திரையரங்குகளில் ஆன்லைன் முன்பதிவு… சம்பள முறைப்படுத்தல் சாத்தியமாகும்!

cinema theatre - 2026

ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் எடுக்கும் முறை படிப்படியாக கொண்டுவரப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆன்லைன் டிக்கெட் நடைமுறை உடனடியாக நடைமுறைக்கு வராது என்று விளக்கம் அளித்துள்ளார். முதற்கட்டமாக, சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்றும், பின்னர் படிப்படியாக நகராட்சி, பேரூராட்சி திரையரங்குகளில் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

இதற்காக தமிழக அரசு சார்பில் செயலி உருவாக்கப்படும் என்றும், தியேட்டர்களின் நிலைக்கு ஏற்ப கட்டண விகிதம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்!

இது குறித்து கருத்து தெரிவித்து சினிமா தயாரிப்பாளர்கள், திரையரங்குகளில் நடக்கும் டிக்கெட் விற்பனை குறித்த தகவல்கள் தங்களுக்கு சரியாக வந்து சேராது என்றும், டிக்கெட் விற்பனை குறித்து பெரிய அளவில் போலியாக உயர்த்திச் சொல்வதை வைத்துதான் பெரிய நடிகர்கள் தங்களுக்கு பெரிய மாஸ் இருப்பதாகக் கூறி சம்பளத்தை ஏற்றி வைத்துள்ளனர் என்றும் கூறுகின்றனர்.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

அதேநேரம் அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப் பட்டால், படத்தின் லாப நஷ்ட கணக்கு சரியாக கணிக்கப்படும் என்றும், எனவே அதன் மூலம் நடிகர்களுக்கு உரிய சம்பளமும் நிர்ணயிக்க முடியும் என்றும் கூறுகின்றனர் சினிமா தயாரிப்பாளர்கள்.

சினிமா தயாரிப்பாளர்கள் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்றாலும், இந்த அறிவிப்பு பெரிய நடிகர்கள் பலரை அதிர வைத்துள்ளது என்கின்றனர் கோடம்பாக்கம் வட்டாரத்தில்! இதன் மூலம் தங்களுக்கு ஏற்படும் பாதகத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் யோசித்து வருகின்றனராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories