உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ்வில் உயிரோடு கொளுத்தப்பட்ட பெண் “நான் இறப்பதற்கு தயாராயில்லை. என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் தூக்கில் தொங்குவதை நான் பார்க்க வேண்டும்” என்று கதறியிருக்கிறாள் தன் சகோதரனிடம்.
நடந்துள்ள கொடூரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2018 வரை, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை கற்பழித்ததாக புகார் கொடுத்திருந்தார் அந்த பெண். சிவம் மற்றும் சுபம் திரிவேதி ஆகிய இருவரும் கடந்த டிசம்பரில் தன்னை கடத்தி கற்பழித்ததாக புகார் கொடுத்ததையடுத்து, இருவரையும் கைது செய்து வழக்கு தொடுத்தது காவல் துறை.
சுபம் திரிவேதி என்ற முக்கிய குற்றவாளி கடந்த 10 நாட்களுக்கு முன்னால் பிணையில் வெளிவந்துள்ளன. நேற்றைய முன் தினம் ரேபரேலி நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கும் வழியில், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் உட்பட ஐந்து நபர்கள் அந்த பெண்ணை வழிமறித்து தாக்கி அவள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார்கள்.
அந்த பெண் தன்னை காப்பாற்றி கொள்ள ஓடி கொண்டே காவல்துறைக்கு அலை பேசியில் உதவி கேட்டிருக்கிறாள். அந்த இடத்திற்கு சென்று அவளை மீட்ட காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
90 விழுக்காடு தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் டில்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் இன்று மரணமடைந்தது அதிர்ச்சியளிக்கிறது.
நேற்று தெலங்கானவில் நடந்தது போன்ற ஒரு நடவடிக்கை தான் இந்த சம்பவத்திற்கும் தீர்வு என மக்கள் வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில், “நான் இறப்பதற்கு தயாராயில்லை. என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் தூக்கில் தொங்குவதை நான் பார்க்க வேண்டும்” என்ற அந்த பெண்ணின் கடைசி ஆசையை நிறைவேற்ற இனி முடியாது என்றாலும், தெலங்கானா என்கவுண்டர் மாதிரியோ அல்லது நீதிமன்றமே முன் வந்து அந்த பெண் எப்படி இறந்தா ளோ அதே போன்று தெருவில் ஓட விட்டு உயிரோடு கொளுத்தும் தண்டனையை அந்த ஐந்து பேருக்கும் வழங்க வேண்டும். அ
ப்போது தான் வன்மங்களோடு கூடிய மிருகத்தனம் குறையும். இனி இது போன்ற எண்ணமுள்ள சமூக விரோதிகளை எச்சரித்து, அச்சுறுத்தும் வகை இதுவே.
மேலும், இது குறித்து மீண்டும், மீண்டும் அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் தான், என்கவுண்டர் செய்தாலோ அல்லது வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலோ ஐயோ! மனித உரிமை மீறப்படுகிறதே என்று கொந்தளிக்கிறார்கள் என்பதை அறிதல் நலம்.
சட்டங்கள் சமுதாயத்திற்கு முக்கியம் தான். ஆனால் நீதி தாமதமாகும் நிலையில், தீர்ப்பை நோக்கி வேகமாக செல்லும் கட்டாயமும், கடமையும் காவல் துறைக்கும், அரசுக்கும் உள்ளது.
நெஞ்சம் பதை பதைக்கிறது. தாமதமான தீர்ப்பு மறுக்கப்படும் தீர்ப்பு.
- நாராயணன் திருப்பதி.