இந்து – கிறிஸ்துவ மத மோதல்களை தோற்றுவிக்கும் தெலங்கானா காங்கிரஸ்!

telengana election manifesto - 2026

ஹைதராபாத்: சர்ச்சுகள் கட்டுவதற்கு அரசு இடம் தருவது, பாதிரியார்களுக்கு சம்பளம் தருவது உள்ளிட்ட 10 தேர்தல் வாக்குறுதிகளை தெலங்கானா காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது மாநிலத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா சட்டப் பேரவைக்கு தேர்தல் வருகிறது. இங்கே கிறிஸ்துவ மைனாரிட்டி ஓட்டுகளை அப்படியே அள்ளுவதற்கு காங்கிரஸ் கண் வைத்துள்ளது. இதற்காக மற்ற கட்சிகளைப் போல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது காங்கிரஸ்!
கிறிஸ்துவ தேர்தல் வாக்குறுதி என்று அழைக்கப்படும் இந்த வாக்குறுதிகளை தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைப் பிரிவு வெளியிட்டுள்ளது. அதன் செயலர் ஷீபா ராஜேந்தர் என்பவர் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள்…

1. பிஷப்புகளுக்கும் பாதிரியார்களுக்கும் பாதுகாப்பு வழங்கப் படும்
2. பாதிரியார்களுக்கு அரசு சம்பளம் வழங்கப்படும்.
3. கிறிஸ்துவ மைனாரிட்டி நிதிக் கழகத்திற்கு அரசு நிதி தரப்படும்.
4. மாநில தலைநகரில் கிறிஸ்துவ பவனும், மாவட்ட தலைநகர்களில் கிறிஸ்துவ சமுதாயக் கூடங்களும் கட்டப்படும்.
5. ஒவ்வொரு ஒன்றியத்திலும் சர்ச் கட்டுவதற்கு அரசு இடம் தரப்படும்.
6. தலித் கிறிஸ்துவர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் அந்தஸ்து தருவதற்கு மத்திய அரசின் அரசாணை வெளியிடப்படும்.
7. கிறிஸ்துவ கல்லறைகளுக்கு அரசு இடங்கள் ஒதுக்கப்படும்.
8. கிறிஸ்துவர்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைகளுக்கு அரசு மானியம் வழங்கப்படும்.
9. லோக்சபா, ராஜ்யசபா, சட்டசபைகளில் கிறிஸ்துவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வரப்படும்.
10. கிறிஸ்துவ பத்திரிகையாளர்களுக்கு வீடு, மருத்துவ வசதி, குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் வழங்கப்படும்.

இந்த அறிவிப்புக்கு எதிராக தெலங்கானாவில் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜக., தெரிவித்துள்ள கண்டனத்தில், ”மலிவான கவர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ளதன் மூலம், காங்கிரஸ் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாகக் கூறியுள்ளது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஆனால் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியும், காங்கிரஸ் மேலிடமோ, ”தேர்தல் வாக்குறுதி தந்துள்ள ஷீபா கட்சியின் சாதாரண தலைவர். அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தவறாக இருக்கலாம். ஆனால் அதன் நோக்கம் சரியானது” என்று கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஏற்கெனவே, நாடு முழுதும் கிறிஸ்துவ சபைகள் சர்ச்சுகள் ஒன்று கூடி மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், கிறிஸ்துவர்கள் காங்கிரஸுக்கு ஆதரவாக தேர்தலில் களம் இறங்க வேண்டும் என்றும் பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டும் தேர்தல் வேலை பார்த்து வருகின்றன. இந்நிலையில் இது போன்ற அரைவேக்காட்டுத் தனமான அறிவிப்புகள், நாட்டில் இந்து, கிறிஸ்துவ மத மோதல்களையும் மதப் பிரிவினையையும் அதிகம் தோற்றுவிக்கும் விதமாக அமைந்திருப்பது கண்கூடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories