மூடி மூடி மறைப்பதால் பிரச்சினைகள் தீர்ந்து விடாது!

andhra corona test - 2026

ஆந்திராவில் 3 லிருந்து 17 வயதுள்ள குழந்தைகள் 40 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களே இவர்கள். தங்களுக்கு கொரோனா தொற்று உள்ளது என்று தெரியாமலேயே இவர்களுக்கு அந்த தொற்று பரவியுள்ளது.

மொத்தமுள்ள 475 பேரில் 124 பெண்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கும் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்த அவர்களை குடும்ப உறவினர்களாலேயே பரவியுள்ளது. மேலும் 60 வயதுக்கும் மேற்பட்டோர் 36 பேர்.

அதே போல் தெலுங்கானாவிலும் 25 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், குழந்தைகள் அனைவருக்கும் லேசான தொற்றே உள்ளதாகவும், விரைவில் குணமடைந்து விடுவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வெளியிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், இந்த செய்தியை உணர்த்த வெளியிட்டுள்ள புகைப்படம் தான் வியக்க வைக்கிறது. உண்மையை உரைக்கும் வகையில் செய்திக்கும், படத்திற்கும் தொடர்பே இல்லாத நிலை இது. நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும், செய்திகளை வெளியிட்டால் மட்டுமே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.

அதை விடுத்து மதரீதியாக கருதி விடுவார்களோ என்ற அச்சத்தில் செயல்படுவது யாருக்கும் எந்த பலனையும் தராது. தப்லீக் மாநாட்டிற்கு சென்றவர்களை தனிமைப்படுத்துவது இது போன்ற செயல்கள் தான்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்து அதன் தொடர்புகள் மூலம் பலருக்கும் விரைவில் பரவும் நிலையினை வெளிப்படையாக உணர்த்துவதன் மூலமே இஸ்லாமிய சமூகம் இந்த தொற்றினால் பாதிக்கப்படாமல் இருக்கும் என்பது உறுதி. மாறாக, சில அடிப்படைவாத அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் மதசார்பின்மை என்ற முகமூடியோடு செயல்படுவது தீர்வாகாது. இந்த செய்தியை பொறுப்போடு உணர்த்த நினைத்திருந்தால் இந்த படம் இணைக்கப்பட்டிருக்காது.

இந்தியா மத சார்பற்ற நாடு தான். ஆனால், போலி மதச்சார்பின்மையுள்ள நாடு அல்ல. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடே பெரும்பான்மை மக்களின் பெருந்தன்மையான சகிப்பு தன்மை தான்.தப்லீக் ஜமாத் மாநாட்டினையோ, மாநாட்டிற்கு சென்றவர்களையோ யாரும் குறை கூறவில்லை.

ஆனால், சென்று வந்தவர்களிடம் தொற்று இருந்தால் மேலும் மேலும் அது அந்த சமூகத்தையே பெருமளவில் தாக்கும் என்பதையும் அதனால் பாதிக்கப்பட்டது, பாதிக்கப்படப்போவது இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் என்பதையும் மறைக்க முடியாது. மறக்க கூடாது. அரசியல் வாதிகளையும், அடிப்படைவாதிகளையும் புறக்கணித்து அரசுக்கு ஒத்துழைப்பதே தலையாய கடமை மற்றும் தேவை.

ALSO READ:  வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மூடி மூடி மறைப்பதால் பிரச்சினைகள் தீர்ந்து விடாது.

  • நாராயணன் திருப்பதி,
    செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories