தாமதிக்கப்பட்ட நீதி .. தடுக்கப்பட்ட நீதி!

girl attack image - 2026

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ்வில் உயிரோடு கொளுத்தப்பட்ட பெண் “நான் இறப்பதற்கு தயாராயில்லை. என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் தூக்கில் தொங்குவதை நான் பார்க்க வேண்டும்” என்று கதறியிருக்கிறாள் தன் சகோதரனிடம்.

நடந்துள்ள கொடூரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2018 வரை, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை கற்பழித்ததாக புகார் கொடுத்திருந்தார் அந்த பெண். சிவம் மற்றும் சுபம் திரிவேதி ஆகிய இருவரும் கடந்த டிசம்பரில் தன்னை கடத்தி கற்பழித்ததாக புகார் கொடுத்ததையடுத்து, இருவரையும் கைது செய்து வழக்கு தொடுத்தது காவல் துறை.

சுபம் திரிவேதி என்ற முக்கிய குற்றவாளி கடந்த 10 நாட்களுக்கு முன்னால் பிணையில் வெளிவந்துள்ளன. நேற்றைய முன் தினம் ரேபரேலி நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கும் வழியில், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் உட்பட ஐந்து நபர்கள் அந்த பெண்ணை வழிமறித்து தாக்கி அவள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார்கள்.

அந்த பெண் தன்னை காப்பாற்றி கொள்ள ஓடி கொண்டே காவல்துறைக்கு அலை பேசியில் உதவி கேட்டிருக்கிறாள். அந்த இடத்திற்கு சென்று அவளை மீட்ட காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

90 விழுக்காடு தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் டில்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் இன்று மரணமடைந்தது அதிர்ச்சியளிக்கிறது.

நேற்று தெலங்கானவில் நடந்தது போன்ற ஒரு நடவடிக்கை தான் இந்த சம்பவத்திற்கும் தீர்வு என மக்கள் வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில், “நான் இறப்பதற்கு தயாராயில்லை. என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் தூக்கில் தொங்குவதை நான் பார்க்க வேண்டும்” என்ற அந்த பெண்ணின் கடைசி ஆசையை நிறைவேற்ற இனி முடியாது என்றாலும், தெலங்கானா என்கவுண்டர் மாதிரியோ அல்லது நீதிமன்றமே முன் வந்து அந்த பெண் எப்படி இறந்தா ளோ அதே போன்று தெருவில் ஓட விட்டு உயிரோடு கொளுத்தும் தண்டனையை அந்த ஐந்து பேருக்கும் வழங்க வேண்டும். அ

ப்போது தான் வன்மங்களோடு கூடிய மிருகத்தனம் குறையும். இனி இது போன்ற எண்ணமுள்ள சமூக விரோதிகளை எச்சரித்து, அச்சுறுத்தும் வகை இதுவே.

மேலும், இது குறித்து மீண்டும், மீண்டும் அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் தான், என்கவுண்டர் செய்தாலோ அல்லது வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலோ ஐயோ! மனித உரிமை மீறப்படுகிறதே என்று கொந்தளிக்கிறார்கள் என்பதை அறிதல் நலம்.

சட்டங்கள் சமுதாயத்திற்கு முக்கியம் தான். ஆனால் நீதி தாமதமாகும் நிலையில், தீர்ப்பை நோக்கி வேகமாக செல்லும் கட்டாயமும், கடமையும் காவல் துறைக்கும், அரசுக்கும் உள்ளது.

நெஞ்சம் பதை பதைக்கிறது. தாமதமான தீர்ப்பு மறுக்கப்படும் தீர்ப்பு.

  • நாராயணன் திருப்பதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories