கார்ப்பரேட் அரசியல்: தமிழகத்தை பாதிக்கப் போகும் வெறுப்பு பிரசாரம்!

election agents - 2026

தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சி ஒன்று, இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் அரசியல் வியூக நிறுவனத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளது. இதற்காக அந்த கட்சி செலுத்தியுள்ள கட்டணம் ரூ. 360 கோடி முதல் ரூ. 450 கோடி வரை என்கிறார்கள். இவர்கள் முன்னெடுக்கப் போகும் வெறுப்பு அரசியல் வியூகம் என்பது நாகரீகமான தமிழச் சமூகத்தை – பெரும் சமூக மோதல்கள் நடக்கும் காட்டுமிராண்டி கூட்டமாக மாற்றப்போகும் ஆபத்து உள்ளது!

இரட்டை வியூகம்: வெறுப்பும் இலவசமும்!

கார்ப்பரேட் அரசியல் அமைப்பு பல மாநிலங்களில் நடத்தியுள்ள பிரச்சாரங்களையும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ள Cambridge Analytica முன்மாதிரியையும் கொண்டு பார்க்கும் போது – இவர்கள் தமிழ்நாட்டில் வெறுப்பு பிரச்சாரத்தையும் இலவச அரசியலையும் மிகப்பெரிய அளவில் நடத்துவார்கள்.

(ஒரு மாதத்திற்கு 40 கோடி ரூபாயை செலவிடும் பலமும், சமூக ஊடகத்தில் பிரச்சாரம் செய்ய மட்டும் மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் 350 பேர் நியமிக்கப்பட்டிருப்பதும் இவர்களது பலத்தை உணர்த்தும்)

வெறுப்பு பிரச்சாரம்: சமூக ரீதியாக “நாங்கள் X அவர்கள்” என மக்களை இருபிளவாக வகைப்படுத்தி, ஒரு தரப்பினை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரத்தை நடத்துவது இவர்களது முதலாவது இலக்காக இருக்கக் கூடும். ஒவ்வொரு சமூகத்தையும் குறிவைத்து, அவர்களுக்கு எதிரானதாக கருதப்படும் சமூகம் குறித்த வெறுப்பினை திட்டமிட்டு வளர்ப்பார்கள். இது மிகப்பெரிய கலவரங்களுக்கு வழிவகுக்கும்.

இலவச அரசியல்: பலவிதமான இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். ஒவ்வொரு மக்கள் பிரிவினருக்கும் ஒரு கவர்ச்சிகரமான இலவசத்தை காட்டுவார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அள்ளி வீசப்பட்ட போலி வாக்குறுதிகளை போல, பல மடங்கு பொய்யான, சாத்தியமே இல்லாத வெற்று இலவச திட்டங்களை மிகப்பெரிய அளவில், மக்களை நம்பவைக்கும் அளவுக்கு பிரச்சாரம் செய்வார்கள்.

உண்மையில், Cambridge Analytica வகை அரசியல் பிரச்சாரம் என்பது அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தண்டனைக்குரிய குற்றம் ஆக்கப்பட்டுள்ளது. Cambridge Analytica நிறுவனத்தின் மீது அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கிரிமினல் வழக்குகள் நடந்துவருகின்றன. ஆனால், அதே தேர்தல் பிரச்சார நுட்பம் இந்தியாவில் தங்குதடையின்றி செயலாக்கப்படுகிறது.

மொத்தத்தில், நல்லாட்சி (Good Governance), அனைவருக்குமான நீடித்த வளர்ச்சி (Sustainable Development), அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழும் நல்லிணக்க சூழல் (Peaceful Coexistence) ஆகியன இனி தமிழ்நாட்டில் இல்லாமல் போகும். அத்தகைய ஒரு ஆபத்தான சூழல் கார்ப்பரேட் அரசியல் அமைப்பினால் உருவாகியுள்ளது. இதனை தமிழக மக்கள் எவ்வாறு எதிர்க்கொள்ளப் போகிறார்கள் என்பது இனிவரும் பல தலைமுறைகளை பாதிக்கப்போகும் கேள்வி ஆகும்.

  • இர.அருள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories