திருக்கோபுரத்தின் மாட்சியும் திருமாவின் வீழ்ச்சியும்!

thirumavalavan shanavaz - 2026

சமீபத்து திருமாவளவனின் ஹிந்து விரோதப் பேச்சு கோயில் கோபுரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அதில் உள்ள பொம்மைகள் ( அவருக்கு சிற்பங்கள் என்று சொன்னால் இழுக்கு போலும்) காமத்தைப் பற்றியே சொல்கிறது அவை அசிகங்கள் என்பது .

இதன் பின்னமாவது நாம் கோபுரம் என்றால் என்ன என்று பார்ப்போம் . அடியேனுக்கு தெரிந்த சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன் !

கோபுரம் என்பதே ஒரு சிற்பம் .

தமிழகத்து கோபுரம் தமிழர்களின் பெருமை அதில் உள்ள ஒரு தூணைக்கூட நம்மால் இன்று கட்டமுடியாது . கேலி பேசலாம் அதனைப் பாழ் செய்யலாம் அவ்வளவு தான் !

கோபுரம் வாழ்வியலின் பிரதிபலிப்பு ! சமயச் சன்னங்களும் அதில் அடக்கம் ஆனால் முழுவதும் சமயம் பற்றியது இல்லை !

அதில் தர்மம் , செல்வம் , காமம் , மோட்ஷம் என்று நான்கு நிலைகளைப் பற்றியும் குறிப்புக்கள் உள்ளன ! ஆனால் நம் திருமாவளவனுக்கு காமத்தைத் தாண்டி பார்வை போகவில்லை !

தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டு முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை சிற்பக்கலை மிக்க கோயில்கள் பல இருந்தாலும் அடுத்து இரண்டு நூற்றாண்டுகளில் இஸ்லாமியப் படையெடுப்பால் பல சிதையுண்டன !
பின்னர் நாயக்கர் காலங்களில் அது தூக்கி நிறுத்தப்பட்டது .

ஒரு முட்டாள் சதஸில் , திருமா கூறுகிறார் ஏதோ மசூதி கூம்பாய் இருக்குமாம் , சர்ச் உயராமாய் இருக்குமாம் , ஆனால் கோயிலில் அசிங்க பொம்மை இருக்குமாம் அஹா என்ன அறிவு !

பெரிய கோயிலுக்கு இணையாக ஒரு வேற்றுமத வழிபாட்டுத் தலம் உலகில் எங்காவது உள்ளதா ?

கோயிலில் சிற்ப சாஸ்த்திரம் , ஆகம விதிமுறைகள் , கட்டுமான நுணுக்கங்கள் , ஸ்திரத்தன்மை என்று காண்பவர் கண்டு மலைக்கும் பல அறிவுத்திறனை உள்ளடக்கியது .

பொது நலணுக்காக கோபுரங்களில் “விதை நெல்லை” வைத்து கட்டுவதும் மரபு . அக்காலத்து டிஸ்சாஸ்டர் மெனஜ்மெண்ட் அது . இதுவெல்லாம் கண்ணுக்குத் தெரியாது பதர்களுக்கு !

கோயிலில் விமானப் பகுதியில் அதிஷ்டானம் ( பாதக்கட்டு) , சுவர், பிரஸ்தரம் (கூரை) , கிரீவரம் , ( கழுத்து) , சிகரம் , ஸ்தூபி என்று பல கட்டுகளை உள்ளடக்கியது .

பிற்பகுதியில் கருவறை , பலிபீடம் , கொடிமரம் , மண்டபம், இரண்டாம் கோபுரம் என்று பல கட்டுக்கள்.

“ வானாறும் மதிள் சூழ் “ பெரும் மதிள் சுவர்களும் அங்கு உண்டு ! நினைத்தாலே பிரமாண்டம் !

காமம் நம் வாழ்வில் ஒர் அங்கம் என்பதால் அதற்கும் அங்கு இடம் உண்டு ஆண் பெண் இணைதல் , பிறப்புறுப்பை காட்டிய படியான சிற்பங்கள் , முத்தமிடுதல் போன்றவையும் காணலாம் அரைகுறை அறிவுடன் கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் சமயத் தொடர்பானவை என்று நினைத்துக் கொண்டு உளறுதல் உங்கள் புரிதலின்மையைக் காட்டுகிறது !

செக்ஸ் எஜிக்கேஷன் என்று இன்று மேற்கத்திய உலகம் சொல்வதை இரண்டாயிரம் ஆண்டு முன்னே நாம் பேசியுள்ளோம் !

இதைத்தான் சிறுமை என்று ஓட்டரசியலுக்காக மாற்று மதத்தினரை சந்தோசப்படுத்த நீர் பேசுகிறீர் !

“சுருக்கணிகள்” என்று ஒரு சிற்ப நுணுக்கம் ஒன்று உண்டு இதையெல்லாம் நீங்கள் கண்டதுண்டா ?

கல்லால் சிற்பி கயிறு போல் குடைந்து தூண்களில் அலங்காரமாய் தொங்க விடுவது தான் சுருக்கணிகள் ( chain block made out of stone ) இதுபோன்ற ஒரு அதிசய வேலையை உலகில் எங்காவது காட்ட முடியுமா ?

அதனால் தான் நம் முன்னோர் தமிழகத்திற்கு ஒரு கோயிலின் படத்தை அரசு சின்னமாய் வைத்தனர் !

நீங்கள் திருந்தப் போவதில்லை வெறுப்பரசியல் பேசியே உங்கள் வாழ்நாள் முழுதும் போகும் ! தமிழகத்தை பின்னே தள்ளுவது தான் உங்கள் அஜெண்டா . மதம் , ஜாதி , அது இது என்று பேசி வாழ்வாங்கு வாழ்ந்து போவீரே !

  • Ramaseshan Ks

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories