December 5, 2025, 7:46 PM
26.7 C
Chennai

தினசரி ஒரு வேத வாக்கியம்: 36. யாரையும் வெறுக்க வேண்டாம்!

daily one veda vakyam 2 1 - 2025

36. யாரையும் வெறுக்க வேண்டாம்

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“மானோத்விக்ஷத கஸ்சன” – அதர்வணவேதம்.

“நாங்கள் யாரையும் துவேஷிக்காமல் இருப்போமாக!” 

இந்த சங்கல்பம் திடமாக இருக்க வேண்டும். யாரிடமும் சிறிதளவு வெறுப்பு ஏற்பட்டாலும் உடனே அதை நீக்கி விட முயல வேண்டும்.

அடுத்தவர் நமக்கு அனுகூலமாக இல்லாவிடில் துவேஷம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி நம்மைவிட பிறர் சிறப்பாக இருந்தாலும் வெறுப்பு தோன்றுகிறது. பொறாமையால், அசூயையால் வெறுப்பு தோன்றும். ஒருமுறை வெறுப்பு வந்து விட்டால் பிறருடைய நற்செயல் கூட தீமையாகவே தென்படும். அன்பிருந்தால் தீய செயல்கள் கூட நல்லதாகவே தோன்றும்.

“அத்வேஷ்டா சர்வ பூதானாம் மைத்ர: கருண ஏவச” என்பது பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவின் கூற்று.

பக்தி யோகத்தில் பக்தனுக்கு இருக்க வேண்டிய இயல்புகள், “அத்வேஷ்டா சர்வபூதானாம்”.  சிலர், பக்தர்கள் என்று கூறிக்கொண்டே பிறரை  வெறுப்பார்கள். இது தவறு. ஏனென்றால் ஒவ்வொருவரின் உடலிலும் பரமாத்மா உள்ளார் என்று சாஸ்திரம் கூறுவதை நம்பும்போது, யாரை வெறுத்தாலும், யாரை துன்புறுத்தினால் பரமாத்மாவையே சேரும் என்பதை அறிய வேண்டும்.

அதனால் பிறரை அவரவருக்கு அளிக்க வேண்டிய மரியாதைப்படி கௌரவித்து வெறுப்பின்றி நடந்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால் சமுதாயத்தில் அனைவரும் ஒன்று போல் இருக்க மாட்டார்கள். மனிதனுக்குள்ள விபரீதமான குணம் என்னவென்றால் தான் எதை நம்புகிறானோ அதை அனைவரும் நம்ப வேண்டும் என்று எண்ணுவான்.  

ஒவ்வொருவர் ஒவ்வொரு கொள்கையை உடையவராக இருப்பார். உலகம் அனைத்தும் ஒரே கொள்கையின் கீழ் வரவேண்டும் என்று விரும்புவது வீண் முயற்சி. அனைவரும் ஒரே கொள்கை உடையவராகவோ ஒரே மதத்தை அனுசரிப்பவராகவோ இருக்க மாட்டார்கள்.

நம் வேத கலாச்சாரத்தில் தேவதைகளை பிரார்த்தனை செய்வது, மோட்சத்தை அடையும் ஞானம் வைராக்கியம் இவற்றைப் பெறுவது… இவையே முக்கிய அம்சங்களாக கூறப்படுவதாக நினைக்கிறோம். ஆனால், ஆலோசனைகளை மாற்றிக் கொள்வதன் மூலம்   சமுதாய வாழ்வுக்கும், தனிமனித வாழ்க்கை முறைக்கும் இடையில் எழும் பிரச்சனைகளை எவ்விதம் தீர்ப்பது? எத்தகைய கண்ணோட்டத்தோடு வாழ்ந்தால் சுகமாக வாழலாம்? போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக மானுட உறவுகள் குறித்து உயர்ந்த கருத்துக்களைக் கூறுகிறது சாஸ்திரம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories