சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும்(5): சூசி கடாஹ ந்யாயம்!

samskrita nyaya - 2026

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் – பகுதி 5

தெலுங்கில்- பி.எஸ் சர்மா
தமிழில்- ராஜி ரகுநாதன்

“சூசி கடாஹ ந்யாய:” – ஊசி கங்காள நியாயம்.
சூசி –என்றால் ஊசி, கடாஹ- என்றால் கங்காளம்.

பாத்திரங்களை தயார் செய்யும் கொல்லனிடம் ஒருவன் வந்து ஒரு கங்காளம் செய்து தரும்படி கேட்டான். கொல்லன் அந்த வேலையை தொடங்கினான். அதற்குள் இன்னொருவன் வந்து ஒரு ஊசி தயார் செய்து தரும்படி கொல்லனைக் கேட்டான். மிகக் குறைந்த நேரத்தில் கொல்லனால் ஒரு ஊசியைத் தயாரித்து அளிக்க முடியும். அதனால் கையில் இருந்த கங்காளம் செய்யும் வேலையை நிறுத்தி விட்டு பின்னால் வந்தவன் கேட்ட ஊசியை செய்து அனுப்பினான். அதன் பின் பெரிய வேலையை எடுத்துக் கொண்டான். இதுதான் புத்திசாலித்தனம். இதுவே ‘ஊசி கங்காள நியாயம்’.


நாம் ஒரு நெருப்புப் பெட்டி வாங்குவதற்கு கடைக்குச் செல்கிறோம். அந்த நேரத்தில் கடைக்காரர் அதற்கு முன் வந்த மற்றொருவர் கேட்ட சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். கடைக்காரர் புத்திசாலியாக இருந்தால் அந்த பெரிய பேரத்தை ஒரு நிமிடம் நிறுத்தி வைத்து விட்டு நமக்கு நெருப்புப் பெட்டி கொடுத்து அனுப்புவார். அது வியாபார இயல்பு.

ஊசி-கங்காளம் நியாயத்தில் ‘காமர்ஸ்-சயின்ஸ்’ மற்றும் ‘காமன்-சென்ஸ்’ இரண்டும் உள்ளன.

பைக்கிற்கு பிரேக் முடுக்கும் வேலைக்காக ஒரு ஸ்கூட்டர் மெக்கானிக்கிடம் செல்கிறோம். ஒரு ஸ்கூட்டரைப் பிரித்து வைத்து ரிப்பேர் செய்து கொண்டிருந்த  மெக்கானிக் அந்த பெரிய வேலையை நிறுத்தி வைத்து ஒரு சில நிமிடங்களில் பிரேக் சரிசெய்து நம்மை அனுப்புகிறார். அது வியாபார இயல்பு.


இவ்விதமாக குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய வேலையை முதலில் முடித்துக் கொடுப்பது வியாபார வழிமுறை.

ஒரு பச்சைக் கொத்தமல்லி கட்டுக்காக சென்ற நம்மை மணிகணக்காக நிறுத்தி வைத்தால் எரிச்சல் வந்து வேறொரு கடைக்குச் சென்று விடுவோம் அல்லவா?


ஏதாவது பெரிய வேலை தம் முன்னால் இருக்கும் போது வேறு எதிலும் ஈடுபடாதவர் சிலரையும் நாம் பார்க்கிறோம். அவர்களுக்கு செய்தி அளிக்கிறது ஊசி-கங்காளம் நியாயம். மல்டி டாஸ்கராக இருக்கச் சொல்லி தூண்டுகிறது இந்த நீதி சூத்திரம்.

எந்தச் சிறிய வேலை செய்யச் சொன்னாலும், ஆறு மாதத்திற்குப் பின் வரும் மகளின் திருமணத்தை சாக்கு சொல்லி தட்டிக் கழிப்பவருக்கு ‘கண் திறப்பு’ இந்த நியாயம்.

நினைத்த வேலையை நடுவில் நிறுத்துவது அல்ல இது. வேலைகளை ஒரு முறைப்படி செய் என்று கூறும் அற்புதமான செய்தி இந்த ஊசி-கங்காளம் நியாயத்தில் உள்ளது. பிறருடைய நேரத்திற்கும் மதிப்பு அளிக்கச் சொல்லும்  அறிவுரை இதில் மறைந்துள்ளது.


விவேகத்தோடு, நேரத்தை வீணாக்காமல், பிறருடைய நேரத்திற்கும் மதிப்பு அளித்து நடந்து கொள்பவரே அறிஞர் என்று மகாபாரதம் விதுரநீதி அறிவுறுத்துகிறது.

யதாசக்தி சிகீர்ஷந்தி யதாசக்தி ச குர்யதே |
ந கிஞ்சிதவமன்யந்தே நரா: பண்டிதபுத்தய” ||

(மகாபாரதம்- உத்தியோக பர்வம்- 33/21)

பொருள்: விவேகம் நிரம்பிய அறிஞர் தம் சக்திக்கு ஏற்ப பணி புரிய நினைப்பார். தம் சக்திக்குத் தகுந்தபடி செயலைச் செய்து முடிப்பார். எந்த வேலையையும் இகழ மாட்டார்.

ஒரே வேலையை இழுத்தடிக்காமல், செய்ய நினைத்த வேலையை நடுவில் நிறுத்தாமல், நேரத்தை வீணடிக்காமல் பணி புரியும்படி இந்த சுலோகம் அறிவுறுத்துகிறது. 

நிஸ்சித்ய ய: ப்ரக்ரமதே நாந்தர்வசதி கர்மண:|
அவந்த்ய காலோ வஸ்யாத்மா ஸ வை பண்டித உச்யதே ||

(மகாபாரதம், உத்தியோக பர்வம் -33/24)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories