March 26, 2025, 11:04 PM
28.8 C
Chennai

தினசரி ஒரு வேத வாக்கியம்: 80. நலமும் மங்களமும் அருள்வாயாக!

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

80. நலமும் மங்களமும் அருள்வாயாக!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்  

“பத்ரம் பத்ரம் க்ரதுமஸ்மாஸு தேஹி” – ருக் வேதம்.
“பரமேஸ்வரா! எமக்கு சுகம்,மங்களகரமான சங்கல்பம், ஞானம், செயல்களை அருள்வாயாக!”

லோக கல்யாணம், நன்மை இவற்றை அளிக்கும் செயல்களை ‘க்ரது’ என்பர். அப்படிப்பட்ட நற்செயல்கள் எண்ணத்தாலோ நடத்தையாலோ நம்மால் செய்யப்படுவது.

ஏதாவது பணி நிகழ வேண்டுமென்றால் முதலில் சங்கல்பம் இருக்க வேண்டும். அதன்பின் பணிபுரியும் திறமை, அறிவு, வழிமுறை தேவை. அதுவே பணியின் தொடர்பான ஞானம். அதன்பின் பணியைச் செய்வது. அதன் பின் அதன் பயன்.

‘பத்ரம்’ என்றால் க்ஷேமம், நன்மை, மங்களம் என்று பொருள். சங்கல்பம் என்றால் மனதில் நடக்கும் செயல். அதுவே ஞானம். புத்தியோடு தொடர்புடையது. செயல் உடலோடு தொடர்புடையது. சங்கல்பமும் செயலும் சுபமாக, உலக நன்மைக்காக இருந்தால் பலனும் அதே போல் இருக்கும். 

“யாத்ருஸீ பாவனா தத்ர சித்திர்பவதி தாத்ருஸீ” – எண்ணம் போல் வாழ்வு. அதனால்தான் எண்ணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது நம் கலாச்சாரம். மனத்தூய்மையும், சாதனையும் வல்லமையோடு விளங்க வேண்டுமானால் சங்கல்பம் பலமாக இருக்க வேண்டும். எண்ணம் திடமாக இருந்தால்தான் மன ஒருமைப்பாடும் உறுதியும் ஏற்படும்.

நல்ல சிந்தனையும், தன்னலம் மட்டுமின்றி சமுதாய நலமும் நிறைவேறும்படியான திட்டமும் மிகவும் தேவை. நாம் செய்யும் எந்த ஒரு வேலைக்கும் பயனை முன்பே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். “ப்ரயோஜன மனுத்திஸ்ய நமந்தோSபி ப்ரவர்ததே” – பிரயோஜனம் இல்லாமல் முட்டாள் கூட எந்த செயலையும் செய்யமாட்டான். 

prayagraj modi in ganga
prayagraj modi in ganga

‘ப்ரயோஜனம்’ என்பது ‘பத்ரம்’ என்பதைத் தர வேண்டும். அதற்குத் தேவையான சங்கல்பம், சிந்தனை, நடத்தை கூட பத்ரமாக இருக்க வேண்டும். எந்த ஒரு நிலையிலும் அதர்மம், அசுபம் போன்ற எதிர்மறை எண்ணத்தின் பாதிப்பு இருக்கக் கூடாது.

நம் முன்னோர் இவ்விதம் மனத் தூய்மைக்கும் புத்தி கூர்மைக்கும் முக்கியத்துவம் அளித்தனர். எங்கும் சுபமும் மங்களமும் நிலவ வேண்டும் என்று விரும்பினார்கள். உலக நன்மைக்கான செயல்களே வாழ்க்கை என்று எண்ணினர் வேத மகரிஷிகள். அதற்கு ஏற்றாற்போல் வாழ்வியல் முறையை வகுத்துக் கொண்டார்கள். நல்ல சிந்தனையும் நல்ல நடத்தையும்  அருளும்படி நம் சனாதன மதம் பிரார்த்திக்கிறது. சகல ஜகத்திலும் பரவியுள்ள தெய்வத்திடம் அவர்கள் வேண்டுவது இதுவே. 

வைதிகமான நித்திய பிரார்த்தனையிலும் எண்ணத்திலும் தாமும் தம் மனமும் மட்டுமின்றி பிரபஞ்சம்  அனைத்தும் நிரந்தரமான சுபத்தோடு விளங்க வேண்டும் என்னும் உயர்ந்த இலக்கே உயிரோட்டமாக வாழ்க்கை நடத்தினர்.

நம் கலாச்சாரத்தில் ஒவ்வொரு எண்ணமும் இத்தனை திவ்யமாக இருந்தது என்பதற்கு இவை சான்றுகள். 

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

100 இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்; ஆனால்…

100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே முஸ்லிம்கள் வசிக்க முடியும் ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு ஏப்.2ல் தொடக்கம்!

கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

பஞ்சாங்கம் – மார்ச் 26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: போராடித் தோற்ற குஜராத் அணி!

பஞ்சாப் அணியின் மட்டையாளர், ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

100 இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்; ஆனால்…

100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே முஸ்லிம்கள் வசிக்க முடியும் ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு ஏப்.2ல் தொடக்கம்!

கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

பஞ்சாங்கம் – மார்ச் 26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: போராடித் தோற்ற குஜராத் அணி!

பஞ்சாப் அணியின் மட்டையாளர், ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் காலமானார்!

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48.

எடப்பாடி தலைமையிலான அதிமுக., குழு தில்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு!

தமிழகத்தில் NDA ஆட்சி அமைந்ததும் சாராய வெள்ளம் வடிந்துவிடும். இந்த சாராய வெள்ளமும் ஊழல்களும் முற்றிலும் நிறுத்தப்படும் -

மக்கள்தொகையாம்! தொகுதிக் குறைப்பாம்!! அட கழகமே… வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறதே!

2008ல் மாநில அரசு திமுக தானே ஸ்டாலின் அண்ணாச்சி ! நாங்களும் சொல்லுவோம் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது Fair delimitation for south Tamilnadu

Entertainment News

Popular Categories