குடியுரிமை திருத்தச் சட்டம் – இந்திய இஸ்லாமியர்களின் புரிந்துணர்வு!

caa citizenship amendment act1 - 2026
  • இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள நாட்டுப்பற்று:
  • CAA – குடியுரிமை சட்டதிருத்த மசோதாவின் புரிதல்
  • மக்கள் அனைவரையும் உள்ளடக்குவதை ஊக்குவித்தல்

குடியுரிமை சட்டதிருத்த மசோதா 2019 ஆம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, அன்று முதல் இந்த சட்டம் பேசும்பொருளாக மாறிவிட்டது.

குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் இதனை தங்கள் மக்களுக்கு பாதகமான சட்டம் என எண்ணுகின்றனர் . இதனுடம் சம்பந்தபட்ட எதிர்ப்பு சம்பவங்களை (சம்பந்தப்பட்ட வன்முறைகள்) யாராலும் மறக்க இயலாது. அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட போதனைகள் மற்றும் முகமது நபியினால் கூறிய எடுத்துக்காட்டுதளின் படி இஸ்லாத்தில் ஒரு நாட்டின் மீது மற்றும் அதன் சட்டதிட்டங்கள் மீது விசுவாசம் கொள்வதன் முக்கியத்துவத்தை இஸ்லாத்தின் அடிப்படையில் ஆராய்வது அவசியமானதாகும் .

இறைநம்பிக்கை மற்றும் நாட்டின் மீது வைக்கும் விசுவாசத்தின் முக்கியத்துவம் பற்றி இஸ்லாத்தில் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கீழ்படிதல் பற்றி குரானில் ஸுரா அன் நிசா (4:60 ) கூறுகையில் “இறைநம்பிக்கை உள்ளவர்களே , கடவுளை அஞ்சிக் கொள்ளுங்கள் , நபிகள் நாயகத்திற்க்கு கீழ்ப்படியுங்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கீழ்படிந்து செயல்படுங்கள்”.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

குரானில் கூறிய இந்த கூற்று நாட்டின் சட்டதிங்கள் மற்றும் நாட்டை ஆழ்பவர்களுக்கு மரியாதை கொடுத்து நடப்பதை இந்திய முஸ்லிம்களுக்கு நினைவூட்டுகின்றது. தாய்நாட்டின் மீது உள்ள அன்பு மற்றும் உண்மையான தேசபக்தியே நம்பிக்கையின் அடிப்படை அம்சம் என நபிகள் நாயகம் வலியுறுத்தியுள்ளார் .

“தாய்நாட்டின் மீது கொண்ட அன்பு நம்பிக்கையின் ஒரு அங்கமாகும்” என்று நபிகள் நாயகம் கூறுகிறார். இஸ்லாமியர்களின் இறைவன் மீது கொண்ட அன்பு மற்றும் தாய்நாட்டின் மீது கொண்ட அர்ப்பணிப்பு இவை அனைத்தும் முரண்பட்ட கருத்துகள் அல்ல மாறாக அது இரண்டுமே நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.  அமைதியை ஊக்குவிக்கவும் மக்களின் நலனுக்குப் பாடுபடவும் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு வழியுறுத்துகிறது .

இறைவன் மீது கொண்ட உண்மையான அன்பு மற்றும் இஸ்லாம் இரண்டுமே தாய்நாட்டின் மீது கொண்ட விசுவாசம், மரியாதை மற்றும் நாட்டின் மீது கொண்ட பக்தி இவற்றை நம்முள் ஏற்படுத்துகிறது. முஸ்லிம்கள் பொறுப்புள்ள மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருக்க வேண்டும், அவர்களின் செயல்களில் நீதி மற்றும் நியாயமான கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும். சட்டத்தை தன் கையில் எடுத்தல் அல்லது நாட்டிற்க்கு எதிராக சூழ்ச்சி செய்தல் இவை அனைத்தும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவையாகும் .

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இஸ்லாம் அமைதி, நீதி மற்றும் சட்டத்தின்படி  ஆட்சி ஆகியவற்றை வழியுறுத்துகிறது.  ஏதேனும் குறைகள் அல்லது கவலைகள் இருப்பின் அனைத்தும் நாட்டின் சட்ட வரையறைக்குள் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும். ஒரு தனிமனிதன் சட்டபடி செய்யபடும் மனிதனாக , நல்லிணக்கத்தை ஊக்குவிப்பவனாக மற்றும் தன்னால் முடிந்த பங்களிப்பை தன் சமூகத்திற்க்கு வழங்குபவனக இருக்க வேண்டும் என்ற கருத்தை இஸ்லாம் வழியுறுத்துகிறது .

இந்த புரிதலின் அடிப்படையில் , இந்த சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்பதை இந்திய முஸ்லிம்கள் அறிந்துகொள்ளவேண்டும். இந்த சட்டமானது மதம் சார்ந்த துன்புறுத்தலுக்கு ஆளாகி அந்நாட்டை விட்டு வெளியேறிய முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டமாகும்.

இஸ்லாத்தின் போதனைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், இந்திய முஸ்லிம்கள் தங்கள் தேசத்திற்கு விசுவாசத்தின் முக்கியத்துவத்தைப் ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் ஒரு இணக்கமான மற்றும் உள்ளடக்கிய சமுதாயத்தை வளர்ப்பதில் தீவிரமாக பங்கேற்கலாம்.

CAA என்பது இந்திய முஸ்லிம்களை குறிவைத்து ஏற்றப்பட்ட சட்டம் இல்லை, அது மதம் சார்ந்த துன்புறுத்தலுக்கு ஆளான மக்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்ட வடிவமாகும்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

CAA பற்றிய தவறான கருத்துக்களை அகற்றி, குரானின் மொழிகளுக்கு ஏற்ப்ப இந்திய இஸ்லாமியர்கள் விசுவாசத்தின் ஆழமான உணர்வை வளர்த்து, இஸ்லாம் பரிந்துரைக்கும் நீதி, அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை நிலைநிறுத்தி, தங்கள் நாட்டின் முன்னேற்றம், ஒற்றுமை மற்றும் நல்வாழ்வுக்கு தீவிரமாக பங்களிக்க வேண்டும்.

பேச்சுவார்த்தை, புரிதல் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் இந்திய இஸ்லாமியர்கள்  இணக்கமான சமூகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றவேண்டும் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories