December 5, 2025, 11:53 AM
26.3 C
Chennai

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (55): தேஹளீதீப ந்யாய: 

samskrita nyaya - 2025

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 55

 தெலுங்கில்: பி.எஸ். சர்மா 
தமிழ் மொழிபெயர்ப்பு: ராஜி ரகுநாதன்
 

தேஹளீதீப ந்யாய: 
தேஹளீ – வீட்டு வாசற்படி, தீப: – விளக்கு 
(ஒரே கல்லில் இரண்டு மாங்காய்)

நுழைவாயிலில் வைத்த விளக்கு வீட்டின் உள்ளும், வீட்டிற்கு வெளியிலும் ஒளியைத் தரும் என்பது இந்த நியாயத்தின் பொருள்.

ஒரே பொருள் அல்லது ஒரே செயல் இரண்டு வித நன்மைகளையும், பயன்களையும் சாதித்துத் தரும் என்று எடுத்துரைக்கும் போது இந்த நியாயத்தை உதாரணம் காட்டுவார்கள். ஒரே சொல்லுக்கு இரு வேறு பயன்பாடுகள் இருக்கும் போதும் இந்த நியாயத்தை எடுத்துக் காட்டுவார்கள். 

வாசற்படியில் வைக்கும் விளக்கில் கூறும் நியாயம் என்ன? ஒரு செயலில் இரு பயன்களை எவ்வாறு பெறுவது? ஒரு செயலை எங்கே, எப்படிச் செய்தால் இரண்டு நன்மைகள் கிடைக்கும்? தீபத்தை எங்கே வைத்தால் இரு புறங்களிலும் வெளிச்சம் வரும்? இவற்றை அறிவோம். 

“ஏகாக்ரியாத்வர்த கரீ” – “ஒரே செயல் இரண்டு பலன்களைக் கொடுப்பது” என்ற புகழ் பெற்ற வாக்கியத்திற்கு இந்த நியாயம் முன்னோடி. 

வீட்டிற்குள்ளே ஒரு தீபமும், வெளியில் ஒரு தீபமும் வைக்காமல் நடுவில் வைப்பது என்பது புத்திசாலித்தனமான செயல். அது ஒரு உத்தி. 

சாதாரணமாக, பலர் தம் வேலைகளிலும் வருமானத்தைப் பெருக்குவதிலும் மூழ்கி விடுவர். அதற்கு ‘கரீர்’ (career), ‘வாழ்க்கைப் பணி’ என்று பெயர் வைப்பார்கள். அதில் முழுவதும் இறங்கி குடும்பத்தை மறந்து விடுவார்கள். சம்பாதிப்பது யாருக்காக என்று சிந்திக்க மாட்டார்கள். தனி மனிதனிடமிருந்து குடும்பம், குடும்பத்தில் இருந்து சமுதாயம், சமுதாயத்தில் இருந்து தேசம் பயனடைய வேண்டும் என்ற செய்தி இந்த நியாயத்தில் உள்ளது. ஒரு வேலையைச் சிந்தித்துத் திறமையாகச் செய்யும் போது பலனும் அதிகம் கிட்டும். அதைப் பற்றி சிந்தியுங்கள் என்று கூறுகிறது இந்த நியாயம்.    

பெண் கல்வி:

ஒரே பணியில் இரு இலக்குகளை சாதிப்பதை ஆங்கிலத்தில் ‘Two BIrds at one shot’ என்பார்கள். தமிழில் ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்போம். இதனை எடுத்துக் காட்டி அரசியல்வாதி, நவீன சாணக்கியர் என்று பகழப்பெற்றவர், ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர், ஸ்ரீ ராஜாஜி (சி. ராஜாகோபாலாசாரி) ஒரு முறை நாக்பூரில் ஒரு பொறியியல் கல்லூரியில் உரையாயற்றுகையில் பெண் கல்வியைப் போற்றி, “ஒரு பெண் பட்டதாரி ஆவதென்பது, ஐந்து ஆண் மகன்கள் பட்டதாரி ஆவதற்குச் சமம். பெண்கள் படித்தால் முழுக் குடும்பமும் பயன் பெறும். ஏனென்றால் அவள் தன் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தருவாள். அவர்களை நல்ல குடிமகன்களாக உருவாக்கும் ஆசிரியையாக ஆவாள்” என்றார். 

சுவாமி விவேகானந்தர், “வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் கலாசாரத்தைக் கற்றுக் கொடுத்து, கல்வி கற்பித்து, அறிவூட்டினால், அவர்கள் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் கௌரவம் பெற்றுத் தருவார்கள்” என்று பெண் கல்வி பற்றி உரையாற்றியபோது இந்த ‘தேஹளீதீப’ ந்யாயத்தை உதாரணம் காட்டினார். “வீட்டில் பெண்கள் படிப்பறிவோடு விளங்கினால் குடும்பம் முழுவதும் பயன்பெறும்” என்று கூறி சுவாமி விவேகானந்தர் தன் பெண் சீடரான சகோதரி நிவேதிதைக்குப் பெண் கல்வி பற்றி பிரச்சாரம் செய்யும் பணியை ஒப்படைத்தார். அந்த குருவும் சிஷ்யையும் சேர்ந்து ‘தேஹளீதீப’த்தைப் போலக் கீழை நாட்டிலும், மேலை நாட்டிலும் ஆன்மீக ஒளியைப் பரப்பி சிரஞ்சீவிகளாகத் திகழ்கிறார்கள். 

ஆயுர்வேதம்:

“ஏகாக்ரியாத்வர்த கரீ” என்பதற்கு உதாரணமாக ஆயுர்வேத நூல்களில் பல சூத்திரங்கள் உள்ளன. ஆயுர்வேதத்திற்கு இரண்டு வித பலன்கள் உண்டு. ஆரோக்கியமாக இருப்பவர்களின் ஆரோக்கியத்தைப் பேணுவது, (ஸ்வஸ்தஸ்ய ஸ்வாஸ்த்ய ரக்ஷணம்). நோயாளியின் நோயைக் குணப்படுத்துவது (ஆதுரஸ்ய விகார ப்ரஸமனம்). இது ஒரே கணையால் இரண்டு இலக்குகளை வீழ்த்துவது என்பதற்கான குறியீடு. 

தாய்ப்பால் குடிக்கும் வயதில் இருக்கும் சிசுக்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டால் ஆயுர்வேத மருத்துவர்கள் தாய்க்கு மருத்துவம் பார்ப்பார்கள். தாய்க்கு மருந்து கொடுப்பார்கள். அது இருவருக்கும் நன்மை விளைவிக்கும். 

யோக மார்கம் ஒரு தீபம்:

பிராணாயாமத்தால் பல நன்மைகள் உண்டு. மூச்சை வெளியில் விடுவது (ரேசகம்), உள்ளே இழுப்பது (பூரகம்), நிறுத்தி வைப்பது (கும்பகம்) இவை பிராணாயாமப் பயிற்சியின் பகுதிகள். இது வெறும் உடலால் செய்யும் செயல் அல்ல. மனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மன அழுத்தத்தைக் குறைக்கும் வழி. அமைதியான வாழ்க்கைக்கான  சிறந்த மார்க்கம். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி வளர்கிறது. 

தர்மம் – சுவரின் மேல் விளக்கு:

“ஏகாக்ரியாத்வர்த கரீ” பற்றிக் கூறுகையில், வியாச முனிவர் வேதனையோடு உதிர்த்த  சொற்கள் கவனிக்கத் தக்கவை. 

“ஊர்த்வ பாஹோரிவ ரௌம்யேஷா 
ந கஸ்சிதபி ஸ்ருணோதி மே !
தர்மாதர்தஸ்ச காமஸ்ச
ஸ கிமர்தம் ந சேவ்யதே !!”

பொருள்: இரண்டு கைகளையும் மேலே தூக்கி கூறுகிறேன். என் பேச்சைக் கேளுங்கள். தர்மத்தைக் கடைப்பிடியுங்கள். அதன் மூலம் அர்த்தம், காமம் இரண்டும் கிடைக்கும். தர்மம் என்ற சுவரின் மேல் தீபத்தை வைத்தால் அந்த வெளிச்சம் அர்த்தம், காமம் என்ற இரண்டின் மீதும் பரவும் என்று வியாச மகரிஷி கூறுகிறார். செல்வமும், இன்பமும் (அர்த்தமும், காமமும்) தர்மத்தோடு கூடியதாக இருத்தல் வேண்டும்.  

இதே கூற்றை கௌடில்யரின் அர்த்த சாஸ்த்திரத்தில் மட்டுமல்ல, பிற நூல்களிலும்   தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட வருமானத்தின் சிறப்பைக் கூறியுள்ளார். அவர் மட்டுமல்ல, ஆடம்ஸ்மித், சாமுவேல்சன், ஸ்காட், ஜெகாலன் போன்ற வெளிநாட்டு பொருளாதார அறிஞர்களும் ஒரே குரலில் ‘Ethics in Economics’ பற்றி இதையே கூறுகிறார்கள். 

நேர்மைக்குப் புறம்பான வியாபாரத்தால் தேசத்திற்கு வளர்ச்சி ஏற்படாது என்று ஏறக்குறைய அனைவரும் இப்போது பேசத் தொடங்கி உள்ளார்கள். இது வியாச மஹரிஷி விவரித்த கொள்கைக்கு நெருக்கமாக உள்ளது. தர்மமில்லாத செல்வம் (அர்த்தம்) வீண்.

அதே போல் தர்மமில்லாத கல்வி அரக்கர்களை உருவாக்குகிறது. சைபர் க்ரைம் குற்றவாளிகளை உருவாக்குகிறது. ஊழலுக்கு இடம் கொடுக்காத நீதிபதிகளின் மூலம் மட்டுமே தர்மம் நிலைநின்று, சமுதாய நலம் பெறும். தர்மத்தோடு கூடிய கல்வி,  தனிமனித வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி இரண்டுக்கும் வழி வகுக்கிறது.  

முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் உரையாற்றுகையில் ‘தேஹளீ தீப’ நியாயத்தை உதாரணம் காட்டி இவ்வாறு கூறினார், “ஆர்எஸ்எஸ் நடத்தும் பாலர் பிரிவில் பயிற்சி பெற்றவன் என்ற தகுதியோடு கூறுகிறேன், அங்கு சொல்லிக் கொடுக்கும் ஆடல், பாடல், உடற்பயிற்சி மூலம் சிறுவர்களின் உடல் வலிமை பெறுவது மட்டுமின்றி அறிவும் மலர்கிறது. மைதானத்திற்குச் சென்று கிரிக்கெட் விளையாடினால் கிடைக்கும் நன்மையை விட இது அதிகம். “ஏகாக்ரியாத்வர்த கரீ” என்பதற்கு இது புகழ்பெற்ற உதாரணம். Benifit Multifold” என்றார். 

2020 ல் நேர்ந்த ‘பூஹான் கரோனா’ தொற்று நோயை ஒழிப்பதற்கு இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து அளித்த வாக்சின் “கோவிஷீல்ட், கோவாக்சின்” என்ற மருந்துகள் நம் தேச மக்களின் உயிரைக் காத்ததோடு மட்டுமின்றி, பிற நட்பு நாடுகளுக்கும் இலவசமாக விநியோகித்து அந்தந்த தேச மக்களின் உயிரையும் காத்தன. அந்த நாடுகளின் சிநேகத்தையும், நல்லெண்ணத்தையும் சம்பாதித்துக் கொண்டது. “ஆரோக்ய தானம், சிநேகம்” இரண்டையும் அளித்த ராஜதந்திரம், ‘தேஹளீ தீப’ நியாயத்திற்கு உதாரணம். 

ஒரே அம்பில் இரண்டு இலக்குகளையல்ல, ஏழு இலக்குகளைக் குறிபார்த்துத் துளைத்த   பாரதப் படையின் வீரத்தை அண்மையில் பார்த்தோம். பயங்கரவாத தேசமான பாகிஸ்தான் பஹல்காமில் நடத்திய அரக்கச் செயலுக்கு எதிர்வினையாக நம் தேசப் படை நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ இந்த நியாயத்திற்கு எடுத்துக் காட்டாக நிற்கிறது. 

பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தின் ‘நகோடா’ மாவடத்தில் இருக்கும் ‘கைரான்’ மலைகளில் இருக்கும் சுரங்கங்களில் மறைந்து வைத்த அணு ஆயுதங்களை பாரதப் படை வீரியமிழக்கச் செய்தது. பாகிஸ்தானோடு கூட அந்த தேசத்திற்கு உறுதுணையாக இருந்து வந்த அமெரிக்காவுக்கும் இதன் மூலம் அடி விழுந்தது. ‘தேஹளீ தீப’ நியாயத்திற்கு இது ஒரு நிகழ்காலச் சான்று. அணு ஆயுதங்கள் மீதான அமெரிக்காவின் அணுகுமுறை உலகிற்குத் தெரிய வந்தது. பெரியண்ணனாக உலாவந்த அமெரிக்கா நாட்டின் மதிப்பு குறைந்தது. 

பெருமையோடு ஏற்றுவோம் தேசிய தீபங்களை: 

அண்மையில் ‘மன்கீபாத்’ நிகழ்ச்சியின் போது, காசியில் ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடிஜி, சுதேசி பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும்படி மக்களைக் கேட்டுக் கொண்டார். இந்தியாவின் 146 கோடி மக்கள் தொகை, உலகத்தின் பன்னிரண்டிலிருந்து பதினைந்து தேசங்களின் மக்கள் தொகைக்குச் சமம். அதனால் வெளிநாட்டு பொருட்கள் இந்தியாவிற்குள் வந்து குவிகின்றன. வெளிநாட்டுப் பொருட்களின் மேல் மோகம் கொள்வது நம் தேசத்திற்கு நன்மை பயக்காது. அதனால்தான் பிரதமர் மோடி அவர்கள், “வரப்போகும் பண்டிகைகளிளும், திருமணங்களிலும் தேவையான துணிகளை இந்தியாவில் நெய்தவற்றையே வாங்கி உடுத்துங்கள்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.  

இந்த சுதேசி முழக்கம் (Vocal for Local) ஒரு மந்திரம். இதனால் ‘ஆத்மநிர்பர்’ (சுயச்சார்பு) பாரதம், வளர்ச்சியடைந்த பாரதம் (விக்சித் பாரத்), தன்னிறைவு பாரதம் ஆகியவற்றை நோக்கி அடி எடுத்து வைப்பதில் வேகம் பிடிக்கும். சுதேசி மந்திரம் வீட்டிலும் வெளியிலும் வெளிச்சத்தை நிரப்பும் விளக்கு. இந்த மந்திரம் இந்திய மக்கள் பலரின் இல்லங்களில் விளக்கேற்றும். பல தொழிலாளிகளின் குடும்பங்களில் விளக்கு எரியும்.  சுதேசி பொருட்களை உற்சாகப்படுத்தினால் வேலை வாய்ப்போடு கூட திறமையும் வளரும். உற்பத்தியும் தரமும் வளர்ந்தால் ஏற்றுமதியும் உயரும். எந்த ஒரு தேசமும் நம் மீது கட்டுப்பாடோ தடையோ விதிக்க முடியாது. அவ்விதமாக சுதேசி தீபம் உலக நாடுகளுக்கும் வெளிச்சம் கொடுக்கும். 

டில்லியில் தீபம்:

இந்தியத் தலைநகருக்கு தீபாவளியில் இருந்து தான் டெல்லி என்ற பெயர் ஏற்பட்டது. பாரத தேசத்திற்கு ‘வாயிற்படி’ என்று பெயர். தற்போது நியூ டெல்லியில் இருந்து இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் தீபத்தைப் போன்றவர்கள். இந்த தீபங்கள் நம் தேசத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கே வெளிச்சத்தை நிரப்பி வருகின்றன. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories