தினசரி ஒரு வேத வாக்கியம்: 59. பரப்பிரம்மம் எப்படி மறைந்துள்ளது?

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

59. பரப்பிரம்மம் எப்படி மறைந்துள்ளது?

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

திலேஷு தைலம் ததிநீவ சர்பி:ஆப ஸ்ரோதஸ்வரணேஷு சாக்னி: ஏவமாத்மா ஆத்மனி க்ருஹ்யதே சத்யேநைநம் தபசா யோனு பஸ்யதி” -சுவேதாஸ்வதர உபநிஷத் – கிருஷ்ண யஜுர்வேத சாகை.

“எள்ளில் எண்ணெய்போல, தயிரில் நெய் போல, பூமிக்கடியில் நீர்ப் பிரவாகம் போல, அரணியில் அக்னி போல புத்தியில் பரமாத்மா மறைந்துள்ளார். வாய்மையாலும் தவத்தாலும் அவரைக் காண முடியும்”

இந்த மந்திரத்தில் பயன்படுத்திய கவிதை மொழி மிகச் சிறப்பானது.

ஸ்வேதாஸ்வதரர் என்ற மகரிஷி பல உவமைகளோடு ஆத்ம தத்துவத்தை விவரித்து, “ஆத்ம தத்துவம் வெளியில் தென்படும் பொருள் அல்ல. வெளி வஸ்துவானால் அது பெறப்பட வேண்டியதே அல்ல. ஏனென்றால் பொருள் உள்ளது என்றால் நிச்சயம் அதற்கு அழியும் இயல்பு இருக்கும். மாயைக்கு உண்டான இயல்பு இருக்கும். ஆத்மா அப்படிப்பட்டது அல்ல” என்கிறார்.

பரமாத்மா என்றாலும் ஆத்மா என்றாலும் ஒன்றுதான். சாதாரண மொழியில்  கூற வேண்டுமானால் பகவான், கடவுள் என்று பொருள்.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

இவ்வாறு வர்ணிக்கப்படுவது எங்கோ தொலைவில் இல்லை. அது நம் புத்தியிலேயே உள்ளது. அது இருப்பதால்தான் புத்தி வேலை செய்கிறது. உடல் இயங்குகிறது. ஆனால் அதைத் தெரிந்து கொள்வதற்கு புத்தி முயற்சிப்பதில்லை.

புத்தியிலே உள்ள பரமாத்மாவை எவ்விதம் தெரிந்து கொள்வது? இத்தனை உவமைகள் எதற்கு? ஒவ்வொரு உபமானத்திலிருந்தும் ஒவ்வொரு உபதேசத்தைப் பெற முடியும்.

ohm
ohm

முதலில் கூறுவது எள்-எண்ணெய் நியாயம். அதாவது எள்ளில் எண்ணெய் எங்கே மறைந்திருக்கிறது என்று யாரால் கூற முடியும்? எள் முழுவதும் எண்ணெய் உள்ளது. எண்ணையைப் பெற வேண்டும் என்றால் எள்ளைப் பிழிய வேண்டும். அதேபோல் இறைவனும் இந்த பிரபஞ்சத்தில், நம்மில், எங்கும் வியாபித்துள்ளான். 

தயிரில் நெய் உள்ளது. நெய் கிடைக்க வேண்டுமென்றால் கடைய வேண்டும்.  ஊற்றுக்களில் நீர் உள்ளது. பூமியைத் தோண்டி சிரமப்பட்டு நீரை மேலே கொண்டு வர வேண்டும். அடுத்து அரணி நியாயம். யாகங்கள் செய்யும் போது இரு அரணிக் கட்டைகளைக் கடைந்து நெருப்பு மூட்டுவார்கள். 

பரமாத்மா எங்கும் நிறைந்தவன் என்று அறிவதற்காக எள்-எண்ணெய் நியாயத்தை கூறினார். சாதனை செய்தால் பகவானை அடையலாம் என்பதற்காக தயிரைக் கடைந்தால் நெய் கிடைக்கும் என்று உதாரணம் காட்டினார். அந்த சாதனையை எவ்வாறு சிரமப்பட்டு செய்ய வேண்டும் என்று விளக்குவதற்காக ஊற்றுநீர் உதாரணத்தைக் கூறினார். அரணியில் தீ மூட்டுவது என்பது ஒரு சாஸ்த்ரீயமான மார்க்கத்தை எடுத்துரைக்கிறது. வன்னி மரக்கட்டைகளைக் கடைந்து அக்னி மூட்டுவது என்பது வேத மந்திரங்களோடு கூடிய செயல். அதேபோல் பரமாத்மாவை அடைவதற்கு வேதம் முதலான சாஸ்த்திரங்கள் காட்டிய வழியிலே சாதனை செய்ய வேண்டும். இந்த நான்கும் மறைவாக உள்ள பரமாத்மாவை அடைவதற்குச் செய்யும் முயற்சிகள். 

ALSO READ:  மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
brahma vshnu sivan
brahma vshnu sivan

“சர்வ வ்யாபி நமாத்மானம் க்ஷீரே சர்பிரிவார்பிதம் ஆத்ம வித்யா தபோமூலம் தத் ப்ரஹ்மோபனிஷத் பரம்” என்று அடுத்த மந்திரத்தில் கூறுகிறார்.

பாலில் நெய் போல பரமாத்மாவும் ஜகத் எங்கும் பரவியுள்ளார். பாலில் உள்ள நெய் தென்படாதது போலவே பிரபஞ்சத்தில் சாதாரண கண்களுக்கு பரமாத்மா தென்படமாட்டார். நெய்யைப் பெறுவதற்கு பாலை எத்தனை விதங்களில் மாற்ற வேண்டுமோ அதே போல் உலகில் சாதனை செய்து பகவானைப் பெற முடியும் என்று தெரிவிப்பதற்காக இந்த உவமை.

ஆத்மாவை அறிந்து கொள்வதே ஆத்ம வித்யை. அதற்கு மூலம் தவம். “ஆத்ம வித்யா – தபோ மூலம்” என்ற இந்த சொல்லை எப்போதும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தவம் என்றால் நியமத்தை  கடைபிடிப்பதும், சாஸ்திர தொடர்புடைய ஞானமார்க்கத்தில் செல்வதும்.”யஸ்ய ஞானமயம் தப:” ஞானமே தவம். 

இந்த இரண்டும் மேற்கொண்டால்தான் ஆத்ம வித்யையை அறியமுடியும். எங்கும் நிறைந்திருக்கும் பிரம்மத்தை அடைய வேண்டும் என்றால் தவத்தின் மூலம் மட்டுமே முடியும். “தபஸா ப்ரஹ்ம விஜிஞ்ஜாஸஸ்வ” என்ற மந்திரத்தையும் உபநிஷத்து மாதா தெரிவிக்கிறாள்.

ALSO READ:  ‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Entertainment News

Popular Categories