தில்லி ஷாகீன் பாக் வன்முறைகள்; நிர்வாகம், போலீஸுக்கு மட்டுமில்லை… நீதிமன்றத்துக்கும் பெரும் பொறுப்பு உண்டு!

Published:

delhi violence - 2026

டேவிட் ப்ராலே என்ற சமூக வரலாற்று அறிஞர் தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கருத்து இணையதள வாசிகளின் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

தமது டிவிட்டர் பதிவில் அவர் ஒரு கட்டுரையைப் பகிர்ந்து, அதற்கு தமது கருத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். அதில், ஷாகீர் பாக் போராட்டத்தை அடக்காததன் விலையை தில்லி கொடுத்திருக்கிறது. இதற்கு போலீஸ், ஆள்பவர்கள் மட்டும் காரணமில்லை… நீதிமன்றத்துக்கும் இதில் பெரும் பொறுப்பு உண்டு என்று கருத்திட்டிருக்கிறார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) 2019 தொடர்பாக முஸ்லீம்களின் தலைமையிலான இரண்டரை மாத ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு எளிதில் கணிக்கக்கூடியதாக இருந்தன தில்லி வகுப்புக் கலவரங்கள்! இதில் தேசிய தலைநகரை அடையும் முக்கிய சாலைகள் அடைக்கப் பட்டன. ஹிந்துவுக்கு ஆதரவாக செயல்படும் பாஜக., என்ற கட்சிக்கு எதிராக தீப்பற்றக் கூடிய பேச்சுகளை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு முறை எவ்வாறு இதன் மைய நோக்கமாக மாறியுள்ளது என்பதை இந்த வன்முறைகள் காட்டுகின்றன.

இந்த வழக்கில் மத்திய அரசோ, மாநில அரசோ, காவல்துறையோ – நீதித்துறையோ கூட இதில் இருந்து தன்னை விடுவிக்கவில்லை. ஊடகங்களோ மோசமான பாத்திரத்தை வகித்தன! குறிப்பாக CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் “மதச்சார்பற்றவை” என்றும், அமைதியானவை என்றும் பாசாங்கு செய்து பகிரங்கப் படுத்தியவர்கள், காவல்துறை கடினமான, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய அரசு சாரா அமைப்புகளின் குரலை கேட்டுக் கொள்ளவே இல்லை.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

இன்று, தங்களது செயலற்ற தன்மைக்காக எல்லோரும் காவல்துறையினரை நோக்கி விரலைக் காட்டுவது மிகவும் எளிதானது! ஆனால் இந்த விமர்சகர்கள் அதே காவல் துறையினர்- தில்லியில் ஜாமியா ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகும், உத்தரப் பிரதேசத்தில் சில நகரங்களில் சிஏஏ எதிர்ப்பு கலவரத்திற்குப் பின்னரும் களம் இறங்கியிருந்தாலும் சரி, அவற்றை எளிதில் மறந்து விடுகிறார்கள். இன்று மீண்டும் மீண்டும் நீதிமன்ற அறிவுரைகளையும் வெற்று அறிவிப்புகளையும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணும் அரசு இயந்திரங்கள் நாளை நீதிமன்றங்கள் என்ன சொல்லும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டே, இருக்க வேண்டும் என்றால், அவை எப்போதுமே வேடிக்கை பார்த்து சென்று கொண்டிருக்குமே தவிர, தங்கள் தோள்களில் ரிஸ்க் எடுப்பதை சுமக்க விரும்பாமலேயே இருக்கும்.

delhi violence2 - 2026

பிப்ரவரியில் தில்லி தேர்தல் நடவடிக்கைகள் பெருமளவில் வளர்ந்து கொண்டிருந்த நிலையில், சாலைகளை தடுத்து, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்து, பொதுமக்களுக்கு மிகப் பெரும் சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த ஷாஹீன் பாக் எதிர்ப்பாளர்களை சமாளிக்க வேண்டிய நிலையில் அரசு இருந்தது. இந்த ஆரம்ப தூண்டுதலுக்கு தேர்தலை எதிர்கொண்ட சிலரின் உள்நோக்கம் இருந்தது.

ஆர்ப்பாட்டங்களின்போது அரசு இயக்கத்துக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் ஒரு தடங்கலை ஏற்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதார அழிவை ஏற்படுத்துவதற்குமான ஒரு வாய்ப்பை ஷாகீர் பாக் ஏற்பாட்டாளர்கள் கண்டனர். அதே நேரம், ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக விரோத சக்திகளால் கூட எதிர்ப்பைச் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

காரணம், ஷாகீன் பாக் போராட்டம் முஸ்லிம் குழுக்களால் தீர்மானிக்கப் பட்டு நடந்து கொண்டிருந்ததில், அதற்கு எதிரான அளவில் ஒரு குழு விரக்தியின் அடிப்படையில் கிளர்ந்து எழ, இந்து மற்றும் முஸ்லீம் குழுக்கள் ஒருவருக்கொருவர் அமைத்துக் கொள்ளப் பட்டதால், அதுவே, அண்மைய கலவரங்களுக்கு காரணமாக அமைந்தது!

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

இதன் விளைவாக இரண்டு காவல் அதிகாரிகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். முழு போலீஸ்-சட்ட-நீதி-சட்ட அமலாக்க முறையும் டெல்லியில் தோல்வியடைந்தது. தில்லி உயர்நீதிமன்றம் மூன்று பாஜக தலைவர்களுக்கு எதிராக “வெறுக்கத்தக்க பேச்சுக்கள்” என்று குற்றம் சாட்டியது, அவர்களுக்கு முந்தைய வெறுக்கத்தக்க பேச்சுக்கள் அனைத்தையும் புறக்கணித்தது.

டொனால்ட் டிரம்ப் வருகையால் இந்த வன்முறை துரிதப்படுத்தப்பட்டது! இது CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அந்த மேடையை நிர்வகிக்க ஒரு வாய்ப்பை அளித்தது. அவர்களின் இந்த செயல்பாடு மறைக்கப் பட்டு, இரண்டு சமூகங்கள் சம்பந்தப்பட்ட ஒரு இனவாத கலவரம் என்பது, இந்திய மற்றும் வெளிநாட்டு பாகுபாடான ஊடகங்களால் இது, முஸ்லிம்களுக்கு எதிரான “படுகொலை” என்ற அளவில் முத்திரை குத்தப்பட்டது. ஆனால், ஊடகங்களின் இந்த செயல்பாட்டில் அவர்களுக்கு பதில் சொல்ல நிறைய இருக்கிறது.

இதனிடையே, ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்துவதில் உச்ச நீதிமன்றம் தன்னை உட்படுத்திக் கொள்ளவில்லை. பதிலாக, அவர்களால் தடுக்கப்பட்ட சாலைகளை சரியாக்கி தடைகளை அகற்றிவிட்டு, அவர்கள் தங்கள் போராட்டங்களை வேறொரு இடத்தில் தொடரச் செய்வதற்கு வழி வகுத்தது. அதைத் தவிர அது பயனுள்ளதாக வேறு எதுவும் செய்யாமல், நேரத்தை வீணாக்கியது.

இந்நிலையில், நேற்று (பிப்.26), வடகிழக்கு தில்லி தீப்பிழம்புகளில் தகித்த போது, ​​நீதிமன்றம் இது குறித்த விசாரணைகளை மார்ச் 23 க்கு ஒத்திவைத்தது!

“முதலில் இந்த விவகாரம் குளிரச் செய்யப் பட வேண்டும்” என்ற வேண்டுகோளை முன்வைத்ததின் பேரில் இது ஒத்திப் போடப் பட்டது. “குளிர்ச்சியடைய வேண்டும்” என்றால், என்ன பொருள் என்றால், அதே காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு வழக்கத்தை போலீஸார் பின்பற்ற வேண்டும் என்பதே!

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!
gunman sharukh - 2026

நீதிமன்றம் இப்படி மெத்தனமாகவும் சட்டாம்பிள்ளைத் தனமாகவும் செயல்படும் போது, எதற்காக காவல்துறையை குறை கூற வேண்டும்? நீதிமன்றங்கள் தங்களை செயலற்ற நிலையில் முடக்கும்போது, ​​காவல்துறையினர் ஏன் சட்டத்தை பராமரிக்க விரைகிறார்கள்?!

நீதிமன்றங்கள் தங்களுக்கு வசதியாக இருக்கும்போதுதான் தாங்கள் விரும்பிய விஷயங்கள் செயல் படுத்தப்படும் என்றால், நீதிமன்றங்கள் சரியான நேரத்தில் உறுதியான முடிவுகளை எடுக்காது என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?! நாட்டை எரித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தில் நீதிமன்றம் மெத்தனமாக நத்தையைப் போல் நகர்ந்து கொண்டிருந்தால், சட்டத்தின் மாட்சியைப் பேணுவதில் அதற்குள்ள அக்கறையை நாட்டு மக்கள் புரிந்து கொள்ளத்தான் செய்வார்கள்!

ஷாஹீன் பாக் வன்முறையாளர்களுக்கு இப்போது ஊடுருவல் செலுத்தும் ஒரு சமிக்ஞை கிடைத்துள்ளது! அதே நேரம், காவல்துறையினர் விரும்பினால் கூட, தங்கள் கடமையைச் செய்வதில் அவர்கள் மிக எச்சரிக்கையாக இருப்பார்கள்.

ஏற்கெனவே இருக்கின்ற வெட்கப்படும் விதத்திலான சட்ட விதிகளைச் செயல்படுத்தக் கூட, அரசு நிர்வாகம், நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறையினர் அனைவருமே தங்கள் கடமையாற்றலில் இருந்து மெத்தனமாகவும் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் விலகிச் செல்கின்ற நேரத்தில், அப்பாவிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முனைப்பு காட்டுவது தவிர்க்க முடியாதது. ஆக மொத்தத்தில், ஷாகீன் பாக் பெயரில் ஊடுருவிய வன்முறைக் கும்பலே தங்கள் நோக்கத்தில் இன்று வென்றிருக்கிறது!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img