பாரதி-100: கண்ணன் பாட்டு (4)

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பகுதி – 4, கண்ணன் – என் தோழன்.

இனி கண்ணன் பாட்டின் முதல் பாடலையும் அதன் பொருளைக் காணலாம். முதலில் பாடல்.

புன்னாகவராளி – திஸ்ரஜாதி ஏகதாளம் – வத்ஸல ரசம்

பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்

புறங்கொண்டு போவ தற்கே – இனி

என்ன வழியென்று கேட்கில், உபாயம்

இருகணத் தேயுரைப் பான்; – அந்தக்

”கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்

காணும் வழியொன் றில்லேன் – வந்திங்கு

உன்னை யடைந்தேன்” என்னில் உபாயம்

ஒருகணத் தேயுரைப் பான். … 1

கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்

கலக்க மிலாதுசெய் வான்; – பெருஞ்

சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்

தேர்நடத் திக்கொடுப் பான்; – என்றன்

ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்

உற்ற மருந்துசொல் வான்; – நெஞ்சம்

ஈனக் கவலைக ளெய்திடும் போதில்

இதஞ்சொல்லி மாற்றிடு வான். … 2

பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு

பேச்சினி லேசொல்லுவான்;

உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்

உண்ணும் வழியுரைப் பான்;

அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்

அரைநொடிக் குள்வருவான்;

மழைக்குக் குடை, பசிநேரத் துணவென்றன்

வாழ்வினுக் கெங்கள்கண் ணன். … 3

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்

கேலி பொறுத்திடு வான்; – எனை

ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்

ஆறுதல் செய்திடுவான்; – என்றன்

நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று

நான்சொல்லும் முன்னுணர் வான்; – அன்பர்

கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு

கொண்டவர் வேறுள ரோ? … 4

உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்

ஓங்கி யடித் திடுவான்; – நெஞ்சில்

கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு

காறி யுமிழ்ந்திடு வான்; – சிறு

பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட

பாசியை யெற்றி விடும் – பெரு

வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி

மெலிவு தவிர்த்திடு வான். … 5

சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்

சிரித்துக் களித்திடு வான்; – நல்ல

வன்ன மகளிர் வசப்பட வேபல

மாயங்கள் சூழ்ந்திடு வான்; – அவன்

சொன்ன படிநட வாவிடி லோமிகத்

தொல்லை யிழைத்திடு வான்; – கண்ணன்

தன்னை யிழந்து விடில், ஐயகோ! பின்

சகத்தினில் வாழ்வதி லேன். … 6

கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்

குலுங்கிடச் செய்திடு வான்; – மனஸ்

தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி

தளிர்த்திடச் செய்திடுவான்; – பெரும்

ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று

அதனை விலக்கிடு வான்; – சுடர்த்

தீபத்தி லேவிடும் பூச்சிகள் போல்வருந்

தீமைகள் கொன்றிடு வான். … 7

உண்மை தவறி நடப்பவர் தம்மை

உதைத்து நசுக்கிடுவான்; – அருள்

வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்

மலைமலை யாவுரைப் பான்; – நல்ல

பெண்மைக் குணமுடை யான்; – சில நேரத்தில்

பித்தர் குணமுடை யான்; – மிகத்

தண்மைக் குணமுடை யான்; சில நேரம்

தழலின் குணமுடை யான். … 8

கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்

குணமிகத் தானுடை யான்; – கண்ணன்

சொல்லு மொழிகள் குழந்தைகள்; போலொரு

சூதறி யாதுசொல் வான்; – என்றும்

நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது

நயமுறக் காத்திடு வான்; – கண்ணன்

அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்

அழலினி லுங்கொடி யான். … 9

காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்

கண்மகிழ் சித்திரத் தில் – பகை

மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்

முற்றிய பண்டிதன் காண்; – உயர்

வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்

மேவு பரம்பொருள் காண்; – நல்ல

கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்

கீர்த்திகள் வாழ்த்திடு வேன். … 10

இனி கண்ணன் பாட்டின் முதல் பாடலின் பொருளை நாளை காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories