து மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.

உத்தர பிரதேசம் மாநிலம் பரபங்கி மாவட்டம் பஹதுர்பூர் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் அகிலேஷ் ராவத். இவரது மனைவி ரஜனி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் 2 வருடத்திற்கு முன்பு உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டது.

அகிலேஷுக்கு வயது 30, ரஜனிக்கு வயது 25 ஆகிறது. இதில் அகிலேஷ் மகா கோபக்காரராம். வீட்டில் எதற்கெடுத்தாலும் ரஜனியுடன் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாராம். இந்நிலையில், தம்பதியர், வீட்டில் இருந்தபோது இருவருக்கும் இடையே திரும்பவும் ஏதோ ஒரு பிரச்சனைக்காக வாக்குவாதம் ஆரம்பித்துள்ளது. சாதாரணமாக ஆரம்பித்த வாக்குவாதம் உச்சக்கட்டத்துக்கு போனது.

head - 2026

அடுத்து மனைவியை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார் அகிலேஷ். பிறகு தரதரவென இழுத்து வீட்டிற்கு வெளியே தள்ளினார்.

பட்டப்பகலில் நடந்த இந்த சண்டையை தெருவில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். ரஜனியை தெருவில் தள்ளியும் ஆவேசம் அடையாத அகிலேஷ், கத்தியை கொண்டு வந்து சரமாரியாக குத்திவிட்டார். உடம்பில் ஆங்காங்கே கத்தி குத்து விழுந்ததில் சுருண்டு விழுந்து ரஜனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

ஆனால், அப்போதும் ஆத்திரம் அடையாத அகிலேஷ், அவர் இறந்த பின்னரும் ரஜனியின் தலையை உட்கார்ந்து துண்டாக வெட்டி எடுத்தார். முண்டத்தை தெருவிலேயே போட்டுவிட்டு, தலையை மட்டும் கையில் எடுத்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

head 2 - 2026

ரோட்டில் தலையுடன் நடந்து வந்த நபரை பார்த்து மக்கள் தலைதெறிக்க ஓடினார்கள். சிலர் இதை பற்றி தகவலும் காவல்துறைக்கு சொன்னார்கள். ஆனாலும் காவல்நிலையம் தூரமாக இருப்பதால் அந்த தலையுடன் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட காவல்துறையினர் பாதி வழியிலேயே வந்து கொண்டிருந்த அகிலேஷை மடக்கி கைது செய்தனர்.. கையில் இருந்த தலையை பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது திடீரென தேசிய கீதம் பாடினார்.

அதன்பிறகு “பாரத் மாதா கீ ஜே” என்று முழக்கமிட்டு காவல்துறையினரை திணறடித்தார். இதன் பிறகு தலை, மற்றும் தெருவில் விழுந்த கிடந்த முண்டத்தை பறிமுதல் செய்து அகிலேஷிடம் விசாரணையும் நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் உபியின் பரபங்கி மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories