பாரதி-100: கண்ணன் பாட்டு (4)

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பகுதி – 4, கண்ணன் – என் தோழன்.

இனி கண்ணன் பாட்டின் முதல் பாடலையும் அதன் பொருளைக் காணலாம். முதலில் பாடல்.

புன்னாகவராளி – திஸ்ரஜாதி ஏகதாளம் – வத்ஸல ரசம்

பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்

புறங்கொண்டு போவ தற்கே – இனி

என்ன வழியென்று கேட்கில், உபாயம்

இருகணத் தேயுரைப் பான்; – அந்தக்

”கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்

காணும் வழியொன் றில்லேன் – வந்திங்கு

உன்னை யடைந்தேன்” என்னில் உபாயம்

ஒருகணத் தேயுரைப் பான். … 1

கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்

கலக்க மிலாதுசெய் வான்; – பெருஞ்

சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்

தேர்நடத் திக்கொடுப் பான்; – என்றன்

ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்

உற்ற மருந்துசொல் வான்; – நெஞ்சம்

ஈனக் கவலைக ளெய்திடும் போதில்

இதஞ்சொல்லி மாற்றிடு வான். … 2

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு

பேச்சினி லேசொல்லுவான்;

உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்

உண்ணும் வழியுரைப் பான்;

அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்

அரைநொடிக் குள்வருவான்;

மழைக்குக் குடை, பசிநேரத் துணவென்றன்

வாழ்வினுக் கெங்கள்கண் ணன். … 3

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்

கேலி பொறுத்திடு வான்; – எனை

ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்

ஆறுதல் செய்திடுவான்; – என்றன்

நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று

நான்சொல்லும் முன்னுணர் வான்; – அன்பர்

கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு

கொண்டவர் வேறுள ரோ? … 4

உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்

ஓங்கி யடித் திடுவான்; – நெஞ்சில்

கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு

காறி யுமிழ்ந்திடு வான்; – சிறு

பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட

பாசியை யெற்றி விடும் – பெரு

வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி

மெலிவு தவிர்த்திடு வான். … 5

சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்

சிரித்துக் களித்திடு வான்; – நல்ல

வன்ன மகளிர் வசப்பட வேபல

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

மாயங்கள் சூழ்ந்திடு வான்; – அவன்

சொன்ன படிநட வாவிடி லோமிகத்

தொல்லை யிழைத்திடு வான்; – கண்ணன்

தன்னை யிழந்து விடில், ஐயகோ! பின்

சகத்தினில் வாழ்வதி லேன். … 6

கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்

குலுங்கிடச் செய்திடு வான்; – மனஸ்

தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி

தளிர்த்திடச் செய்திடுவான்; – பெரும்

ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று

அதனை விலக்கிடு வான்; – சுடர்த்

தீபத்தி லேவிடும் பூச்சிகள் போல்வருந்

தீமைகள் கொன்றிடு வான். … 7

உண்மை தவறி நடப்பவர் தம்மை

உதைத்து நசுக்கிடுவான்; – அருள்

வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்

மலைமலை யாவுரைப் பான்; – நல்ல

பெண்மைக் குணமுடை யான்; – சில நேரத்தில்

பித்தர் குணமுடை யான்; – மிகத்

தண்மைக் குணமுடை யான்; சில நேரம்

தழலின் குணமுடை யான். … 8

கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்

குணமிகத் தானுடை யான்; – கண்ணன்

சொல்லு மொழிகள் குழந்தைகள்; போலொரு

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

சூதறி யாதுசொல் வான்; – என்றும்

நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது

நயமுறக் காத்திடு வான்; – கண்ணன்

அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்

அழலினி லுங்கொடி யான். … 9

காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்

கண்மகிழ் சித்திரத் தில் – பகை

மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்

முற்றிய பண்டிதன் காண்; – உயர்

வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்

மேவு பரம்பொருள் காண்; – நல்ல

கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்

கீர்த்திகள் வாழ்த்திடு வேன். … 10

இனி கண்ணன் பாட்டின் முதல் பாடலின் பொருளை நாளை காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories