இந்து – கிறிஸ்துவ மத மோதல்களை தோற்றுவிக்கும் தெலங்கானா காங்கிரஸ்!

telengana election manifesto - 2026

ஹைதராபாத்: சர்ச்சுகள் கட்டுவதற்கு அரசு இடம் தருவது, பாதிரியார்களுக்கு சம்பளம் தருவது உள்ளிட்ட 10 தேர்தல் வாக்குறுதிகளை தெலங்கானா காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது மாநிலத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா சட்டப் பேரவைக்கு தேர்தல் வருகிறது. இங்கே கிறிஸ்துவ மைனாரிட்டி ஓட்டுகளை அப்படியே அள்ளுவதற்கு காங்கிரஸ் கண் வைத்துள்ளது. இதற்காக மற்ற கட்சிகளைப் போல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது காங்கிரஸ்!
கிறிஸ்துவ தேர்தல் வாக்குறுதி என்று அழைக்கப்படும் இந்த வாக்குறுதிகளை தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைப் பிரிவு வெளியிட்டுள்ளது. அதன் செயலர் ஷீபா ராஜேந்தர் என்பவர் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள்…

1. பிஷப்புகளுக்கும் பாதிரியார்களுக்கும் பாதுகாப்பு வழங்கப் படும்
2. பாதிரியார்களுக்கு அரசு சம்பளம் வழங்கப்படும்.
3. கிறிஸ்துவ மைனாரிட்டி நிதிக் கழகத்திற்கு அரசு நிதி தரப்படும்.
4. மாநில தலைநகரில் கிறிஸ்துவ பவனும், மாவட்ட தலைநகர்களில் கிறிஸ்துவ சமுதாயக் கூடங்களும் கட்டப்படும்.
5. ஒவ்வொரு ஒன்றியத்திலும் சர்ச் கட்டுவதற்கு அரசு இடம் தரப்படும்.
6. தலித் கிறிஸ்துவர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் அந்தஸ்து தருவதற்கு மத்திய அரசின் அரசாணை வெளியிடப்படும்.
7. கிறிஸ்துவ கல்லறைகளுக்கு அரசு இடங்கள் ஒதுக்கப்படும்.
8. கிறிஸ்துவர்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைகளுக்கு அரசு மானியம் வழங்கப்படும்.
9. லோக்சபா, ராஜ்யசபா, சட்டசபைகளில் கிறிஸ்துவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வரப்படும்.
10. கிறிஸ்துவ பத்திரிகையாளர்களுக்கு வீடு, மருத்துவ வசதி, குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் வழங்கப்படும்.

இந்த அறிவிப்புக்கு எதிராக தெலங்கானாவில் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜக., தெரிவித்துள்ள கண்டனத்தில், ”மலிவான கவர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ளதன் மூலம், காங்கிரஸ் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாகக் கூறியுள்ளது.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

ஆனால் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியும், காங்கிரஸ் மேலிடமோ, ”தேர்தல் வாக்குறுதி தந்துள்ள ஷீபா கட்சியின் சாதாரண தலைவர். அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தவறாக இருக்கலாம். ஆனால் அதன் நோக்கம் சரியானது” என்று கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஏற்கெனவே, நாடு முழுதும் கிறிஸ்துவ சபைகள் சர்ச்சுகள் ஒன்று கூடி மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், கிறிஸ்துவர்கள் காங்கிரஸுக்கு ஆதரவாக தேர்தலில் களம் இறங்க வேண்டும் என்றும் பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டும் தேர்தல் வேலை பார்த்து வருகின்றன. இந்நிலையில் இது போன்ற அரைவேக்காட்டுத் தனமான அறிவிப்புகள், நாட்டில் இந்து, கிறிஸ்துவ மத மோதல்களையும் மதப் பிரிவினையையும் அதிகம் தோற்றுவிக்கும் விதமாக அமைந்திருப்பது கண்கூடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories